FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Monday, November 2, 2015

கீதாவுக்கு சொந்தம் கொண்டாடும் 5 குடும்பங்கள் - அனைவருக்கும் டி.என்.ஏ பரிசோதனை!

31.10.2015, ஜெய்ப்பூர்: பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பிய கீதாவுக்கு 5 குடும்பத்தினர் உரிமை கொண்டாடி வருகின்ற காரணத்தினால் அவர் யாருக்கு சொந்தம் என்பதை அறிய டி.என்.ஏ பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த கீதா 8 வயது இருக்கும் போது வழிதவறி பாகிஸ்தான் சென்றுவிட்டார். வாய் பேச முடியாத, காது கேளாத அவர் 15 ஆண்டுகளாக பாகிஸ்தானில் இருந்தார். இந்த நிலையில் பீகாரில் வசிக்கும் தனது பெற்றோரை அடையாளம் கண்ட பிறகு கடந்த திங்களன்று கீதா நாடு திரும்பினார். விமான நிலையத்தில் அவரை வரவேற்க காத்து இருந்த அவரின் குடும்பத்தாரை அவரால் அடையாளம் காண முடியவில்லை. இதனால் அவர்களை சந்திக்காமலேயே சென்று விட்டார். பீகாரை தொடர்ந்து உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த தம்பதியினர் கீதா தங்களது மகள் என்று உரிமை கொண்டாடி உள்ளனர். இந்த நிலையில் 5 ஆவதாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தம்பதி கீதா தங்களது மகள்தான் என்று உரிமை கோரியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் சைமா குர்தத் கிராமத்தை சேர்ந்தவர் முகமதுகான் இவரது மனைவி ஹமிதி. இவர்கள் கீதா தங்களது மகள் என்று கூறியுள்ளனர். கீதா பற்றிய புகைப்படங்கள் பத்திரிகையில் வெளியாகி இருந்தது. இந்த புகைப்படத்தை அந்த தம்பதியினர் படத்தில் இருக்கும் கீதா தங்களது மகள் என்று மாவட்ட நிர்வாகத்தை அனுகி உரிமை கோரியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறும் போது, "வாய் பேச முடியாத, காது கேளாத தங்களது மகள் ஹன்சிரா 8 வயதாக இருக்கும் போது 2003 இல் காணாமல் போனார். கீதாவின் முகச்சாயலில் காணாமல் போன எனது மகளோடு ஒத்து போகிறது. மற்ற விஷயங்களும் ஒத்துபோகிறது எனவே கீதா எங்களது மகள்" என்று தெரிவித்துள்ளனர். தற்போது 5 குடும்பத்தினர் கீதாவுக்கு உரிமை கொண்டாடி வருகின்ற காரணத்தினால் இதில் யாரது மகள் கீதா என்பதை அறிய மரபணு சோதனை நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment