FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, November 10, 2015

திருமண உதவித்தொகை கிடைக்காத மாற்றுத் திறனாளிகள்

கடலூர், 10 November 2015
கடலூர் மாவட்டத்தில் திருமண உதவித்தொகை கிடைக்காமல் மாற்றுத் திறனாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாதாந்திர உதவித்தொகை, காதொலி கருவிகள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

மேலும், பல்வேறு தொழில் பயிற்சிகள், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ஆரம்ப கால பயிற்சி, காதுகேளாத குழந்தைகள், பார்வைத் திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான ஆரம்ப கால பயிற்சி உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறது.

மேலும், சிறந்த தொண்டு நிறுவனங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு விருதுகள் வழங்கி வருகிறது.

இதில், மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்துகொள்ளும் சாதாரண நபருக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் 4 கிராம் தங்கம் வழங்குகிறது.

பட்டம், பட்டய படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் 4 கிராம் தங்கமும் வழங்குகிறது. இதில், பாதித்தொகை ரொக்கமாகவும் மீதித் தொகை 5 ஆண்டுகளுக்குப் பின்னர் எடுக்கும் வகையில் பத்திரமாகவும் வழங்கப்படும்.

ஆனால், இந்தத் திருமண உதவித்தொகை கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என்ற புகார் உள்ளது.

மாவட்டத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 60 ஆயிரம் பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளது தெரிய வந்துள்ளது. இதில், 44 ஆயிரம் பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்து கொள்வது தொடர்பாக சமூகத்தில் போதுமான விழிப்புணர்வு இல்லாத நிலையில் அவர்களுக்கான திருமண உதவித்தொகையும் சரியாக கிடைக்கவில்லை என்கின்றனர் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தினர்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் 69 மாற்றுத் திறனாளிகள் திருமணம் முடிந்து அதற்கான உதவித்தொகைக்கு விண்ணப்பித்து காத்திருக்கிறார்கள்.

இவர்களில் 38 பேர் பட்டதாரிகளாவர். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் இத்தொகையை விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் நலச் சங்கச் செயலர் பொன்.சண்முகம்.

இதுகுறித்து, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கையில், 69 பேருக்கும் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறையுடன் இவர்களை இணைத்து வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எனவே, விரைவில் உதவித்தொகை கிடைத்திட வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment