FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Sunday, November 1, 2015

புதுவாழ்வுத் திட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் குழுக்களுக்கு ரூ.12.58 கோடி கடனுதவி: ஆட்சியர் தகவல்

மதுரை, 01 November 2015
புதுவாழ்வுத் திட்டத்தில் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.12.58 கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் புதுவாழ்வுத் திட்டம் 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் இதன் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தலைமையில் வியாழக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

இதில் ஆட்சியர் பேசியது: மதுரை மாவட்டத்தில் 4 ஒன்றியங்களில் 132 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2,195 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. இக்குழுக்களுக்கு உள்கடன் ஆதார நிதியாக ரூ.1.25 கோடி வழங்கப்பட்டது. வங்கிக் கடனாக ரூ.11.33 கோடி பெறப்பட்டுள்ளது என்றார்.

இக்கூட்டத்தில் சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா, தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலர் ரேவதி, முன்னோடி வங்கி மேலாளர் முருகபிரபு, புதுவாழ்வு திட்ட மேலாளர் சுபாஷ் பாபுநாத் மங்களம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment