FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, November 30, 2015

ஏனைய விளையாட்டு செய்தி பிழைப்புக்காக மனைவியுடன் சேர்ந்து கச்சோரி விற்கும் கிரிக்கெட் வீரர்!


29.11.2015,மாற்றுத்திறனாளிகள் உலகக்கிண்ணப் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவிய இம்ரான் ஷேக் பிழைப்புக்காக கச்சோரி விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கான உலகக்கிண்ணப் போட்டி நடைபெற்றது. இதில் இம்ரான் ஷேக் அசத்தலாக செயல்பட்டார்.

ஆப்கானிஸ்தான் (70), நியூசிலாந்து (60) அணிகளுக்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசிய இம்ரான், பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் 62 ஓட்டங்கள் குவித்து அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றார்.

இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 40 ஓட்டங்கள் மற்றும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணி உலகக்கிண்ணம் வெல்ல உதவினார்.

இந்த நிலையில் தற்போது பிழைப்புக்கு வழியில்லாமல் தனது மனைவி ரோஜாவுடன் சேர்ந்து பழைய பாத்ரா சாலையில் தள்ளுவண்டியில் வைத்து கச்சோரி விற்று வருகிறார்.

கிரிக்கெட் மீது தீவிர ஆர்வம் உள்ள போதிலும் போதிய நிதி வசதி இல்லாததால் தொடர முடியவில்லை என்று குறிப்பிட்ட இம்ரான், தற்போது தனக்கு குஜராத் சுத்திகரிப்பு ஆலையில் தற்காலிக பணி கிடைத்திருப்பதாகவும், கூடுதல் வருமானத்திற்காக மனைவியுடன் சேர்ந்து இதை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment