FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, November 10, 2015

நெல்லையில் 12இல் சிறப்பு தொழில் ஊக்குவிப்பு முகாம்

திருநெல்வேலி, 10 November 2015
திருநெல்வேலியில் மாவட்ட தொழில் மையம் சார்பில் இம்மாதம் 12ஆம் தேதி சிறப்புத் தொழில் ஊக்குவிப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக, ஆட்சியர் மு. கருணாகரன் வெளியிட்ட செய்தி: பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ படித்த முதல் தலைமுறை இளைஞர்களுக்கு உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் (அதிகபட்சம் ரூ. 25 லட்சம் வரை) தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. ரூ. 1 கோடி வரையிலான தொழில் திட்டங்களுக்கு வங்கிகள் வழியாக கடன் வழங்கும் "நீட்ஸ்' என்ற திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆதிதிராவிடப் பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மிகவும் பிற்படுத்தப்பட்டுள்ளோர், பின்தங்கிய வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஆண், பெண், இருபாலரும் இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

வியாபாரம், வாகனம், வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த சேவைத் தொழில்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடன் பெற முடியாது. வங்கியிலிருந்து கடன் அனுமதிக் கடிதம் கிடைத்த பின்னர் பயனாளிகளுக்கு, ஒரு மாத கால மேலாண்மைப் பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்குப் பிறகு பயனாளிகள் தமது பங்கு மூலதனமாக திட்ட முதலீட்டில் சிறப்பு பிரிவினர் 5 சதம், பொதுப் பிரிவினர் 10 சதம் செலுத்தி வங்கியில் நிதியுதவி பெறலாம்.

அப்போது, மாவட்டத் தொழில் மையம் மூலம் 25 சதவீத மானியத் தொகை வங்கிக்கு வழங்கப்படும். 25 சதவீத மானியத்துடன் (அதிகபட்சம் ரூ25 லட்சம் வரை) தகுதியிருப்பின் மேலும், வரிச் சலுகை, மின் கட்டணத்தில் மானியம், மின்னாக்கி மானியம், வட்டி மானியமும் பெற வாய்ப்புள்ளது.

இவை தவிர, தொழிற்சாலை அமைக்க நிலம் வாங்கும்போது பத்திரப் பதிவுக் கட்டண மானியம், வேலைவாய்ப்புப் பெருக்க மானியம், சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த தொழில்களுக்கான மானியம், சிறப்பு தொழில் நிறுவனங்கள், சிறப்பு இன தொழில்முனைவோருக்கான மானியம் போன்ற மானியங்களும் பெறலாம்.

பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர் அலுவலகத்தில் 12ஆம் தேதி முற்பகல் 11 முதல் மாலைவரை முகாம் நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ள இளைஞர்கள், தொழில் முனைவோர் பங்கேற்கலாம் என்றார் அவர்.

No comments:

Post a Comment