FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, November 5, 2015

எம்.ஜி.ஆர்., காதுகேளாதோர் பள்ளியில் நான்கு மாணவர்களுக்கு மர்ம காய்ச்சல்

05.11.2015, சென்னை : 
எம்.ஜி.ஆர்., நினைவு இல்ல, காதுகேளாதோர் பள்ளி மாணவர்கள் நான்கு பேர், மர்மக் காய்ச்சலால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

மணப்பாக்கம், எம்.ஜி.ஆர்., நினைவு இல்லத்தில், காதுகேளாத மற்றும் வாய்பேசாதோர்க்கான மேல்நிலைப் பள்ளி உள்ளது. அதில், மாணவ, மாணவியர் மற்றும் ஊழியர்கள் என, 140 பேர் உள்ளனர்.நேற்று முன்தினம், அங்கு உள்ள நான்கு மாணவ, மாணவியர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். உடனே, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்த்தனர்.தகவலையடுத்து, மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அந்த பள்ளியை ஆய்வு செய்தனர்.சுகாதார பாதிப்பு பகுதிகளை, மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: காய்ச்சல் பாதிக்கப்பட்ட நாளில், மாணவர்களுக்கு பிரியாணி வழங்கி உள்ளனர். மழை நேரத்தில், சிலருக்கு பிரியாணியால் ஒவ்வாமை ஏற்படும். சாதாரண காய்ச்சல் தான். சுகாதார தடுப்பு நடவடிக்கை குறித்து, பள்ளி நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கி உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

4 பேருக்கு டெங்கு அறிகுறி

திருத்தணி அரசு மருத்துவமனையில், கலெக்டர் வீரராகவ ராவ் மற்றும் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் மோகனன் ஆகியோர், நேற்று இரவு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கலெக்டர் கூறியதாவது:மாவட்டத்தில், சிலருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி தெரிய வந்துள்ளது. திருத்தணி அரசு மருத்துவமனையில், இன்று (நேற்று) 56 பேருக்கு, ரத்தப் பரிசோதனை செய்ததில், நான்கு பேருக்கு டெங்கு அறிகுறி இருந்தது தெரியவந்துள்ளது.டெங்குவை எளிதில் குணப்படுத்திவிடலாம்; யாரும் பீதி அடைய வேண்டாம். நோய் எதிர்ப்பு சக்திக்கு, அனைவரும் நிலவேம்பு கஷாயம் குடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment