FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Monday, November 30, 2015

இந்தியா முழுவதும் மாற்று திறனாளிகளுக்கு ஒரே அடையாள அட்டை


கன்னியாகுமரி: கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா வளாகத்தில் அனைத்து வித மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பான சக்‌ஷம் சார்பில் 8வது தேசிய அளவிலான மாநாடு நேற்று முன்தினம் (27ம் தேதி) தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று சமூக நீதி ஆதாரம் அளித்தல் துறை அமைச்சர் தல்வர்சந்த் கெலாட் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது: வெளிநாட்டில் நடந்த விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு மாற்று திறனாளிகள் 173 பேர் பதக்கம் பெற்றுள்ளது பாராட்டுக்குரியது. இந்தியாவில் 5 இடங்களில் மாற்று திறனாளிகளுக்காக விளையாட்டு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3ம்தேதி பிரதமர் மோடி சுகம்யா பாரத் யோசனா எனும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். மாற்று திறனாளிகளுக்கான இத்திட்டம் 50 நகரங்களில் தொடங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் 100 கட்டிடங்கள் கட்டப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ வசதி உள்பட அனைத்து வசதிகளும் கிடைக்கும்.

85 சதவீத பாதிப்பு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது அரசு சார்பில் மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் வேறு மாநிலங்களுக்கு செல்லும் போது தங்களிடம் இருக்கும் மாற்றுத்திறனாளி அட்டையை பயன்படுத்தி பல்வேறு பலன்கள் பெற முடியாமல் உள்ளது. இதை கருத்தில் கொண்டு இந்தியாமுழுவதும் ஒரே வடிவிலான அடையாள அட்டை திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். கை, கால் இழந்த மாற்று திறனாளிகளுக்கு நவீன இயந்திரம் வழங்க ஜெர்மனி நாட்டு அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். இந்த மாநாட்டில் இந்தியா முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment