FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Tuesday, November 10, 2015

திருமண உதவித்தொகை கிடைக்காத மாற்றுத் திறனாளிகள்

கடலூர், 10 November 2015
கடலூர் மாவட்டத்தில் திருமண உதவித்தொகை கிடைக்காமல் மாற்றுத் திறனாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாதாந்திர உதவித்தொகை, காதொலி கருவிகள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

மேலும், பல்வேறு தொழில் பயிற்சிகள், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ஆரம்ப கால பயிற்சி, காதுகேளாத குழந்தைகள், பார்வைத் திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான ஆரம்ப கால பயிற்சி உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறது.

மேலும், சிறந்த தொண்டு நிறுவனங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு விருதுகள் வழங்கி வருகிறது.

இதில், மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்துகொள்ளும் சாதாரண நபருக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் 4 கிராம் தங்கம் வழங்குகிறது.

பட்டம், பட்டய படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் 4 கிராம் தங்கமும் வழங்குகிறது. இதில், பாதித்தொகை ரொக்கமாகவும் மீதித் தொகை 5 ஆண்டுகளுக்குப் பின்னர் எடுக்கும் வகையில் பத்திரமாகவும் வழங்கப்படும்.

ஆனால், இந்தத் திருமண உதவித்தொகை கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என்ற புகார் உள்ளது.

மாவட்டத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 60 ஆயிரம் பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளது தெரிய வந்துள்ளது. இதில், 44 ஆயிரம் பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்து கொள்வது தொடர்பாக சமூகத்தில் போதுமான விழிப்புணர்வு இல்லாத நிலையில் அவர்களுக்கான திருமண உதவித்தொகையும் சரியாக கிடைக்கவில்லை என்கின்றனர் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தினர்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் 69 மாற்றுத் திறனாளிகள் திருமணம் முடிந்து அதற்கான உதவித்தொகைக்கு விண்ணப்பித்து காத்திருக்கிறார்கள்.

இவர்களில் 38 பேர் பட்டதாரிகளாவர். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் இத்தொகையை விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் நலச் சங்கச் செயலர் பொன்.சண்முகம்.

இதுகுறித்து, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கையில், 69 பேருக்கும் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறையுடன் இவர்களை இணைத்து வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எனவே, விரைவில் உதவித்தொகை கிடைத்திட வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment