FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, November 19, 2015

ஆடைகள் முதல் மரப்பொருள்கள் வரை



18.11.2015, ஆடைகள், மண்பாண்டங்கள், மரப்பொருள்கள், கண்ணாடி போன்றவற்றை வண்ண ஓவியங்கள் மூலம் அழுகுப்படுத்தத் தெரிந்தால், அதன் மூலம் நம்முடைய பொருளாதாரத்தையும் உயர்த்திக் கொள்ள முடியும் என்கிறார் கோவையைச் சேர்ந்த வண்ண ஓவியங்கள் வரைவதற்கு கற்றுக் கொடுக்கும் தொழில்நுட்ப வல்லுநர் கு.வசந்தா.

காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வந்த அவர், ஒரே நாளில் ஓவியம் வரைவதற்கும், வண்ணம் தீட்டுவதற்கும் கற்றுக்கொடுத்தார். ஓவியம் வரைதல் குறித்தும், அதன் மூலம் கிடைக்க கூடிய வேலைவாய்ப்புகள் குறித்தும் அவரிடம் கேட்டபோது:

""மூலப் பொருள்களைவிட, அதனை மதிப்பு கூட்டப்பட்டப் பொருளாக மாற்றும்போது அதிக லாபம் பெற முடியும். அதேபோல், ரூ.200க்கு பெறுமான சேலையில், வண்ண ஓவியங்களை வரையும் போது அதன் மதிப்பை ரூ.700 முதல் ரூ.900 வரை உயர்த்தலாம்.

சேலை மட்டுமின்றி, குழந்தைகளுக்கான ஆடைகள், டி-சர்ட், மெத்தை விரிப்பு, தலையணை உரை ஆகியவற்றிலும், ஓவியம் தீட்ட முடியும். ஏற்கெனவே பயன்படுத்திய சேலைகள் பழமையாகத் தெரிந்தால், அந்த சேலைகளில் ஓவியங்களை வரைந்து புதுப்பொலிவுடன் கூடுதல் நாள்களுக்கு பயன்படுத்த முடியும்.

அக்ரிலிக், பேர்ல், பேர்ல் மெட்டாலிக், ஸ்பார்க்லிங் பேர்ல், 3டி கிளட்டர், 3டி பேர்ல் என 6 வகையான வண்ணங்களைப் பயன்படுத்தி ஓவியம் தீட்ட முடியும். கூடுதலாக அலங்கரிக்க வேண்டுமெனில், கற்கள், கண்ணாடிகள் பதித்துக் கொள்ளலாம். சேலைகளின் பயன்பாடு குறைந்தாலும், சல்வார், சுடிதார் போன்ற நவீன ஆடைகளிலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும்.

எம்ராய்டரி டிசைன்ஸ் போன்ற தோற்றங்களை ஓவியம் மூலம் ஏற்படுத்த முடியும். வடிவமைக்கப்பட்ட ஆடைகளில் எம்ராய்டரி டிசைன்ஸ் வடிவமைப்பது கடினம். ஆனால், எம்ராய்ட்ரி ஓவியங்களை, ஆயத்த ஆடைகளிலும் வரைய முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

ஓவியம் வரையத் தெரிந்தவர்கள் மட்டுமே இந்தத் துறையில் சாதிக்க முடியும் என அவநம்பிக்கை கொள்ள வேண்டாம். ஓவியக் கலை தெரியாதவர்களுக்கு, கார்பன் மூலம் ஓவியம் வரைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. 16 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருந்தால், வண்ண ஓவியங்கள் தீட்டும் பயிற்சியை எளிதாக பெற முடியும். மாற்றுத் திறனாளிகள் போன்றவர்கள், தையல் மிஷன்களை இயக்குவது கடினம். ஆனால், ஓவியம் வரைந்து, வண்ணம் தீட்டுவது என்பது எளிமையானது.

துணிகளில் ஓவியம் வரைவதற்கு தரமான மைகளைப் பயன்படுத்தும்போது, அந்தத் துணி கிழியும் வரை ஓவியமும் அழியாது. துணிகளைப் போல், மரப் பொருள்கள், மண் பாண்டங்கள் மற்றும் கண்ணாடி ஆகியவற்றிலும் ஓவியம் வரையலாம்.

ரூ.50க்கு கிடைக்கும் மண் தொட்டியில் ஓவியம் தீட்டி, அலங்காரப் பொருளாக மாற்றும் போது அதன் மதிப்பு ரூ.500க்கு மேற்பட்டதாக உயரும். வண்ண ஓவியங்கள் வரைவதன் மூலம் ஆண், பெண் என இருபாலரும் நல்ல வேலைவாய்ப்பினைப் பெற முடியும்'' என்கிறார் வசந்தா.

No comments:

Post a Comment