FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Friday, November 27, 2015

ரயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வசதி... டிசம்பர் 22 முதல் அமல்

27.11.2015, டெல்லி: 
ரயில்வே டிக்கெட் முன்பதிவின்போது மாற்றுத் திறனாளிளுக்கு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அவர்களுக்கு அப்பர் பெர்த் இனிமேல் ஒதுக்கப்பட மாட்டாது. மாறாக லோயர் பெர்த் அல்லது மிடில் பெர்த் ஒதுக்கப்படும். இதன் மூலம் அப்பர் பெர்த்ஒதுக்கப்பட்டு அதில் ஏற முடியாமல் தவிக்கும் அவலத்திலிருந்து உடல் ரீதியான மாற்றுத் திறனாளிகளுக்கு விமோச்சனம் கிடைத்துள்ளது. மேலும், மாற்றுத் திறனாளிகளுடன் துணையாக வருவோருக்கு மிடில் பெர்த் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. டிசம்பரில் அமல்... 
டிசம்பர் 22ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. உடல் ரீதியாக மாற்றுத் திறனாளிகளாக உள்ளோருக்கு லோயர் பெர்த் மற்றும் மிடில் பெர்த் மட்டுமே வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு மட்டுமே இதில் முன்னுரிமை தரப்படும்.

2. லோயர் பர்த் மட்டுமே... 
உடல் ரீதியான மாற்றுத் திறனாளிகளுக்கு லோயர் பர்த் மட்டுமே தரப்படும். அவர்களுடன் துணைக்கு வரும் நபர் இருந்தால் அவர்களுக்கு மிடில் பெர்த் தரப்படும்.

3. மாற்று ஏற்பாடு... 
மேலும் உடல் ரீதியான மாற்றுத் திறனாளிகளுக்கான கோட்டாவில் சீட் இல்லாமல் போனால், அதற்கான அதே சலுகையுடன் பிற கோட்டாவில் உள்ள சீட்களைப் பெறவும் இனி வசதி செய்யப்பட்டுள்ளது. அதாவது மாற்றுத் திறனாளிகளுக்கான கோட்டாவில் இடம் இல்லாவிட்டால் பொது கோட்டாவிலிருந்து இடம் தரப்படும், அதே கட்டணச் சலுகையுடன்.

4. காரணம்... இதுதொடர்பாக வந்த பல்வேறு புகார்கள் மற்றும் பரிந்துரைகளை ஆராய்ந்து இப்போது ரயில்வே அமைச்சகம் இந்த சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment