FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Friday, November 27, 2015

ரயிலில் படுக்கை வசதி முன்பதிவு: மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய சலுகை

புது தில்லி,, 27 November 2015
ரயிலில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்றவாறு படுக்கை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ரயில்வே துறை சார்பில் புதிய சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரயில்களில் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றனர். ஒரு பிரிவினருக்கு, பயணத்தின்போது உதவிக்கு ஒரு நபர் கட்டாயம் இருக்க வேண்டும். மற்றொரு பிரிவினர், விரும்பினால் உதவிக்கு ஒரு நபரை அழைத்து வரலாம். இரண்டு வகையிலான மாற்றுத் திறனாளிகளுக்கும், அவர்களின் உதவிக்காக வரும் நபருக்கும் இனி ஒரே பெட்டியில் முறையே கீழ் படுக்கையும், நடுப் படுக்கையும் வழங்கப்படும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டின்கீழ் ரயிலில் இடம் இல்லையென்றாலும், அவர்களுக்கு பொதுப் பிரிவு பெட்டிகளில் இந்த வசதி செய்து தரப்படும். இந்தப் புதிய விதிமுறை வரும் டிசம்பர் 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment