FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, November 10, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 கோடி பராமரிப்பு உதவி தொகை: கலெக்டர்

09.11.2015, திருவண்ணாமலை: 
திருவண்ணாமலை மாவட்டத்தில், இதுவரை, 20,482 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு, 25.24 கோடி ரூபாய் பராமரிப்பு உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது என, கலெக்டர் ஞானசேகரன் கூறினார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மன வளர்ச்சி குன்றியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையிலும், மாற்றுத்திறனாளிகளை மனித சமுதாயத்தின் ஓர் அங்கமாக அனைவரும் அங்கீகரிக்கும் வகையிலும், நாட்டின் வளர்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பை உறுதி செய்யும் வகையில், பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்தினாளிகள் சம வாய்ப்புகள் பெற்று, வாழ்வில் ஏற்றம் பெற்றிட, மாற்று திறனாளிகளுக்கான மாத உதவி தொகை, ஆயிரம் ரூபாயிலிருந்து, 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு, 3 சதவீத வீடுகள் ஒதுக்கப்படுகிறது. இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது. இதுவரை, 20,482 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு, 25.24 கோடி ரூபாய் பராமரிப்பு உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment