FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Wednesday, November 4, 2015

உதவித் தொகைகளை ரத்து செய்தால் நடவடிக்கை: அமைச்சர் பி.பழனியப்பன்

அரூர், 04 November 2015
தகுதியான பயனாளிகளின் உதவித் தொகைகளை ரத்து செய்தால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் தெரிவித்தார்.

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி, மொரப்பூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமப் பகுதிகளில் மக்களை நாடி குறைதீர்க்கும் சிறப்பு முகாம் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் அமைச்சர் பி.பழனியப்பன் பேசியது: தமிழக அரசு சார்பில் விதவைகள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள், முதியோர் உள்ளிட்டோருக்கு உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. இந்த உதவித் தொகையில் மத்திய அரசு ரூ.200-ம், தமிழக அரசு ரூ.800-ம் வழங்குகிறது. அரசு உதவித் தொகை பெறுவதில் முறைகேடு இருக்கக் கூடாது என்பதற்காக அண்மையில் அனைத்து உதவித்தொகை பெறும் பயனாளிகளின் வருவாய், குடும்பப் பின்னணி, நிலம் வைத்துள்ளாரா, வசதிப் படைத்தவர்களா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின் போது விதவைகள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள், நிலமற்றத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரின் உதவித் தொகைகள் ரத்து செய்திருப்பது தெரியவருகிறது.

இதுகுறித்து பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வருகின்றன. எனவே, அரசு உதவித் தொகைகளை ரத்து செய்யும் போது சரியான காரணம் இருந்தால் மட்டுமே ரத்து செய்ய வேண்டும். அரசு அதிகாரிகளின் விருப்பத்துக்கு ஏற்ப செயல்படக்கூடாது. தருமபுரி மாவட்டத்தில் முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட அரசு உதவித் தொகை பெற்று வந்து, தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயனாளிகளின் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தப்படும் என்றார்.

இதையடுத்து கேத்துரெட்டிப்பட்டி, வேப்பிலைப்பட்டி, காவேரிபுரம், தாளநத்தம், புட்டிரெட்டிப்பட்டி உள்ளிட்ட 18 குக்கிராமங்களில் அமைச்சர் பி. பழனியப்பன் பொதுமக்கள் குறைகளை நேரில் கேட்டறிந்தார். அப்போது தெருவிளக்குகள், குடிநீர் வசதி, நூலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், புதிய பேருந்து வசதி, 35 கிலோ ரேஷன் அரிசி, அரசு கால்நடை மருந்தகம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்தனர். இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தாதனூரில் 32 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகள் வீதம் ரூ.4.12 லட்சம் மதிப்பில் விலையில்லா ஆடுகளை அமைச்சர் வழங்கினார்.

முகாமில், மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் லலிதா குப்புசாமி, துணைத் தலைவர் சாரதி செந்தில்குமார், உதவிச் செயற்பொறியாளர் ஏ.ராதாகிருஷ்ணன், வட்டாட்சியர் கோ.மணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.மாதையன், எம்.ஜெயராமன், அதிமுக ஒன்றியச் செயலர்கள் வி.சி.கௌதமன், ஜி.எஸ்.குப்புசாமி, ஆர்.பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment