FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, November 8, 2015

மாற்றுத்திறனாளி சான்று கொடுத்து அரசு வேலை மோசடி குறித்து சிபிஐ விசாரிக்க வழக்கு

07.11.2015, மதுரை, : மாற்றுத்திறனாளி என போலியாக சான்றிதழை சமர்ப்பித்து, அரசு பணிகளில் சேர்ந்தோர் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டம், நாரணம்மாள்புரத்தை சேர்ந்த சண்முகம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நெல்லை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் என போலியாக சான்றிதழ் சமர்ப்பித்து, பலர் அரசுப் பணிகளில் சேர்ந்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, நெல்லை அரசு மருத்துவமனை போலீசார் 108 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இதுபோன்ற முறைகேடு தமிழகம் முழுவதும் நடந்ததாக கூறப்படுகிறது. பலரும் போலியாக மாற்றுத்திறனாளி சான்று பெற்று தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியில் சேர்ந்துள்ளனர். எனவே, தமிழகம் முழுவதும் போலியாக மாற்றுத்திறனாளி சான்று பெற்று பணியில் சேர்ந்தவர்களை மருத்துவக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். அதில் முறைகேடு கண்டறியப்பட்டால், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்,’’ என கூறியிருந்தார்.

மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.அழகுமணி ஆஜரானார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர், ‘பொதுவாக குறிப்பிட்டு மனு செய்யப்பட்டுள்ளது. முறைகேடுகளின் விபரங்களை தெளிவாக குறிப்பிட்டு, கூடுதல் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டனர். விசாரணையை நவ. 17க்கு தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment