FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, November 1, 2015

புதுவாழ்வுத் திட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் குழுக்களுக்கு ரூ.12.58 கோடி கடனுதவி: ஆட்சியர் தகவல்

மதுரை, 01 November 2015
புதுவாழ்வுத் திட்டத்தில் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.12.58 கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் புதுவாழ்வுத் திட்டம் 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் இதன் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தலைமையில் வியாழக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

இதில் ஆட்சியர் பேசியது: மதுரை மாவட்டத்தில் 4 ஒன்றியங்களில் 132 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2,195 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. இக்குழுக்களுக்கு உள்கடன் ஆதார நிதியாக ரூ.1.25 கோடி வழங்கப்பட்டது. வங்கிக் கடனாக ரூ.11.33 கோடி பெறப்பட்டுள்ளது என்றார்.

இக்கூட்டத்தில் சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா, தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலர் ரேவதி, முன்னோடி வங்கி மேலாளர் முருகபிரபு, புதுவாழ்வு திட்ட மேலாளர் சுபாஷ் பாபுநாத் மங்களம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment