FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Sunday, November 8, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டி

கிருஷ்ணகிரியில் வருகிற 18-ந் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது.

விளையாட்டு போட்டிகள்

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அலுவலரும், இளைஞர் நலன் அலுவலருமான சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் மற்றும் குழுப் போட்டிகளை வருகிற 18-ந் தேதி காலை 9 மணிக்கு நடத்துகின்றன.

அதன்படி கை, கால் ஊனமுற்றோர் பிரிவில் கால் ஊனமுற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல் போட்டியும், இரு கால்கள் ஊனமுற்றோருக்கு 100 மீட்டர் சக்கர நாற்காலி போட்டியும், கை ஊனமுற்றோருக்கு 100 மீட்டர் ஓட்டப் போட்டியும், குள்ளமானோருக்கு 50 மீட்டர் ஓட்டப் போட்டியும், இவ்வகையை சேர்ந்தவர்களுக்கு இறகுப்பந்து (ஒற்றையர் மற்றும் இரட்டையர்), மேசைப்பந்து ஆகிய குழு போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

போட்டிகள்

பார்வையற்றோர் பிரிவில் மிக குறைந்த பார்வையற்றோருக்கு 100 மீட்டர் ஓட்டம், நின்ற நிலை தாண்டுதல், மெதுபந்து எறிதல் ஆகிய போட்டிகளும், முற்றிலும் பார்வைற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டம் மற்றும் குண்டு எறிதல் போட்டியும், இவ்வகையை சேர்ந்தவர்களுக்கு குழுப் போட்டியாக கைப்பந்து போட்டியும் நடத்தப்படுகின்றன. மேலும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பிரிவில் 50 மீட்டர் ஓட்டம், மெதுபந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல் ஆகிய போட்டிகளும், ஐக்கு தன்மை நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டம் மற்றும் குண்டு எறிதல் போட்டியும், குழு போட்டியாக எறிபந்து போட்டியும் நடைபெறும். காது கேளாதோர் பிரிவினருக்கு 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளும், குழுப் போட்டியாக கபடி போட்டியும் நடத்தப்படுகிறது.

தடகள போட்டியில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கும், குழுப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பெறுபவர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதுடன், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment