FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, November 28, 2015

மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டி

திருநெல்வேலி, 28 November 2015
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருநெல்வேலி பிரிவு சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் பாளையங்கோட்டையில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியை மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் தொடங்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மனோகர் முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பிராங்க்பால் ஜெயசீலன் வரவேற்றார்.

நீளம் தாண்டுதல், 100 மீ., 200 மீ., 400 மீ., 800 மீ. ஓட்டப்போட்டிகள் நடைபெற்றன. தொடர்ஓட்டம், வீல்சேர் ஓட்டம் உள்ளிட்ட பிரத்யேக போட்டிகளும் நடைபெற்றன. திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.

No comments:

Post a Comment