FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Tuesday, November 3, 2015

போலி சான்றிதழ்கள் விவகாரம் : மேலும் 407 அரசு ஊழியர்கள் அதிரடி சஸ்பெண்ட்?

புளியங்குடி : மாற்றுத் திறனாளிகள் என போலி சான்றிதழ் கொடுத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள நகராட்சி, ேபரூராட்சிகளில் பணியில் சேர்ந்த மேலும் 407 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட உள்ளனர். தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்களில் கடந்த 2011ல் அலுவலக உதவியாளர் முதல் பணி ஆய்வாளர் வரை ஏராளமானோர் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களில் பலர் போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், இனச்சுழற்சி ஆகியவற்றில் முறைகேடு செய்து பணியில் சேர்ந்ததாக புகார் வெளியானது.
நெல்லை மாவட்டத்திலும் 500க்கும் மேற்பட்டோர் போலி சான்றிதழ் கொடுத்து உள்ளாட்சி அமைப்புகளில் வேலையில் சேர்ந்தது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவக்குழு பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், மாற்றுத் திறனாளிக்கான தகுதி இல்லாமல் பணி நியமனம் செய்யப்பட்ட 108 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவுமூப்பு, முன்னுரிமை அடிப்படையில் நகராட்சி, பேரூராட்சிகளில் 500க்கும் மேற்பட்டவர்கள் வேலைக்கு சேர்ந்தது தெரியவந்தது. இதையடுத்து நெல்லை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் உள்ளாட்சி பணிக்கான நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட சுமார் 2 ஆயிரம் பேரின் சான்றிதழ்கள், பதிவுமூப்பு, முன்னுரிமை, வேலை வாய்ப்பு அலுவலக அட்டை ஆகியவற்றை சோதனை செய்தனர். இதில் 515 பேர் முறைகேடாக வேலைக்கு சேர்ந்தது தெரியவந்தது. இவர்கள் ஆளுங்கட்சியினர் மற்றும் அதிகாரிகளுக்கு தலா ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை என கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததும் தெரியவந்துள்ளது. இப்படி முறைகேடாக பணியில் சேர்ந்த மேலும் 407 பேர் விரைவில் சஸ்பெண்ட் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது நெல்லை மாவட்ட அரசு ஊழிர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment