FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Sunday, November 1, 2015

கடின உழைப்புக்கு முன் உதாரணம் மெழுகுவர்த்தி தயாரிப்பில் அசத்தும் பார்வையற்றோர்

31.10.2015, புதுடெல்லி: தங்களால் உலகத்தை பார்க்க முடியாவிட்டாலும், தாங்கள் செய்யும் பொருட்களால் உலகமே வெளிச்சத்திற்கு வருவதற்காக உழைக்கின்றனர் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள். தீபவாளி பண்டிகையை முன்னிட்டு, மெழுகுவர்த்தி தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தெற்கு டெல்லி மாநகராட்சிக்கு உட்பட்ட லோதி சாலை அருகிலுள்ள லால் பகதுர் சாஸ்திரி சாலையில் உள்ளது பார்வையற்றோர் நிவாரண சங்கம். இங்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பார்வையற்றோர் உள்ளனர். இவர்கள் தங்களது பொருளாதார தேவையை பூர்த்தி செய்வதற்காக மெழுகுவர்த்தி செய்யும் தொழிலை செய்கின்றனர்.

இதுகுறித்து பார்வையற்ற நிவாரண சங்க திட்ட இயக்குனர் டேவிட் கூறியதாவது: இந்த மையம் பார்வையற்றோருக்கான மறுவாழ்வு மையமாகவும், அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்த ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது. இங்கு பீகார், குஜராத், உத்தரப்பிரதேசம், அரியானா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 300 பேர் உள்ளனர். இதில் 210 பேர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், மற்ற 90 பேர் சுய தொழில் செய்பவர்கள். எங்களின் முக்கியமான தொழில் மெழுகுவர்த்தி செய்வது. ஆண்டு முழுவதும் மெழுகுவர்த்திகள் செய்யப்படும். மண் குவளை மெழுகுவர்த்தி உட்பட சுமார் 90 ரகங்களில் இங்கு மெழுகுவர்த்தி தயாரிக்கப்படுகிறது. மூலப் பொருட்களை வாங்கி வருவது, பேப்பர்களை வெட்டித் தருவது போன்ற வேலைகள் மட்டுமே வெளி மார்க்கெட்டுகளில் கொடுக்கப்பட்டு வாங்கப்படுகிறது. மற்றபடி மெழுகுவர்த்தி முழுவதும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளாலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.

மெழுவர்த்தி செய்வதற்கு மாற்றுத்திறனாளிகளை கொண்டே, பார்வையற்றோருக்கு கற்றுத்தரப்படுகிறது. இதனால் அவர்களின் பொருளாதாரம் வெகுவாக உயர்ந்துள்ளது. சுய வேலைகளில் ஈடுபடுபவர்கள் முழு நேரமாகவும், மாணவர்கள் பகுதி நேரத்திலும் மெழுகுவர்த்தி செய்யும் வேலையை விரும்பி செய்கின்றனர். ஒவ்வொரு வருடமும் விற்பனை கண்காட்சி நடப்பதால், மெழுகுவர்த்தி செய்யும் வேலை எப்போதும் நடந்து கொண்டே இருக்கும். சிறியதாக தொடங்கிய மெழுவர்த்தி செய்யும் தொழில் தற்போது நல்ல நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளது. கண்காட்சியின் போது பல்வேறு பகுதிகளிலிருந்து பலரும் வந்து வாங்கிச் செல்கின்றனர். மற்ற மாநிலங்களில் இதுபோன்ற விற்பனை கண்காட்சியை நடத்த பலர் கோரிக்கை வைத்துள்ளனர். விரைவில் பல மாநிலங்களில் இதுபோன்ற விற்பனை கண்காட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளோம். வெளிநாட்டு பயணிகளும், வெளிநாடு வாழ் இந்தியர்களும் இங்கு வந்து மெழுகுவர்த்தி வாங்கிச் செல்கின்றனர். மாநில அரசு சார்பில் கண்காட்சிக்கு தேவையான சில உதவிகள் கிடைத்தாலும், ஏற்றுமதி செய்வதற்கும், மற்ற மாநிலங்களில் கண்காட்சி ஏற்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் உதவி செய்தால் மட்டுமே இங்குள்ள நூற்றுக்கணக்கான பார்வையற்றோரின் எதிர்காலம் சிறப்பாக அமையும். தீபாவளி பண்டிகை நெருங்குவதால், மெழுகுவர்த்தி தயாரிப்பு பணி மும்மரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment