FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, November 19, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச காதொலி கருவி

17.11.2015, விழுப்புரம்:
விழுப்புரத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச காதொலி கருவிகள் வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், காதொலி கருவிகள்
வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் லட்சுமி தலைமை தாங்கி, 5 பயனாளிகளுக்கு, காதொலி கருவி மற்றும் சோலார் சார்ஜர் பேட்டரி ஆகியவற்றை வழங்கினார்.

பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரத்து ஐநூறு ரூபாய் வீதம் மொத்தம், 7 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான கருவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஸ்ரீநாத், முட நீக்கியல் வல்லுனர் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment