FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, November 19, 2015

ஆடைகள் முதல் மரப்பொருள்கள் வரை



18.11.2015, ஆடைகள், மண்பாண்டங்கள், மரப்பொருள்கள், கண்ணாடி போன்றவற்றை வண்ண ஓவியங்கள் மூலம் அழுகுப்படுத்தத் தெரிந்தால், அதன் மூலம் நம்முடைய பொருளாதாரத்தையும் உயர்த்திக் கொள்ள முடியும் என்கிறார் கோவையைச் சேர்ந்த வண்ண ஓவியங்கள் வரைவதற்கு கற்றுக் கொடுக்கும் தொழில்நுட்ப வல்லுநர் கு.வசந்தா.

காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வந்த அவர், ஒரே நாளில் ஓவியம் வரைவதற்கும், வண்ணம் தீட்டுவதற்கும் கற்றுக்கொடுத்தார். ஓவியம் வரைதல் குறித்தும், அதன் மூலம் கிடைக்க கூடிய வேலைவாய்ப்புகள் குறித்தும் அவரிடம் கேட்டபோது:

""மூலப் பொருள்களைவிட, அதனை மதிப்பு கூட்டப்பட்டப் பொருளாக மாற்றும்போது அதிக லாபம் பெற முடியும். அதேபோல், ரூ.200க்கு பெறுமான சேலையில், வண்ண ஓவியங்களை வரையும் போது அதன் மதிப்பை ரூ.700 முதல் ரூ.900 வரை உயர்த்தலாம்.

சேலை மட்டுமின்றி, குழந்தைகளுக்கான ஆடைகள், டி-சர்ட், மெத்தை விரிப்பு, தலையணை உரை ஆகியவற்றிலும், ஓவியம் தீட்ட முடியும். ஏற்கெனவே பயன்படுத்திய சேலைகள் பழமையாகத் தெரிந்தால், அந்த சேலைகளில் ஓவியங்களை வரைந்து புதுப்பொலிவுடன் கூடுதல் நாள்களுக்கு பயன்படுத்த முடியும்.

அக்ரிலிக், பேர்ல், பேர்ல் மெட்டாலிக், ஸ்பார்க்லிங் பேர்ல், 3டி கிளட்டர், 3டி பேர்ல் என 6 வகையான வண்ணங்களைப் பயன்படுத்தி ஓவியம் தீட்ட முடியும். கூடுதலாக அலங்கரிக்க வேண்டுமெனில், கற்கள், கண்ணாடிகள் பதித்துக் கொள்ளலாம். சேலைகளின் பயன்பாடு குறைந்தாலும், சல்வார், சுடிதார் போன்ற நவீன ஆடைகளிலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும்.

எம்ராய்டரி டிசைன்ஸ் போன்ற தோற்றங்களை ஓவியம் மூலம் ஏற்படுத்த முடியும். வடிவமைக்கப்பட்ட ஆடைகளில் எம்ராய்டரி டிசைன்ஸ் வடிவமைப்பது கடினம். ஆனால், எம்ராய்ட்ரி ஓவியங்களை, ஆயத்த ஆடைகளிலும் வரைய முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

ஓவியம் வரையத் தெரிந்தவர்கள் மட்டுமே இந்தத் துறையில் சாதிக்க முடியும் என அவநம்பிக்கை கொள்ள வேண்டாம். ஓவியக் கலை தெரியாதவர்களுக்கு, கார்பன் மூலம் ஓவியம் வரைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. 16 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருந்தால், வண்ண ஓவியங்கள் தீட்டும் பயிற்சியை எளிதாக பெற முடியும். மாற்றுத் திறனாளிகள் போன்றவர்கள், தையல் மிஷன்களை இயக்குவது கடினம். ஆனால், ஓவியம் வரைந்து, வண்ணம் தீட்டுவது என்பது எளிமையானது.

துணிகளில் ஓவியம் வரைவதற்கு தரமான மைகளைப் பயன்படுத்தும்போது, அந்தத் துணி கிழியும் வரை ஓவியமும் அழியாது. துணிகளைப் போல், மரப் பொருள்கள், மண் பாண்டங்கள் மற்றும் கண்ணாடி ஆகியவற்றிலும் ஓவியம் வரையலாம்.

ரூ.50க்கு கிடைக்கும் மண் தொட்டியில் ஓவியம் தீட்டி, அலங்காரப் பொருளாக மாற்றும் போது அதன் மதிப்பு ரூ.500க்கு மேற்பட்டதாக உயரும். வண்ண ஓவியங்கள் வரைவதன் மூலம் ஆண், பெண் என இருபாலரும் நல்ல வேலைவாய்ப்பினைப் பெற முடியும்'' என்கிறார் வசந்தா.

No comments:

Post a Comment