FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, November 5, 2015

எம்.ஜி.ஆர்., காதுகேளாதோர் பள்ளியில் நான்கு மாணவர்களுக்கு மர்ம காய்ச்சல்

05.11.2015, சென்னை : 
எம்.ஜி.ஆர்., நினைவு இல்ல, காதுகேளாதோர் பள்ளி மாணவர்கள் நான்கு பேர், மர்மக் காய்ச்சலால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

மணப்பாக்கம், எம்.ஜி.ஆர்., நினைவு இல்லத்தில், காதுகேளாத மற்றும் வாய்பேசாதோர்க்கான மேல்நிலைப் பள்ளி உள்ளது. அதில், மாணவ, மாணவியர் மற்றும் ஊழியர்கள் என, 140 பேர் உள்ளனர்.நேற்று முன்தினம், அங்கு உள்ள நான்கு மாணவ, மாணவியர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். உடனே, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்த்தனர்.தகவலையடுத்து, மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அந்த பள்ளியை ஆய்வு செய்தனர்.சுகாதார பாதிப்பு பகுதிகளை, மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: காய்ச்சல் பாதிக்கப்பட்ட நாளில், மாணவர்களுக்கு பிரியாணி வழங்கி உள்ளனர். மழை நேரத்தில், சிலருக்கு பிரியாணியால் ஒவ்வாமை ஏற்படும். சாதாரண காய்ச்சல் தான். சுகாதார தடுப்பு நடவடிக்கை குறித்து, பள்ளி நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கி உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

4 பேருக்கு டெங்கு அறிகுறி

திருத்தணி அரசு மருத்துவமனையில், கலெக்டர் வீரராகவ ராவ் மற்றும் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் மோகனன் ஆகியோர், நேற்று இரவு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கலெக்டர் கூறியதாவது:மாவட்டத்தில், சிலருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி தெரிய வந்துள்ளது. திருத்தணி அரசு மருத்துவமனையில், இன்று (நேற்று) 56 பேருக்கு, ரத்தப் பரிசோதனை செய்ததில், நான்கு பேருக்கு டெங்கு அறிகுறி இருந்தது தெரியவந்துள்ளது.டெங்குவை எளிதில் குணப்படுத்திவிடலாம்; யாரும் பீதி அடைய வேண்டாம். நோய் எதிர்ப்பு சக்திக்கு, அனைவரும் நிலவேம்பு கஷாயம் குடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment