FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, November 19, 2015

நாளை மாற்றுத் திறனாளிகள் விளையாட்டுப் போட்டி

நாகர்கோவில், 19 November 2015
கன்னியாகுமரி மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (நவ. 20) நடைபெறுகிறது.

நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டரங்கில் காலை 9 மணிக்கு நடைபெற உள்ள இப்போட்டிகள் இருபாலருக்கும் தனித்தனியே நடைபெறும். போட்டிகளில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது. அடையாள அட்டை அவசியம். தடகளம், மினி கூடைப்பந்து எறிதல், 100 மீட்டர் நீளம் தாண்டுதல், சக்கர நாற்காலி, குழு விளையாட்டு, இறகுப் பந்து, மேஜைப் பந்து, குண்டு எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல், டென்னிஸ் பந்து எறிதல், வாலிபால் பந்து, கபடி உள்ளிட்ட பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.

முதல் இரண்டு இடங்களைப் பெறுவோருக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment