FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, November 3, 2015

நவ. 13-இல் இலவச மனைப்பட்டா கோரி மாற்றுத் திறனாளிகள் உண்ணாவிரதம்


நாமக்கல், 03 November 2015
இலவச மனைப்பட்டா வழங்கக் கோரி, குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் நவம்பர் 13-ஆம் தேதி மாற்றுத் திறனாளிகள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் எ,பழனிவேல் கூறியது:
குமாரபாளையம் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு குடியிருக்க சொந்த வீடு இல்லை. இவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கடந்த செப்டம்பர் மாதம் மனு அளிக்கப்பட்டது. இம் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறையினருக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். இருப்பினும், அங்கு புறம்போக்கு நிலம் இல்லை என வருவாய் ஆய்வாளர் பதில் தெரிவித்துள்ளார். மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் வரும் 13-ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றார்.

No comments:

Post a Comment