FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, November 19, 2015

கரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி

கரூர், 18 November 2015
கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தொடங்கி வைத்தார்.

கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற போட்டிக்கு தலைமை வகித்து, போட்டிகளை தொடங்கிவைத்து அவர் கூறியது:

இன்று நடைபெறும் விளையாட்டுப் போட்டியில் கை, கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் காது கேளாதோர் என சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 50 மீ., 100 மீ., 200 மீ., 400 மீ ஓட்டப்பந்தயங்கள், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், பந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்படுகிறது.

இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட உள்ளன. மாவட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் விளையாட்டு போட்டியில் மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் பங்கேற்று தங்கள் திறமையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மு. அருணா, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை மண்டல முதுநிலை மேலாளர் கீதாஞ்சலி ரத்னமாலா, மாவட்ட விளையாட்டு அலுவலர் புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment