FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, November 19, 2015

அரசு தேர்வில் 1% இடஒதுக்கீடு அமல்படுத்த கவன ஈர்ப்பு பேரணி

18.11.2015, திருச்சி, : 
 திருச்சியில் நடந்த தேசிய காது கேளாதோர் தின கவன ஈர்ப்பு விழிப்புணர்வு பேரணியில் அரசுத்துறை தேர்வில் 1 சதவீத இடஒதுக்கீட்டினை அமல்படுத்த வலியுத்தபட்டது. திருச்சியில் மாவட்ட காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில் தேசிய காது கேளாதோர் தின கவன ஈர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு தலைமை வகித்தார். துணைத்தலைவர் கோவிந்தகிருஷ்ணன், செயலாளர் நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள காதுகேளாதோர் சிறப்பு பள்ளியை உயர்நிலைப்பள்ளியிலிருந்து மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுத் துறைத் தேர்வில் 4வது மற்றும் 4வது குரூப் தர நிலையில் அரசு உத்தரவின்படி 1சதவீத இடஒதுக்கீட்டினை அமல்படுத்த வேண்டும். காதுகேளாதோர் சிலருக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. அதை நிலுவையுடன் சேர்த்து உடனடியாக வழங்க வேண்டும். குறைதீர் மனுநாளில் வாரம் ஒருமுறை திங்கள்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறைதீர் கூட்டத்தில் காதுகேளாதோர் குறைகளை கேட்டு செய்தியை பரிமாற்றம் செய்ய ஒரு நபர் கட்டாயம் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மொபைலில் எஸ்எம்எஸ்க்கு சிறப்பு சலுகையில் அனைத்து நாட்களிலும் காதுகேளாதோருக்கு வழங்க வேண்டும், பண்டிகை, சிறப்பு நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வழியுறுத்தப்பட்டது. கூட்டத்திர் நிர்வாகிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக பொருளாளர் புஷப்நாதன் வரவேற்றார். செந்தில்வடிவேல் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment