FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, November 5, 2015

எம்.ஜி.ஆர்., காதுகேளாதோர் பள்ளியில் நான்கு மாணவர்களுக்கு மர்ம காய்ச்சல்

05.11.2015, சென்னை : 
எம்.ஜி.ஆர்., நினைவு இல்ல, காதுகேளாதோர் பள்ளி மாணவர்கள் நான்கு பேர், மர்மக் காய்ச்சலால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

மணப்பாக்கம், எம்.ஜி.ஆர்., நினைவு இல்லத்தில், காதுகேளாத மற்றும் வாய்பேசாதோர்க்கான மேல்நிலைப் பள்ளி உள்ளது. அதில், மாணவ, மாணவியர் மற்றும் ஊழியர்கள் என, 140 பேர் உள்ளனர்.நேற்று முன்தினம், அங்கு உள்ள நான்கு மாணவ, மாணவியர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். உடனே, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்த்தனர்.தகவலையடுத்து, மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அந்த பள்ளியை ஆய்வு செய்தனர்.சுகாதார பாதிப்பு பகுதிகளை, மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: காய்ச்சல் பாதிக்கப்பட்ட நாளில், மாணவர்களுக்கு பிரியாணி வழங்கி உள்ளனர். மழை நேரத்தில், சிலருக்கு பிரியாணியால் ஒவ்வாமை ஏற்படும். சாதாரண காய்ச்சல் தான். சுகாதார தடுப்பு நடவடிக்கை குறித்து, பள்ளி நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கி உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

4 பேருக்கு டெங்கு அறிகுறி

திருத்தணி அரசு மருத்துவமனையில், கலெக்டர் வீரராகவ ராவ் மற்றும் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் மோகனன் ஆகியோர், நேற்று இரவு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கலெக்டர் கூறியதாவது:மாவட்டத்தில், சிலருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி தெரிய வந்துள்ளது. திருத்தணி அரசு மருத்துவமனையில், இன்று (நேற்று) 56 பேருக்கு, ரத்தப் பரிசோதனை செய்ததில், நான்கு பேருக்கு டெங்கு அறிகுறி இருந்தது தெரியவந்துள்ளது.டெங்குவை எளிதில் குணப்படுத்திவிடலாம்; யாரும் பீதி அடைய வேண்டாம். நோய் எதிர்ப்பு சக்திக்கு, அனைவரும் நிலவேம்பு கஷாயம் குடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment