FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, November 27, 2015

ரயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வசதி... டிசம்பர் 22 முதல் அமல்

27.11.2015, டெல்லி: 
ரயில்வே டிக்கெட் முன்பதிவின்போது மாற்றுத் திறனாளிளுக்கு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அவர்களுக்கு அப்பர் பெர்த் இனிமேல் ஒதுக்கப்பட மாட்டாது. மாறாக லோயர் பெர்த் அல்லது மிடில் பெர்த் ஒதுக்கப்படும். இதன் மூலம் அப்பர் பெர்த்ஒதுக்கப்பட்டு அதில் ஏற முடியாமல் தவிக்கும் அவலத்திலிருந்து உடல் ரீதியான மாற்றுத் திறனாளிகளுக்கு விமோச்சனம் கிடைத்துள்ளது. மேலும், மாற்றுத் திறனாளிகளுடன் துணையாக வருவோருக்கு மிடில் பெர்த் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. டிசம்பரில் அமல்... 
டிசம்பர் 22ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. உடல் ரீதியாக மாற்றுத் திறனாளிகளாக உள்ளோருக்கு லோயர் பெர்த் மற்றும் மிடில் பெர்த் மட்டுமே வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு மட்டுமே இதில் முன்னுரிமை தரப்படும்.

2. லோயர் பர்த் மட்டுமே... 
உடல் ரீதியான மாற்றுத் திறனாளிகளுக்கு லோயர் பர்த் மட்டுமே தரப்படும். அவர்களுடன் துணைக்கு வரும் நபர் இருந்தால் அவர்களுக்கு மிடில் பெர்த் தரப்படும்.

3. மாற்று ஏற்பாடு... 
மேலும் உடல் ரீதியான மாற்றுத் திறனாளிகளுக்கான கோட்டாவில் சீட் இல்லாமல் போனால், அதற்கான அதே சலுகையுடன் பிற கோட்டாவில் உள்ள சீட்களைப் பெறவும் இனி வசதி செய்யப்பட்டுள்ளது. அதாவது மாற்றுத் திறனாளிகளுக்கான கோட்டாவில் இடம் இல்லாவிட்டால் பொது கோட்டாவிலிருந்து இடம் தரப்படும், அதே கட்டணச் சலுகையுடன்.

4. காரணம்... இதுதொடர்பாக வந்த பல்வேறு புகார்கள் மற்றும் பரிந்துரைகளை ஆராய்ந்து இப்போது ரயில்வே அமைச்சகம் இந்த சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment