FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, November 27, 2015

ரயிலில் படுக்கை வசதி முன்பதிவு: மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய சலுகை

புது தில்லி,, 27 November 2015
ரயிலில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்றவாறு படுக்கை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ரயில்வே துறை சார்பில் புதிய சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரயில்களில் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றனர். ஒரு பிரிவினருக்கு, பயணத்தின்போது உதவிக்கு ஒரு நபர் கட்டாயம் இருக்க வேண்டும். மற்றொரு பிரிவினர், விரும்பினால் உதவிக்கு ஒரு நபரை அழைத்து வரலாம். இரண்டு வகையிலான மாற்றுத் திறனாளிகளுக்கும், அவர்களின் உதவிக்காக வரும் நபருக்கும் இனி ஒரே பெட்டியில் முறையே கீழ் படுக்கையும், நடுப் படுக்கையும் வழங்கப்படும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டின்கீழ் ரயிலில் இடம் இல்லையென்றாலும், அவர்களுக்கு பொதுப் பிரிவு பெட்டிகளில் இந்த வசதி செய்து தரப்படும். இந்தப் புதிய விதிமுறை வரும் டிசம்பர் 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment