FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Sunday, November 8, 2015

மாற்றுத்திறனாளி சான்று கொடுத்து அரசு வேலை மோசடி குறித்து சிபிஐ விசாரிக்க வழக்கு

07.11.2015, மதுரை, : மாற்றுத்திறனாளி என போலியாக சான்றிதழை சமர்ப்பித்து, அரசு பணிகளில் சேர்ந்தோர் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டம், நாரணம்மாள்புரத்தை சேர்ந்த சண்முகம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நெல்லை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் என போலியாக சான்றிதழ் சமர்ப்பித்து, பலர் அரசுப் பணிகளில் சேர்ந்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, நெல்லை அரசு மருத்துவமனை போலீசார் 108 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இதுபோன்ற முறைகேடு தமிழகம் முழுவதும் நடந்ததாக கூறப்படுகிறது. பலரும் போலியாக மாற்றுத்திறனாளி சான்று பெற்று தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியில் சேர்ந்துள்ளனர். எனவே, தமிழகம் முழுவதும் போலியாக மாற்றுத்திறனாளி சான்று பெற்று பணியில் சேர்ந்தவர்களை மருத்துவக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். அதில் முறைகேடு கண்டறியப்பட்டால், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்,’’ என கூறியிருந்தார்.

மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.அழகுமணி ஆஜரானார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர், ‘பொதுவாக குறிப்பிட்டு மனு செய்யப்பட்டுள்ளது. முறைகேடுகளின் விபரங்களை தெளிவாக குறிப்பிட்டு, கூடுதல் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டனர். விசாரணையை நவ. 17க்கு தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment