FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Sunday, November 8, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டி

கிருஷ்ணகிரியில் வருகிற 18-ந் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது.

விளையாட்டு போட்டிகள்

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அலுவலரும், இளைஞர் நலன் அலுவலருமான சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் மற்றும் குழுப் போட்டிகளை வருகிற 18-ந் தேதி காலை 9 மணிக்கு நடத்துகின்றன.

அதன்படி கை, கால் ஊனமுற்றோர் பிரிவில் கால் ஊனமுற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல் போட்டியும், இரு கால்கள் ஊனமுற்றோருக்கு 100 மீட்டர் சக்கர நாற்காலி போட்டியும், கை ஊனமுற்றோருக்கு 100 மீட்டர் ஓட்டப் போட்டியும், குள்ளமானோருக்கு 50 மீட்டர் ஓட்டப் போட்டியும், இவ்வகையை சேர்ந்தவர்களுக்கு இறகுப்பந்து (ஒற்றையர் மற்றும் இரட்டையர்), மேசைப்பந்து ஆகிய குழு போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

போட்டிகள்

பார்வையற்றோர் பிரிவில் மிக குறைந்த பார்வையற்றோருக்கு 100 மீட்டர் ஓட்டம், நின்ற நிலை தாண்டுதல், மெதுபந்து எறிதல் ஆகிய போட்டிகளும், முற்றிலும் பார்வைற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டம் மற்றும் குண்டு எறிதல் போட்டியும், இவ்வகையை சேர்ந்தவர்களுக்கு குழுப் போட்டியாக கைப்பந்து போட்டியும் நடத்தப்படுகின்றன. மேலும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பிரிவில் 50 மீட்டர் ஓட்டம், மெதுபந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல் ஆகிய போட்டிகளும், ஐக்கு தன்மை நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டம் மற்றும் குண்டு எறிதல் போட்டியும், குழு போட்டியாக எறிபந்து போட்டியும் நடைபெறும். காது கேளாதோர் பிரிவினருக்கு 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளும், குழுப் போட்டியாக கபடி போட்டியும் நடத்தப்படுகிறது.

தடகள போட்டியில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கும், குழுப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பெறுபவர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதுடன், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment