FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Monday, November 30, 2015

ஏனைய விளையாட்டு செய்தி பிழைப்புக்காக மனைவியுடன் சேர்ந்து கச்சோரி விற்கும் கிரிக்கெட் வீரர்!


29.11.2015,மாற்றுத்திறனாளிகள் உலகக்கிண்ணப் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவிய இம்ரான் ஷேக் பிழைப்புக்காக கச்சோரி விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கான உலகக்கிண்ணப் போட்டி நடைபெற்றது. இதில் இம்ரான் ஷேக் அசத்தலாக செயல்பட்டார்.

ஆப்கானிஸ்தான் (70), நியூசிலாந்து (60) அணிகளுக்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசிய இம்ரான், பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் 62 ஓட்டங்கள் குவித்து அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றார்.

இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 40 ஓட்டங்கள் மற்றும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணி உலகக்கிண்ணம் வெல்ல உதவினார்.

இந்த நிலையில் தற்போது பிழைப்புக்கு வழியில்லாமல் தனது மனைவி ரோஜாவுடன் சேர்ந்து பழைய பாத்ரா சாலையில் தள்ளுவண்டியில் வைத்து கச்சோரி விற்று வருகிறார்.

கிரிக்கெட் மீது தீவிர ஆர்வம் உள்ள போதிலும் போதிய நிதி வசதி இல்லாததால் தொடர முடியவில்லை என்று குறிப்பிட்ட இம்ரான், தற்போது தனக்கு குஜராத் சுத்திகரிப்பு ஆலையில் தற்காலிக பணி கிடைத்திருப்பதாகவும், கூடுதல் வருமானத்திற்காக மனைவியுடன் சேர்ந்து இதை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment