FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Monday, November 23, 2015

மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீடு: போலி ஆவணங்கள் மூலம் 10 பேர் பணி நியமனம்: உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

மதுரை , 21 November 2015
திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் அரசுப் பணியில் சேர்ந்தவர்களில் 10 பேர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசுத் தரப்பு வழக்குரைஞர் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம் நாரணம்பாள்புரத்தைச் சேர்ந்த சண்முகம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில்,

மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் பலர் அரசுப் பணியில் சேர்ந்துள்ளனர். இதனால் உண்மையான மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் போலியான ஆவணங்களை சமர்பித்து பலர் வேலைக்குச் சேர்ந்துள்ளனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் செல்வராஜ், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் 105 பேர் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் அரசுப் பணியில் உள்ளனர். போலி ஆவணங்களைச் சமர்பித்து மருத்துவ அலுவலரிடம் ஒப்புதல் பெற முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கூறிய 105 பேரில் 71 பேர் போலி ஆவணங்கள் மூலம் பணிக்குச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகம் உள்ளது. இதில் 10 பேர் போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மேலும் விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

அரசுத் தரப்பு வழக்குரைஞரின் பதிலை பதிவு செய்த நீதிபதிகள்,

இதுதொடர்பாக தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதன்மைச் செயலர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருநெல்வேலி மாவட்ட சிபிசிஐடி டிஎஸ்பி உள்ளிட்டோர் 3 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment