FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, November 27, 2015

மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம்: மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

திருச்சி, 27 November 2015
விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விலையில்லா மோட்டார் பொருத்தியதையல் இயந்திரம் பெற 18 முதல் 45 வயதுக்குள்பட்டோர், இரு கைகளும் நல்ல நிலையில் உள்ள கால்கள் பாதிக்கப்பட்டோர், காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்போர் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், அரசு, அரசு உதவி பெறும், தனியார் தையல் பயிற்சி நிலையங்களில் தையல் பயிற்சி பெற்றமைக்கான சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், கண்டோன்மென்ட், திருச்சி -1 (0431-2412590) என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment