FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, November 21, 2015

கீதாவின் உண்மையான பெற்றோர் தொடர்பில் குழப்ப நிலை

20.11.2015, சிறுமியாக இருந்தபோது இந்தியாவிலிருந்து தவறுதலாக பாகிஸ்தானுக்குச் சென்று பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா திரும்பிய காது கேளாத, வாய் பேச முடியாத இளம்பெண் கீதா, பிஹாரைச் சேர்ந்த மஹதோ குடும்பத்தினரின் மகள் அல்ல என டிஎன்ஏ பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது.

வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் இதுதொடர்பாகக் கூறும் போது, “வரும் 23-ம் தேதி, இந்தூர் செல்லும் சுஷ்மா ஸ்வராஜ் கீதாவைச் சந்தித்து நலம் விசாரிப்பார்.

டிஎன்ஏ பரிசோதனை முடிவு களில், பிஹாரைச் சேர்ந்த மஹதோ குடும்பத்தினர், கீதாவின் பெற்றோர் அல்ல எனத் தெரிய வந்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவ மனையில் மேற்கொள்ளப்பட்ட இந்த பரிசோதனையின் முடிவுகள் மஹதோ குடும்பத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன” என்றார்.

முன்னதாக, மஹதோ குடும் பத்தினரின் புகைப்படத்தைப் பார்த்த கீதா, அவர்கள் தனது பெற் றோராக இருக்கலாம் என அடை யாளம் காட்டினார். ஆனால், இந்தியா வந்த பிறகு, அவர் அதை மறுத்தார்.

தற்போது கீதா இந்தூரில் உள்ள காதுகோளாத, வாய் பேச முடியாதவர்களுக்கான மறு வாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment