FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, November 8, 2015

மாற்றுத்திறனாளி சான்று கொடுத்து அரசு வேலை மோசடி குறித்து சிபிஐ விசாரிக்க வழக்கு

07.11.2015, மதுரை, : மாற்றுத்திறனாளி என போலியாக சான்றிதழை சமர்ப்பித்து, அரசு பணிகளில் சேர்ந்தோர் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டம், நாரணம்மாள்புரத்தை சேர்ந்த சண்முகம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நெல்லை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் என போலியாக சான்றிதழ் சமர்ப்பித்து, பலர் அரசுப் பணிகளில் சேர்ந்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, நெல்லை அரசு மருத்துவமனை போலீசார் 108 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இதுபோன்ற முறைகேடு தமிழகம் முழுவதும் நடந்ததாக கூறப்படுகிறது. பலரும் போலியாக மாற்றுத்திறனாளி சான்று பெற்று தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியில் சேர்ந்துள்ளனர். எனவே, தமிழகம் முழுவதும் போலியாக மாற்றுத்திறனாளி சான்று பெற்று பணியில் சேர்ந்தவர்களை மருத்துவக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். அதில் முறைகேடு கண்டறியப்பட்டால், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்,’’ என கூறியிருந்தார்.

மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.அழகுமணி ஆஜரானார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர், ‘பொதுவாக குறிப்பிட்டு மனு செய்யப்பட்டுள்ளது. முறைகேடுகளின் விபரங்களை தெளிவாக குறிப்பிட்டு, கூடுதல் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டனர். விசாரணையை நவ. 17க்கு தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment