FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Sunday, November 8, 2015

மாற்றுத்திறனாளி சான்று கொடுத்து அரசு வேலை மோசடி குறித்து சிபிஐ விசாரிக்க வழக்கு

07.11.2015, மதுரை, : மாற்றுத்திறனாளி என போலியாக சான்றிதழை சமர்ப்பித்து, அரசு பணிகளில் சேர்ந்தோர் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டம், நாரணம்மாள்புரத்தை சேர்ந்த சண்முகம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நெல்லை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் என போலியாக சான்றிதழ் சமர்ப்பித்து, பலர் அரசுப் பணிகளில் சேர்ந்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, நெல்லை அரசு மருத்துவமனை போலீசார் 108 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இதுபோன்ற முறைகேடு தமிழகம் முழுவதும் நடந்ததாக கூறப்படுகிறது. பலரும் போலியாக மாற்றுத்திறனாளி சான்று பெற்று தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியில் சேர்ந்துள்ளனர். எனவே, தமிழகம் முழுவதும் போலியாக மாற்றுத்திறனாளி சான்று பெற்று பணியில் சேர்ந்தவர்களை மருத்துவக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். அதில் முறைகேடு கண்டறியப்பட்டால், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்,’’ என கூறியிருந்தார்.

மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.அழகுமணி ஆஜரானார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர், ‘பொதுவாக குறிப்பிட்டு மனு செய்யப்பட்டுள்ளது. முறைகேடுகளின் விபரங்களை தெளிவாக குறிப்பிட்டு, கூடுதல் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டனர். விசாரணையை நவ. 17க்கு தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment