FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Monday, November 23, 2015

மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீடு: போலி ஆவணங்கள் மூலம் 10 பேர் பணி நியமனம்: உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

மதுரை , 21 November 2015
திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் அரசுப் பணியில் சேர்ந்தவர்களில் 10 பேர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசுத் தரப்பு வழக்குரைஞர் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம் நாரணம்பாள்புரத்தைச் சேர்ந்த சண்முகம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில்,

மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் பலர் அரசுப் பணியில் சேர்ந்துள்ளனர். இதனால் உண்மையான மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் போலியான ஆவணங்களை சமர்பித்து பலர் வேலைக்குச் சேர்ந்துள்ளனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் செல்வராஜ், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் 105 பேர் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் அரசுப் பணியில் உள்ளனர். போலி ஆவணங்களைச் சமர்பித்து மருத்துவ அலுவலரிடம் ஒப்புதல் பெற முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கூறிய 105 பேரில் 71 பேர் போலி ஆவணங்கள் மூலம் பணிக்குச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகம் உள்ளது. இதில் 10 பேர் போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மேலும் விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

அரசுத் தரப்பு வழக்குரைஞரின் பதிலை பதிவு செய்த நீதிபதிகள்,

இதுதொடர்பாக தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதன்மைச் செயலர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருநெல்வேலி மாவட்ட சிபிசிஐடி டிஎஸ்பி உள்ளிட்டோர் 3 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment