FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Friday, November 27, 2015

ரயிலில் படுக்கை வசதி முன்பதிவு: மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய சலுகை

புது தில்லி,, 27 November 2015
ரயிலில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்றவாறு படுக்கை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ரயில்வே துறை சார்பில் புதிய சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரயில்களில் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றனர். ஒரு பிரிவினருக்கு, பயணத்தின்போது உதவிக்கு ஒரு நபர் கட்டாயம் இருக்க வேண்டும். மற்றொரு பிரிவினர், விரும்பினால் உதவிக்கு ஒரு நபரை அழைத்து வரலாம். இரண்டு வகையிலான மாற்றுத் திறனாளிகளுக்கும், அவர்களின் உதவிக்காக வரும் நபருக்கும் இனி ஒரே பெட்டியில் முறையே கீழ் படுக்கையும், நடுப் படுக்கையும் வழங்கப்படும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டின்கீழ் ரயிலில் இடம் இல்லையென்றாலும், அவர்களுக்கு பொதுப் பிரிவு பெட்டிகளில் இந்த வசதி செய்து தரப்படும். இந்தப் புதிய விதிமுறை வரும் டிசம்பர் 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment