FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, November 30, 2015

இந்தியா முழுவதும் மாற்று திறனாளிகளுக்கு ஒரே அடையாள அட்டை


கன்னியாகுமரி: கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா வளாகத்தில் அனைத்து வித மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பான சக்‌ஷம் சார்பில் 8வது தேசிய அளவிலான மாநாடு நேற்று முன்தினம் (27ம் தேதி) தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று சமூக நீதி ஆதாரம் அளித்தல் துறை அமைச்சர் தல்வர்சந்த் கெலாட் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது: வெளிநாட்டில் நடந்த விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு மாற்று திறனாளிகள் 173 பேர் பதக்கம் பெற்றுள்ளது பாராட்டுக்குரியது. இந்தியாவில் 5 இடங்களில் மாற்று திறனாளிகளுக்காக விளையாட்டு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3ம்தேதி பிரதமர் மோடி சுகம்யா பாரத் யோசனா எனும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். மாற்று திறனாளிகளுக்கான இத்திட்டம் 50 நகரங்களில் தொடங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் 100 கட்டிடங்கள் கட்டப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ வசதி உள்பட அனைத்து வசதிகளும் கிடைக்கும்.

85 சதவீத பாதிப்பு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது அரசு சார்பில் மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் வேறு மாநிலங்களுக்கு செல்லும் போது தங்களிடம் இருக்கும் மாற்றுத்திறனாளி அட்டையை பயன்படுத்தி பல்வேறு பலன்கள் பெற முடியாமல் உள்ளது. இதை கருத்தில் கொண்டு இந்தியாமுழுவதும் ஒரே வடிவிலான அடையாள அட்டை திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். கை, கால் இழந்த மாற்று திறனாளிகளுக்கு நவீன இயந்திரம் வழங்க ஜெர்மனி நாட்டு அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். இந்த மாநாட்டில் இந்தியா முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment