FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Sunday, November 8, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டி

கிருஷ்ணகிரியில் வருகிற 18-ந் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது.

விளையாட்டு போட்டிகள்

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அலுவலரும், இளைஞர் நலன் அலுவலருமான சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் மற்றும் குழுப் போட்டிகளை வருகிற 18-ந் தேதி காலை 9 மணிக்கு நடத்துகின்றன.

அதன்படி கை, கால் ஊனமுற்றோர் பிரிவில் கால் ஊனமுற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல் போட்டியும், இரு கால்கள் ஊனமுற்றோருக்கு 100 மீட்டர் சக்கர நாற்காலி போட்டியும், கை ஊனமுற்றோருக்கு 100 மீட்டர் ஓட்டப் போட்டியும், குள்ளமானோருக்கு 50 மீட்டர் ஓட்டப் போட்டியும், இவ்வகையை சேர்ந்தவர்களுக்கு இறகுப்பந்து (ஒற்றையர் மற்றும் இரட்டையர்), மேசைப்பந்து ஆகிய குழு போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

போட்டிகள்

பார்வையற்றோர் பிரிவில் மிக குறைந்த பார்வையற்றோருக்கு 100 மீட்டர் ஓட்டம், நின்ற நிலை தாண்டுதல், மெதுபந்து எறிதல் ஆகிய போட்டிகளும், முற்றிலும் பார்வைற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டம் மற்றும் குண்டு எறிதல் போட்டியும், இவ்வகையை சேர்ந்தவர்களுக்கு குழுப் போட்டியாக கைப்பந்து போட்டியும் நடத்தப்படுகின்றன. மேலும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பிரிவில் 50 மீட்டர் ஓட்டம், மெதுபந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல் ஆகிய போட்டிகளும், ஐக்கு தன்மை நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டம் மற்றும் குண்டு எறிதல் போட்டியும், குழு போட்டியாக எறிபந்து போட்டியும் நடைபெறும். காது கேளாதோர் பிரிவினருக்கு 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளும், குழுப் போட்டியாக கபடி போட்டியும் நடத்தப்படுகிறது.

தடகள போட்டியில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கும், குழுப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பெறுபவர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதுடன், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment