FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, November 2, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

தேவகோட்டை, 02 November 2015
தேவகோட்டை சட்டப் பணிகள் குழுவின் சார்பில் மாற்றுத் திறனாளிக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் சங்கரபதி கோட்டையில் உள்ள நிர்மல் சிறப்பு பள்ளியில் நடைபெற்றது.

முகாமில் சட்டப்பணிக் குழுவின் தலைவர் மற்றும் சார்பு நீதிபதி கிருபாகரன் மதுரம் தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி கணேசன், குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குற்றவியல்நீதித்துறை நடுவர் விஜயகுமார் பேசுகையில், மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களைப் பெறுவதில் சிக்கல் ஏதும் ஏற்பட்டால், சட்டப்பணிகள் குழு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்த்துவைக்கப்டும் என்றார்.

சட்டப் பணிகள் குழுவின் நோக்கங்கள் பற்றிய கையேடுகளை அவர் வழங்கினார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக கண்காணிப்பாளர் ஆறுமுகம், மத்திய, மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்திவரும் நல திட்டங்கள் பற்றியும், அதனை எப்படி பெறுவது என்பது குறித்து விளக்கமளித்து அதற்கான கையேடுகளை வழங்கினார். குழுவின் நிர்வாக உதவியாளர் முரளிதரன் நிகழ்ச்சிகளை தொகுத்தார்.

நிகழ்ச்சியில், பள்ளியின் தாளாளர் சாந்தி வரேவற்றார். வழக்குரைஞர்கள் ராமு,கணேசன் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment