FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, November 23, 2015

மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீடு: போலி ஆவணங்கள் மூலம் 10 பேர் பணி நியமனம்: உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

மதுரை , 21 November 2015
திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் அரசுப் பணியில் சேர்ந்தவர்களில் 10 பேர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசுத் தரப்பு வழக்குரைஞர் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம் நாரணம்பாள்புரத்தைச் சேர்ந்த சண்முகம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில்,

மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் பலர் அரசுப் பணியில் சேர்ந்துள்ளனர். இதனால் உண்மையான மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் போலியான ஆவணங்களை சமர்பித்து பலர் வேலைக்குச் சேர்ந்துள்ளனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் செல்வராஜ், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் 105 பேர் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் அரசுப் பணியில் உள்ளனர். போலி ஆவணங்களைச் சமர்பித்து மருத்துவ அலுவலரிடம் ஒப்புதல் பெற முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கூறிய 105 பேரில் 71 பேர் போலி ஆவணங்கள் மூலம் பணிக்குச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகம் உள்ளது. இதில் 10 பேர் போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மேலும் விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

அரசுத் தரப்பு வழக்குரைஞரின் பதிலை பதிவு செய்த நீதிபதிகள்,

இதுதொடர்பாக தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதன்மைச் செயலர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருநெல்வேலி மாவட்ட சிபிசிஐடி டிஎஸ்பி உள்ளிட்டோர் 3 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment