FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, November 10, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 கோடி பராமரிப்பு உதவி தொகை: கலெக்டர்

09.11.2015, திருவண்ணாமலை: 
திருவண்ணாமலை மாவட்டத்தில், இதுவரை, 20,482 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு, 25.24 கோடி ரூபாய் பராமரிப்பு உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது என, கலெக்டர் ஞானசேகரன் கூறினார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மன வளர்ச்சி குன்றியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையிலும், மாற்றுத்திறனாளிகளை மனித சமுதாயத்தின் ஓர் அங்கமாக அனைவரும் அங்கீகரிக்கும் வகையிலும், நாட்டின் வளர்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பை உறுதி செய்யும் வகையில், பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்தினாளிகள் சம வாய்ப்புகள் பெற்று, வாழ்வில் ஏற்றம் பெற்றிட, மாற்று திறனாளிகளுக்கான மாத உதவி தொகை, ஆயிரம் ரூபாயிலிருந்து, 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு, 3 சதவீத வீடுகள் ஒதுக்கப்படுகிறது. இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது. இதுவரை, 20,482 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு, 25.24 கோடி ரூபாய் பராமரிப்பு உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment