FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, November 4, 2015

உதவித் தொகைகளை ரத்து செய்தால் நடவடிக்கை: அமைச்சர் பி.பழனியப்பன்

அரூர், 04 November 2015
தகுதியான பயனாளிகளின் உதவித் தொகைகளை ரத்து செய்தால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் தெரிவித்தார்.

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி, மொரப்பூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமப் பகுதிகளில் மக்களை நாடி குறைதீர்க்கும் சிறப்பு முகாம் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் அமைச்சர் பி.பழனியப்பன் பேசியது: தமிழக அரசு சார்பில் விதவைகள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள், முதியோர் உள்ளிட்டோருக்கு உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. இந்த உதவித் தொகையில் மத்திய அரசு ரூ.200-ம், தமிழக அரசு ரூ.800-ம் வழங்குகிறது. அரசு உதவித் தொகை பெறுவதில் முறைகேடு இருக்கக் கூடாது என்பதற்காக அண்மையில் அனைத்து உதவித்தொகை பெறும் பயனாளிகளின் வருவாய், குடும்பப் பின்னணி, நிலம் வைத்துள்ளாரா, வசதிப் படைத்தவர்களா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின் போது விதவைகள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள், நிலமற்றத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரின் உதவித் தொகைகள் ரத்து செய்திருப்பது தெரியவருகிறது.

இதுகுறித்து பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வருகின்றன. எனவே, அரசு உதவித் தொகைகளை ரத்து செய்யும் போது சரியான காரணம் இருந்தால் மட்டுமே ரத்து செய்ய வேண்டும். அரசு அதிகாரிகளின் விருப்பத்துக்கு ஏற்ப செயல்படக்கூடாது. தருமபுரி மாவட்டத்தில் முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட அரசு உதவித் தொகை பெற்று வந்து, தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயனாளிகளின் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தப்படும் என்றார்.

இதையடுத்து கேத்துரெட்டிப்பட்டி, வேப்பிலைப்பட்டி, காவேரிபுரம், தாளநத்தம், புட்டிரெட்டிப்பட்டி உள்ளிட்ட 18 குக்கிராமங்களில் அமைச்சர் பி. பழனியப்பன் பொதுமக்கள் குறைகளை நேரில் கேட்டறிந்தார். அப்போது தெருவிளக்குகள், குடிநீர் வசதி, நூலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், புதிய பேருந்து வசதி, 35 கிலோ ரேஷன் அரிசி, அரசு கால்நடை மருந்தகம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்தனர். இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தாதனூரில் 32 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகள் வீதம் ரூ.4.12 லட்சம் மதிப்பில் விலையில்லா ஆடுகளை அமைச்சர் வழங்கினார்.

முகாமில், மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் லலிதா குப்புசாமி, துணைத் தலைவர் சாரதி செந்தில்குமார், உதவிச் செயற்பொறியாளர் ஏ.ராதாகிருஷ்ணன், வட்டாட்சியர் கோ.மணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.மாதையன், எம்.ஜெயராமன், அதிமுக ஒன்றியச் செயலர்கள் வி.சி.கௌதமன், ஜி.எஸ்.குப்புசாமி, ஆர்.பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment