FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, November 2, 2015

கீதாவுக்கு சொந்தம் கொண்டாடும் 5 குடும்பங்கள் - அனைவருக்கும் டி.என்.ஏ பரிசோதனை!

31.10.2015, ஜெய்ப்பூர்: பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பிய கீதாவுக்கு 5 குடும்பத்தினர் உரிமை கொண்டாடி வருகின்ற காரணத்தினால் அவர் யாருக்கு சொந்தம் என்பதை அறிய டி.என்.ஏ பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த கீதா 8 வயது இருக்கும் போது வழிதவறி பாகிஸ்தான் சென்றுவிட்டார். வாய் பேச முடியாத, காது கேளாத அவர் 15 ஆண்டுகளாக பாகிஸ்தானில் இருந்தார். இந்த நிலையில் பீகாரில் வசிக்கும் தனது பெற்றோரை அடையாளம் கண்ட பிறகு கடந்த திங்களன்று கீதா நாடு திரும்பினார். விமான நிலையத்தில் அவரை வரவேற்க காத்து இருந்த அவரின் குடும்பத்தாரை அவரால் அடையாளம் காண முடியவில்லை. இதனால் அவர்களை சந்திக்காமலேயே சென்று விட்டார். பீகாரை தொடர்ந்து உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த தம்பதியினர் கீதா தங்களது மகள் என்று உரிமை கொண்டாடி உள்ளனர். இந்த நிலையில் 5 ஆவதாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தம்பதி கீதா தங்களது மகள்தான் என்று உரிமை கோரியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் சைமா குர்தத் கிராமத்தை சேர்ந்தவர் முகமதுகான் இவரது மனைவி ஹமிதி. இவர்கள் கீதா தங்களது மகள் என்று கூறியுள்ளனர். கீதா பற்றிய புகைப்படங்கள் பத்திரிகையில் வெளியாகி இருந்தது. இந்த புகைப்படத்தை அந்த தம்பதியினர் படத்தில் இருக்கும் கீதா தங்களது மகள் என்று மாவட்ட நிர்வாகத்தை அனுகி உரிமை கோரியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறும் போது, "வாய் பேச முடியாத, காது கேளாத தங்களது மகள் ஹன்சிரா 8 வயதாக இருக்கும் போது 2003 இல் காணாமல் போனார். கீதாவின் முகச்சாயலில் காணாமல் போன எனது மகளோடு ஒத்து போகிறது. மற்ற விஷயங்களும் ஒத்துபோகிறது எனவே கீதா எங்களது மகள்" என்று தெரிவித்துள்ளனர். தற்போது 5 குடும்பத்தினர் கீதாவுக்கு உரிமை கொண்டாடி வருகின்ற காரணத்தினால் இதில் யாரது மகள் கீதா என்பதை அறிய மரபணு சோதனை நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment