FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Tuesday, November 10, 2015

திருமண உதவித்தொகை கிடைக்காத மாற்றுத் திறனாளிகள்

கடலூர், 10 November 2015
கடலூர் மாவட்டத்தில் திருமண உதவித்தொகை கிடைக்காமல் மாற்றுத் திறனாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாதாந்திர உதவித்தொகை, காதொலி கருவிகள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

மேலும், பல்வேறு தொழில் பயிற்சிகள், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ஆரம்ப கால பயிற்சி, காதுகேளாத குழந்தைகள், பார்வைத் திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான ஆரம்ப கால பயிற்சி உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறது.

மேலும், சிறந்த தொண்டு நிறுவனங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு விருதுகள் வழங்கி வருகிறது.

இதில், மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்துகொள்ளும் சாதாரண நபருக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் 4 கிராம் தங்கம் வழங்குகிறது.

பட்டம், பட்டய படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் 4 கிராம் தங்கமும் வழங்குகிறது. இதில், பாதித்தொகை ரொக்கமாகவும் மீதித் தொகை 5 ஆண்டுகளுக்குப் பின்னர் எடுக்கும் வகையில் பத்திரமாகவும் வழங்கப்படும்.

ஆனால், இந்தத் திருமண உதவித்தொகை கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என்ற புகார் உள்ளது.

மாவட்டத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 60 ஆயிரம் பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளது தெரிய வந்துள்ளது. இதில், 44 ஆயிரம் பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்து கொள்வது தொடர்பாக சமூகத்தில் போதுமான விழிப்புணர்வு இல்லாத நிலையில் அவர்களுக்கான திருமண உதவித்தொகையும் சரியாக கிடைக்கவில்லை என்கின்றனர் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தினர்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் 69 மாற்றுத் திறனாளிகள் திருமணம் முடிந்து அதற்கான உதவித்தொகைக்கு விண்ணப்பித்து காத்திருக்கிறார்கள்.

இவர்களில் 38 பேர் பட்டதாரிகளாவர். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் இத்தொகையை விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் நலச் சங்கச் செயலர் பொன்.சண்முகம்.

இதுகுறித்து, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கையில், 69 பேருக்கும் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறையுடன் இவர்களை இணைத்து வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எனவே, விரைவில் உதவித்தொகை கிடைத்திட வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment