FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Monday, November 23, 2015

மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீடு: போலி ஆவணங்கள் மூலம் 10 பேர் பணி நியமனம்: உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

மதுரை , 21 November 2015
திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் அரசுப் பணியில் சேர்ந்தவர்களில் 10 பேர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசுத் தரப்பு வழக்குரைஞர் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம் நாரணம்பாள்புரத்தைச் சேர்ந்த சண்முகம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில்,

மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் பலர் அரசுப் பணியில் சேர்ந்துள்ளனர். இதனால் உண்மையான மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் போலியான ஆவணங்களை சமர்பித்து பலர் வேலைக்குச் சேர்ந்துள்ளனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் செல்வராஜ், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் 105 பேர் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் அரசுப் பணியில் உள்ளனர். போலி ஆவணங்களைச் சமர்பித்து மருத்துவ அலுவலரிடம் ஒப்புதல் பெற முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கூறிய 105 பேரில் 71 பேர் போலி ஆவணங்கள் மூலம் பணிக்குச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகம் உள்ளது. இதில் 10 பேர் போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மேலும் விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

அரசுத் தரப்பு வழக்குரைஞரின் பதிலை பதிவு செய்த நீதிபதிகள்,

இதுதொடர்பாக தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதன்மைச் செயலர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருநெல்வேலி மாவட்ட சிபிசிஐடி டிஎஸ்பி உள்ளிட்டோர் 3 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment