FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, November 4, 2015

உதவித் தொகைகளை ரத்து செய்தால் நடவடிக்கை: அமைச்சர் பி.பழனியப்பன்

அரூர், 04 November 2015
தகுதியான பயனாளிகளின் உதவித் தொகைகளை ரத்து செய்தால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் தெரிவித்தார்.

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி, மொரப்பூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமப் பகுதிகளில் மக்களை நாடி குறைதீர்க்கும் சிறப்பு முகாம் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் அமைச்சர் பி.பழனியப்பன் பேசியது: தமிழக அரசு சார்பில் விதவைகள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள், முதியோர் உள்ளிட்டோருக்கு உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. இந்த உதவித் தொகையில் மத்திய அரசு ரூ.200-ம், தமிழக அரசு ரூ.800-ம் வழங்குகிறது. அரசு உதவித் தொகை பெறுவதில் முறைகேடு இருக்கக் கூடாது என்பதற்காக அண்மையில் அனைத்து உதவித்தொகை பெறும் பயனாளிகளின் வருவாய், குடும்பப் பின்னணி, நிலம் வைத்துள்ளாரா, வசதிப் படைத்தவர்களா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின் போது விதவைகள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள், நிலமற்றத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரின் உதவித் தொகைகள் ரத்து செய்திருப்பது தெரியவருகிறது.

இதுகுறித்து பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வருகின்றன. எனவே, அரசு உதவித் தொகைகளை ரத்து செய்யும் போது சரியான காரணம் இருந்தால் மட்டுமே ரத்து செய்ய வேண்டும். அரசு அதிகாரிகளின் விருப்பத்துக்கு ஏற்ப செயல்படக்கூடாது. தருமபுரி மாவட்டத்தில் முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட அரசு உதவித் தொகை பெற்று வந்து, தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயனாளிகளின் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தப்படும் என்றார்.

இதையடுத்து கேத்துரெட்டிப்பட்டி, வேப்பிலைப்பட்டி, காவேரிபுரம், தாளநத்தம், புட்டிரெட்டிப்பட்டி உள்ளிட்ட 18 குக்கிராமங்களில் அமைச்சர் பி. பழனியப்பன் பொதுமக்கள் குறைகளை நேரில் கேட்டறிந்தார். அப்போது தெருவிளக்குகள், குடிநீர் வசதி, நூலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், புதிய பேருந்து வசதி, 35 கிலோ ரேஷன் அரிசி, அரசு கால்நடை மருந்தகம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்தனர். இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தாதனூரில் 32 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகள் வீதம் ரூ.4.12 லட்சம் மதிப்பில் விலையில்லா ஆடுகளை அமைச்சர் வழங்கினார்.

முகாமில், மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் லலிதா குப்புசாமி, துணைத் தலைவர் சாரதி செந்தில்குமார், உதவிச் செயற்பொறியாளர் ஏ.ராதாகிருஷ்ணன், வட்டாட்சியர் கோ.மணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.மாதையன், எம்.ஜெயராமன், அதிமுக ஒன்றியச் செயலர்கள் வி.சி.கௌதமன், ஜி.எஸ்.குப்புசாமி, ஆர்.பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment