FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, November 26, 2015

செவித்திறன் குறைவு பரிசோதனை மையம்

26.11.2015, தேனி:
தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், செவித்திறன் குறைந்தவர்களுக்கான ஆரம்ப நிலை பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ரூ.19.80 லட்சம் மதிப்பிலான கருவிகளுடன், ஒலி உட்புகாத அறையையும் உடைய இம் மையத்தின் மூலம் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஆரம்ப நிலையிலேயே செவித்திறன் குறைபாட்டை கண்டறியலாம்.

மேலும் இங்கு காதுமூக்கு தொண்டை பரிசோதனை, தூய ஒலி செவிமானியுடன் பார்த்தல், மூளை தண்டுவடம் மறுபதில் செவி பரிசோதனை, செவி ஒலி வெளிகொணர் பரிசோதனை, பேச்சு மற்றும் மொழித்திறன் வளர்ச்சி பரிசோதனை, செவித்திறன் கருவி பொருத்துதல், ஆரம்ப நிலை பயிற்சிகள், பேச்சு பயிற்சி என 8 வகை பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதில் விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment