FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Thursday, November 19, 2015

ஆடைகள் முதல் மரப்பொருள்கள் வரை



18.11.2015, ஆடைகள், மண்பாண்டங்கள், மரப்பொருள்கள், கண்ணாடி போன்றவற்றை வண்ண ஓவியங்கள் மூலம் அழுகுப்படுத்தத் தெரிந்தால், அதன் மூலம் நம்முடைய பொருளாதாரத்தையும் உயர்த்திக் கொள்ள முடியும் என்கிறார் கோவையைச் சேர்ந்த வண்ண ஓவியங்கள் வரைவதற்கு கற்றுக் கொடுக்கும் தொழில்நுட்ப வல்லுநர் கு.வசந்தா.

காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வந்த அவர், ஒரே நாளில் ஓவியம் வரைவதற்கும், வண்ணம் தீட்டுவதற்கும் கற்றுக்கொடுத்தார். ஓவியம் வரைதல் குறித்தும், அதன் மூலம் கிடைக்க கூடிய வேலைவாய்ப்புகள் குறித்தும் அவரிடம் கேட்டபோது:

""மூலப் பொருள்களைவிட, அதனை மதிப்பு கூட்டப்பட்டப் பொருளாக மாற்றும்போது அதிக லாபம் பெற முடியும். அதேபோல், ரூ.200க்கு பெறுமான சேலையில், வண்ண ஓவியங்களை வரையும் போது அதன் மதிப்பை ரூ.700 முதல் ரூ.900 வரை உயர்த்தலாம்.

சேலை மட்டுமின்றி, குழந்தைகளுக்கான ஆடைகள், டி-சர்ட், மெத்தை விரிப்பு, தலையணை உரை ஆகியவற்றிலும், ஓவியம் தீட்ட முடியும். ஏற்கெனவே பயன்படுத்திய சேலைகள் பழமையாகத் தெரிந்தால், அந்த சேலைகளில் ஓவியங்களை வரைந்து புதுப்பொலிவுடன் கூடுதல் நாள்களுக்கு பயன்படுத்த முடியும்.

அக்ரிலிக், பேர்ல், பேர்ல் மெட்டாலிக், ஸ்பார்க்லிங் பேர்ல், 3டி கிளட்டர், 3டி பேர்ல் என 6 வகையான வண்ணங்களைப் பயன்படுத்தி ஓவியம் தீட்ட முடியும். கூடுதலாக அலங்கரிக்க வேண்டுமெனில், கற்கள், கண்ணாடிகள் பதித்துக் கொள்ளலாம். சேலைகளின் பயன்பாடு குறைந்தாலும், சல்வார், சுடிதார் போன்ற நவீன ஆடைகளிலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும்.

எம்ராய்டரி டிசைன்ஸ் போன்ற தோற்றங்களை ஓவியம் மூலம் ஏற்படுத்த முடியும். வடிவமைக்கப்பட்ட ஆடைகளில் எம்ராய்டரி டிசைன்ஸ் வடிவமைப்பது கடினம். ஆனால், எம்ராய்ட்ரி ஓவியங்களை, ஆயத்த ஆடைகளிலும் வரைய முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

ஓவியம் வரையத் தெரிந்தவர்கள் மட்டுமே இந்தத் துறையில் சாதிக்க முடியும் என அவநம்பிக்கை கொள்ள வேண்டாம். ஓவியக் கலை தெரியாதவர்களுக்கு, கார்பன் மூலம் ஓவியம் வரைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. 16 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருந்தால், வண்ண ஓவியங்கள் தீட்டும் பயிற்சியை எளிதாக பெற முடியும். மாற்றுத் திறனாளிகள் போன்றவர்கள், தையல் மிஷன்களை இயக்குவது கடினம். ஆனால், ஓவியம் வரைந்து, வண்ணம் தீட்டுவது என்பது எளிமையானது.

துணிகளில் ஓவியம் வரைவதற்கு தரமான மைகளைப் பயன்படுத்தும்போது, அந்தத் துணி கிழியும் வரை ஓவியமும் அழியாது. துணிகளைப் போல், மரப் பொருள்கள், மண் பாண்டங்கள் மற்றும் கண்ணாடி ஆகியவற்றிலும் ஓவியம் வரையலாம்.

ரூ.50க்கு கிடைக்கும் மண் தொட்டியில் ஓவியம் தீட்டி, அலங்காரப் பொருளாக மாற்றும் போது அதன் மதிப்பு ரூ.500க்கு மேற்பட்டதாக உயரும். வண்ண ஓவியங்கள் வரைவதன் மூலம் ஆண், பெண் என இருபாலரும் நல்ல வேலைவாய்ப்பினைப் பெற முடியும்'' என்கிறார் வசந்தா.

No comments:

Post a Comment