FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, November 10, 2015

நெல்லையில் 12இல் சிறப்பு தொழில் ஊக்குவிப்பு முகாம்

திருநெல்வேலி, 10 November 2015
திருநெல்வேலியில் மாவட்ட தொழில் மையம் சார்பில் இம்மாதம் 12ஆம் தேதி சிறப்புத் தொழில் ஊக்குவிப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக, ஆட்சியர் மு. கருணாகரன் வெளியிட்ட செய்தி: பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ படித்த முதல் தலைமுறை இளைஞர்களுக்கு உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் (அதிகபட்சம் ரூ. 25 லட்சம் வரை) தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. ரூ. 1 கோடி வரையிலான தொழில் திட்டங்களுக்கு வங்கிகள் வழியாக கடன் வழங்கும் "நீட்ஸ்' என்ற திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆதிதிராவிடப் பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மிகவும் பிற்படுத்தப்பட்டுள்ளோர், பின்தங்கிய வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஆண், பெண், இருபாலரும் இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

வியாபாரம், வாகனம், வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த சேவைத் தொழில்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடன் பெற முடியாது. வங்கியிலிருந்து கடன் அனுமதிக் கடிதம் கிடைத்த பின்னர் பயனாளிகளுக்கு, ஒரு மாத கால மேலாண்மைப் பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்குப் பிறகு பயனாளிகள் தமது பங்கு மூலதனமாக திட்ட முதலீட்டில் சிறப்பு பிரிவினர் 5 சதம், பொதுப் பிரிவினர் 10 சதம் செலுத்தி வங்கியில் நிதியுதவி பெறலாம்.

அப்போது, மாவட்டத் தொழில் மையம் மூலம் 25 சதவீத மானியத் தொகை வங்கிக்கு வழங்கப்படும். 25 சதவீத மானியத்துடன் (அதிகபட்சம் ரூ25 லட்சம் வரை) தகுதியிருப்பின் மேலும், வரிச் சலுகை, மின் கட்டணத்தில் மானியம், மின்னாக்கி மானியம், வட்டி மானியமும் பெற வாய்ப்புள்ளது.

இவை தவிர, தொழிற்சாலை அமைக்க நிலம் வாங்கும்போது பத்திரப் பதிவுக் கட்டண மானியம், வேலைவாய்ப்புப் பெருக்க மானியம், சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த தொழில்களுக்கான மானியம், சிறப்பு தொழில் நிறுவனங்கள், சிறப்பு இன தொழில்முனைவோருக்கான மானியம் போன்ற மானியங்களும் பெறலாம்.

பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர் அலுவலகத்தில் 12ஆம் தேதி முற்பகல் 11 முதல் மாலைவரை முகாம் நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ள இளைஞர்கள், தொழில் முனைவோர் பங்கேற்கலாம் என்றார் அவர்.

No comments:

Post a Comment