FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, November 19, 2015

கரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி

கரூர், 18 November 2015
கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தொடங்கி வைத்தார்.

கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற போட்டிக்கு தலைமை வகித்து, போட்டிகளை தொடங்கிவைத்து அவர் கூறியது:

இன்று நடைபெறும் விளையாட்டுப் போட்டியில் கை, கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் காது கேளாதோர் என சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 50 மீ., 100 மீ., 200 மீ., 400 மீ ஓட்டப்பந்தயங்கள், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், பந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்படுகிறது.

இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட உள்ளன. மாவட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் விளையாட்டு போட்டியில் மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் பங்கேற்று தங்கள் திறமையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மு. அருணா, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை மண்டல முதுநிலை மேலாளர் கீதாஞ்சலி ரத்னமாலா, மாவட்ட விளையாட்டு அலுவலர் புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment