FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, November 5, 2015

எம்.ஜி.ஆர்., காதுகேளாதோர் பள்ளியில் நான்கு மாணவர்களுக்கு மர்ம காய்ச்சல்

05.11.2015, சென்னை : 
எம்.ஜி.ஆர்., நினைவு இல்ல, காதுகேளாதோர் பள்ளி மாணவர்கள் நான்கு பேர், மர்மக் காய்ச்சலால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

மணப்பாக்கம், எம்.ஜி.ஆர்., நினைவு இல்லத்தில், காதுகேளாத மற்றும் வாய்பேசாதோர்க்கான மேல்நிலைப் பள்ளி உள்ளது. அதில், மாணவ, மாணவியர் மற்றும் ஊழியர்கள் என, 140 பேர் உள்ளனர்.நேற்று முன்தினம், அங்கு உள்ள நான்கு மாணவ, மாணவியர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். உடனே, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்த்தனர்.தகவலையடுத்து, மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அந்த பள்ளியை ஆய்வு செய்தனர்.சுகாதார பாதிப்பு பகுதிகளை, மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: காய்ச்சல் பாதிக்கப்பட்ட நாளில், மாணவர்களுக்கு பிரியாணி வழங்கி உள்ளனர். மழை நேரத்தில், சிலருக்கு பிரியாணியால் ஒவ்வாமை ஏற்படும். சாதாரண காய்ச்சல் தான். சுகாதார தடுப்பு நடவடிக்கை குறித்து, பள்ளி நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கி உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

4 பேருக்கு டெங்கு அறிகுறி

திருத்தணி அரசு மருத்துவமனையில், கலெக்டர் வீரராகவ ராவ் மற்றும் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் மோகனன் ஆகியோர், நேற்று இரவு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கலெக்டர் கூறியதாவது:மாவட்டத்தில், சிலருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி தெரிய வந்துள்ளது. திருத்தணி அரசு மருத்துவமனையில், இன்று (நேற்று) 56 பேருக்கு, ரத்தப் பரிசோதனை செய்ததில், நான்கு பேருக்கு டெங்கு அறிகுறி இருந்தது தெரியவந்துள்ளது.டெங்குவை எளிதில் குணப்படுத்திவிடலாம்; யாரும் பீதி அடைய வேண்டாம். நோய் எதிர்ப்பு சக்திக்கு, அனைவரும் நிலவேம்பு கஷாயம் குடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment