FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Thursday, November 19, 2015

அரசு தேர்வில் 1% இடஒதுக்கீடு அமல்படுத்த கவன ஈர்ப்பு பேரணி

18.11.2015, திருச்சி, : 
 திருச்சியில் நடந்த தேசிய காது கேளாதோர் தின கவன ஈர்ப்பு விழிப்புணர்வு பேரணியில் அரசுத்துறை தேர்வில் 1 சதவீத இடஒதுக்கீட்டினை அமல்படுத்த வலியுத்தபட்டது. திருச்சியில் மாவட்ட காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில் தேசிய காது கேளாதோர் தின கவன ஈர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு தலைமை வகித்தார். துணைத்தலைவர் கோவிந்தகிருஷ்ணன், செயலாளர் நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள காதுகேளாதோர் சிறப்பு பள்ளியை உயர்நிலைப்பள்ளியிலிருந்து மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுத் துறைத் தேர்வில் 4வது மற்றும் 4வது குரூப் தர நிலையில் அரசு உத்தரவின்படி 1சதவீத இடஒதுக்கீட்டினை அமல்படுத்த வேண்டும். காதுகேளாதோர் சிலருக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. அதை நிலுவையுடன் சேர்த்து உடனடியாக வழங்க வேண்டும். குறைதீர் மனுநாளில் வாரம் ஒருமுறை திங்கள்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறைதீர் கூட்டத்தில் காதுகேளாதோர் குறைகளை கேட்டு செய்தியை பரிமாற்றம் செய்ய ஒரு நபர் கட்டாயம் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மொபைலில் எஸ்எம்எஸ்க்கு சிறப்பு சலுகையில் அனைத்து நாட்களிலும் காதுகேளாதோருக்கு வழங்க வேண்டும், பண்டிகை, சிறப்பு நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வழியுறுத்தப்பட்டது. கூட்டத்திர் நிர்வாகிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக பொருளாளர் புஷப்நாதன் வரவேற்றார். செந்தில்வடிவேல் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment