FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, November 1, 2015

புதுவாழ்வுத் திட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் குழுக்களுக்கு ரூ.12.58 கோடி கடனுதவி: ஆட்சியர் தகவல்

மதுரை, 01 November 2015
புதுவாழ்வுத் திட்டத்தில் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.12.58 கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் புதுவாழ்வுத் திட்டம் 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் இதன் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தலைமையில் வியாழக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

இதில் ஆட்சியர் பேசியது: மதுரை மாவட்டத்தில் 4 ஒன்றியங்களில் 132 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2,195 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. இக்குழுக்களுக்கு உள்கடன் ஆதார நிதியாக ரூ.1.25 கோடி வழங்கப்பட்டது. வங்கிக் கடனாக ரூ.11.33 கோடி பெறப்பட்டுள்ளது என்றார்.

இக்கூட்டத்தில் சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா, தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலர் ரேவதி, முன்னோடி வங்கி மேலாளர் முருகபிரபு, புதுவாழ்வு திட்ட மேலாளர் சுபாஷ் பாபுநாத் மங்களம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment