FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, November 10, 2015

நெல்லையில் 12இல் சிறப்பு தொழில் ஊக்குவிப்பு முகாம்

திருநெல்வேலி, 10 November 2015
திருநெல்வேலியில் மாவட்ட தொழில் மையம் சார்பில் இம்மாதம் 12ஆம் தேதி சிறப்புத் தொழில் ஊக்குவிப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக, ஆட்சியர் மு. கருணாகரன் வெளியிட்ட செய்தி: பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ படித்த முதல் தலைமுறை இளைஞர்களுக்கு உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் (அதிகபட்சம் ரூ. 25 லட்சம் வரை) தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. ரூ. 1 கோடி வரையிலான தொழில் திட்டங்களுக்கு வங்கிகள் வழியாக கடன் வழங்கும் "நீட்ஸ்' என்ற திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆதிதிராவிடப் பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மிகவும் பிற்படுத்தப்பட்டுள்ளோர், பின்தங்கிய வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஆண், பெண், இருபாலரும் இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

வியாபாரம், வாகனம், வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த சேவைத் தொழில்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடன் பெற முடியாது. வங்கியிலிருந்து கடன் அனுமதிக் கடிதம் கிடைத்த பின்னர் பயனாளிகளுக்கு, ஒரு மாத கால மேலாண்மைப் பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்குப் பிறகு பயனாளிகள் தமது பங்கு மூலதனமாக திட்ட முதலீட்டில் சிறப்பு பிரிவினர் 5 சதம், பொதுப் பிரிவினர் 10 சதம் செலுத்தி வங்கியில் நிதியுதவி பெறலாம்.

அப்போது, மாவட்டத் தொழில் மையம் மூலம் 25 சதவீத மானியத் தொகை வங்கிக்கு வழங்கப்படும். 25 சதவீத மானியத்துடன் (அதிகபட்சம் ரூ25 லட்சம் வரை) தகுதியிருப்பின் மேலும், வரிச் சலுகை, மின் கட்டணத்தில் மானியம், மின்னாக்கி மானியம், வட்டி மானியமும் பெற வாய்ப்புள்ளது.

இவை தவிர, தொழிற்சாலை அமைக்க நிலம் வாங்கும்போது பத்திரப் பதிவுக் கட்டண மானியம், வேலைவாய்ப்புப் பெருக்க மானியம், சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த தொழில்களுக்கான மானியம், சிறப்பு தொழில் நிறுவனங்கள், சிறப்பு இன தொழில்முனைவோருக்கான மானியம் போன்ற மானியங்களும் பெறலாம்.

பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர் அலுவலகத்தில் 12ஆம் தேதி முற்பகல் 11 முதல் மாலைவரை முகாம் நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ள இளைஞர்கள், தொழில் முனைவோர் பங்கேற்கலாம் என்றார் அவர்.

No comments:

Post a Comment