FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Wednesday, November 4, 2015

உதவித் தொகைகளை ரத்து செய்தால் நடவடிக்கை: அமைச்சர் பி.பழனியப்பன்

அரூர், 04 November 2015
தகுதியான பயனாளிகளின் உதவித் தொகைகளை ரத்து செய்தால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் தெரிவித்தார்.

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி, மொரப்பூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமப் பகுதிகளில் மக்களை நாடி குறைதீர்க்கும் சிறப்பு முகாம் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் அமைச்சர் பி.பழனியப்பன் பேசியது: தமிழக அரசு சார்பில் விதவைகள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள், முதியோர் உள்ளிட்டோருக்கு உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. இந்த உதவித் தொகையில் மத்திய அரசு ரூ.200-ம், தமிழக அரசு ரூ.800-ம் வழங்குகிறது. அரசு உதவித் தொகை பெறுவதில் முறைகேடு இருக்கக் கூடாது என்பதற்காக அண்மையில் அனைத்து உதவித்தொகை பெறும் பயனாளிகளின் வருவாய், குடும்பப் பின்னணி, நிலம் வைத்துள்ளாரா, வசதிப் படைத்தவர்களா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின் போது விதவைகள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள், நிலமற்றத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரின் உதவித் தொகைகள் ரத்து செய்திருப்பது தெரியவருகிறது.

இதுகுறித்து பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வருகின்றன. எனவே, அரசு உதவித் தொகைகளை ரத்து செய்யும் போது சரியான காரணம் இருந்தால் மட்டுமே ரத்து செய்ய வேண்டும். அரசு அதிகாரிகளின் விருப்பத்துக்கு ஏற்ப செயல்படக்கூடாது. தருமபுரி மாவட்டத்தில் முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட அரசு உதவித் தொகை பெற்று வந்து, தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயனாளிகளின் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தப்படும் என்றார்.

இதையடுத்து கேத்துரெட்டிப்பட்டி, வேப்பிலைப்பட்டி, காவேரிபுரம், தாளநத்தம், புட்டிரெட்டிப்பட்டி உள்ளிட்ட 18 குக்கிராமங்களில் அமைச்சர் பி. பழனியப்பன் பொதுமக்கள் குறைகளை நேரில் கேட்டறிந்தார். அப்போது தெருவிளக்குகள், குடிநீர் வசதி, நூலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், புதிய பேருந்து வசதி, 35 கிலோ ரேஷன் அரிசி, அரசு கால்நடை மருந்தகம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்தனர். இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தாதனூரில் 32 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகள் வீதம் ரூ.4.12 லட்சம் மதிப்பில் விலையில்லா ஆடுகளை அமைச்சர் வழங்கினார்.

முகாமில், மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் லலிதா குப்புசாமி, துணைத் தலைவர் சாரதி செந்தில்குமார், உதவிச் செயற்பொறியாளர் ஏ.ராதாகிருஷ்ணன், வட்டாட்சியர் கோ.மணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.மாதையன், எம்.ஜெயராமன், அதிமுக ஒன்றியச் செயலர்கள் வி.சி.கௌதமன், ஜி.எஸ்.குப்புசாமி, ஆர்.பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment