FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, November 30, 2015

இந்தியா முழுவதும் மாற்று திறனாளிகளுக்கு ஒரே அடையாள அட்டை


கன்னியாகுமரி: கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா வளாகத்தில் அனைத்து வித மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பான சக்‌ஷம் சார்பில் 8வது தேசிய அளவிலான மாநாடு நேற்று முன்தினம் (27ம் தேதி) தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று சமூக நீதி ஆதாரம் அளித்தல் துறை அமைச்சர் தல்வர்சந்த் கெலாட் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது: வெளிநாட்டில் நடந்த விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு மாற்று திறனாளிகள் 173 பேர் பதக்கம் பெற்றுள்ளது பாராட்டுக்குரியது. இந்தியாவில் 5 இடங்களில் மாற்று திறனாளிகளுக்காக விளையாட்டு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3ம்தேதி பிரதமர் மோடி சுகம்யா பாரத் யோசனா எனும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். மாற்று திறனாளிகளுக்கான இத்திட்டம் 50 நகரங்களில் தொடங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் 100 கட்டிடங்கள் கட்டப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ வசதி உள்பட அனைத்து வசதிகளும் கிடைக்கும்.

85 சதவீத பாதிப்பு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது அரசு சார்பில் மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் வேறு மாநிலங்களுக்கு செல்லும் போது தங்களிடம் இருக்கும் மாற்றுத்திறனாளி அட்டையை பயன்படுத்தி பல்வேறு பலன்கள் பெற முடியாமல் உள்ளது. இதை கருத்தில் கொண்டு இந்தியாமுழுவதும் ஒரே வடிவிலான அடையாள அட்டை திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். கை, கால் இழந்த மாற்று திறனாளிகளுக்கு நவீன இயந்திரம் வழங்க ஜெர்மனி நாட்டு அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். இந்த மாநாட்டில் இந்தியா முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment