FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Sunday, November 8, 2015

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் நியமனம்: மருத்துவப் பரிசோதனை கோரி மனு

மதுரை, 07 November 2015
மாற்றுத் திறனாளி ஒதுக்கீட்டில் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் உண்மை நிலையைக் கண்டறிய மருத்துவப் பரிசோதனைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சி.சண்முகம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நவ.17 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அவரது மனு விவரம்:

திருநெல்வேலி மாவட்டத்தில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து பலர், மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் அரசுப் பணியில் சேர்ந்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இந்த நிலை உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அரசு வேலைக்காகக் காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இந்த மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் தகுதியற்றவர்களைப் பணியில் இருந்து நீக்கி, தகுதியான மாற்றுத்திறனாளிகளை பணியில் அமர்த்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் என மனுவில் பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுதாரரின் கோரிக்கையில் தெளிவு இல்லை. எனவே தெளிவான கோரிக்கையைக் குறிப்பிட்டு மனுதாரர் நிவாரணம் கோரலாம் எனக்கூறி மனு மீதான விசாரணையை நவம்பர் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment