FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Sunday, November 8, 2015

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் நியமனம்: மருத்துவப் பரிசோதனை கோரி மனு

மதுரை, 07 November 2015
மாற்றுத் திறனாளி ஒதுக்கீட்டில் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் உண்மை நிலையைக் கண்டறிய மருத்துவப் பரிசோதனைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சி.சண்முகம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நவ.17 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அவரது மனு விவரம்:

திருநெல்வேலி மாவட்டத்தில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து பலர், மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் அரசுப் பணியில் சேர்ந்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இந்த நிலை உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அரசு வேலைக்காகக் காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இந்த மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் தகுதியற்றவர்களைப் பணியில் இருந்து நீக்கி, தகுதியான மாற்றுத்திறனாளிகளை பணியில் அமர்த்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் என மனுவில் பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுதாரரின் கோரிக்கையில் தெளிவு இல்லை. எனவே தெளிவான கோரிக்கையைக் குறிப்பிட்டு மனுதாரர் நிவாரணம் கோரலாம் எனக்கூறி மனு மீதான விசாரணையை நவம்பர் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment