FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Tuesday, November 3, 2015

நவ. 13-இல் இலவச மனைப்பட்டா கோரி மாற்றுத் திறனாளிகள் உண்ணாவிரதம்


நாமக்கல், 03 November 2015
இலவச மனைப்பட்டா வழங்கக் கோரி, குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் நவம்பர் 13-ஆம் தேதி மாற்றுத் திறனாளிகள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் எ,பழனிவேல் கூறியது:
குமாரபாளையம் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு குடியிருக்க சொந்த வீடு இல்லை. இவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கடந்த செப்டம்பர் மாதம் மனு அளிக்கப்பட்டது. இம் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறையினருக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். இருப்பினும், அங்கு புறம்போக்கு நிலம் இல்லை என வருவாய் ஆய்வாளர் பதில் தெரிவித்துள்ளார். மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் வரும் 13-ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றார்.

No comments:

Post a Comment