FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Monday, November 30, 2015

இந்தியா முழுவதும் மாற்று திறனாளிகளுக்கு ஒரே அடையாள அட்டை


கன்னியாகுமரி: கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா வளாகத்தில் அனைத்து வித மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பான சக்‌ஷம் சார்பில் 8வது தேசிய அளவிலான மாநாடு நேற்று முன்தினம் (27ம் தேதி) தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று சமூக நீதி ஆதாரம் அளித்தல் துறை அமைச்சர் தல்வர்சந்த் கெலாட் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது: வெளிநாட்டில் நடந்த விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு மாற்று திறனாளிகள் 173 பேர் பதக்கம் பெற்றுள்ளது பாராட்டுக்குரியது. இந்தியாவில் 5 இடங்களில் மாற்று திறனாளிகளுக்காக விளையாட்டு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3ம்தேதி பிரதமர் மோடி சுகம்யா பாரத் யோசனா எனும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். மாற்று திறனாளிகளுக்கான இத்திட்டம் 50 நகரங்களில் தொடங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் 100 கட்டிடங்கள் கட்டப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ வசதி உள்பட அனைத்து வசதிகளும் கிடைக்கும்.

85 சதவீத பாதிப்பு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது அரசு சார்பில் மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் வேறு மாநிலங்களுக்கு செல்லும் போது தங்களிடம் இருக்கும் மாற்றுத்திறனாளி அட்டையை பயன்படுத்தி பல்வேறு பலன்கள் பெற முடியாமல் உள்ளது. இதை கருத்தில் கொண்டு இந்தியாமுழுவதும் ஒரே வடிவிலான அடையாள அட்டை திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். கை, கால் இழந்த மாற்று திறனாளிகளுக்கு நவீன இயந்திரம் வழங்க ஜெர்மனி நாட்டு அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். இந்த மாநாட்டில் இந்தியா முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment