FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, November 30, 2015

ஏனைய விளையாட்டு செய்தி பிழைப்புக்காக மனைவியுடன் சேர்ந்து கச்சோரி விற்கும் கிரிக்கெட் வீரர்!


29.11.2015,மாற்றுத்திறனாளிகள் உலகக்கிண்ணப் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவிய இம்ரான் ஷேக் பிழைப்புக்காக கச்சோரி விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கான உலகக்கிண்ணப் போட்டி நடைபெற்றது. இதில் இம்ரான் ஷேக் அசத்தலாக செயல்பட்டார்.

ஆப்கானிஸ்தான் (70), நியூசிலாந்து (60) அணிகளுக்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசிய இம்ரான், பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் 62 ஓட்டங்கள் குவித்து அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றார்.

இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 40 ஓட்டங்கள் மற்றும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணி உலகக்கிண்ணம் வெல்ல உதவினார்.

இந்த நிலையில் தற்போது பிழைப்புக்கு வழியில்லாமல் தனது மனைவி ரோஜாவுடன் சேர்ந்து பழைய பாத்ரா சாலையில் தள்ளுவண்டியில் வைத்து கச்சோரி விற்று வருகிறார்.

கிரிக்கெட் மீது தீவிர ஆர்வம் உள்ள போதிலும் போதிய நிதி வசதி இல்லாததால் தொடர முடியவில்லை என்று குறிப்பிட்ட இம்ரான், தற்போது தனக்கு குஜராத் சுத்திகரிப்பு ஆலையில் தற்காலிக பணி கிடைத்திருப்பதாகவும், கூடுதல் வருமானத்திற்காக மனைவியுடன் சேர்ந்து இதை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment