FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, November 27, 2015

இணையதளத்தில் முன்பதிவு: ரயில் பயணச் சீட்டு பெற முடியாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளிகள்

சென்னை, 27 November 2015

முன் பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட பிரத்யேக அடையாள அட்டையைப் பயன்படுத்தி, ரயில் நிலைய கவுன்ட்டர்களில் மட்டுமே பயணச் சீட்டை பெற முடிகிறது, இணையதளத்தில் முன்பதிவு செய்ய முடியவில்லை என்று மாற்றுத் திறனாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
மாற்றுத் திறனாளிகளால் ரயில் நிலையங்களுக்குச் சென்று பயணச் சீட்டு பெறுவது சிரமம் என்பதற்காகவே இணையத்தில் சலுகை விலையில் பயணச் சீட்டு பெறும் முறையை ரயில்வே துறை கொண்டுவந்தது. அதற்காக, பிரத்யேகமான அடையாள அட்டையை ஏப்ரலில் வழங்கியது. பல மாதங்கள் ஆகியும், இந்தத் திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரமால் உள்ளது.
எப்படி, யாரிடம் பெறுவது?
இதன்படி, மாற்றுத் திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய புகைப்படத்துடன் கூடிய தனி அடையாள அட்டை வழங்கப்படும். இதற்கு மருத்துவச் சான்றிதழ், புகைப்படத்துடன் கூடிய ஏதேனும் அடையாள அட்டை, வயது வரம்பு சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், 2 புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் அந்தந்த ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வணிகப் பிரிவை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டது.
இல்லையெனில், அலுவலக முகவரிக்கு சான்றிதழ்களின் நகல்களை தபாலில் அனுப்பலாம் எனவும் கூறப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்பு, விண்ணப்பித்தோருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதை வேறொரு பயணிக்காகப் பயன்படுத்தக்கூடாது. ஒவ்வொரு ரயில் பயணத்தின் போதும் அசல் அடையாள அட்டையையே பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
அட்டை இருந்தும் பயனில்லை?
இருப்பினும், அடையாள அட்டை இருந்தும் பயனின்றி இல்லாமல் இருக்கிறது என்கின்றனர் மாற்றுத்திறனாளிகள்.
இதுகுறித்து மாற்றுத்திறனாளி சதீஷ் குமார் கூறியது:
ரயிலில் பயணம் செய்வதற்காக ஐஆர்சிடிசி இணையதளத்துக்கு சென்று பயணச் சீட்டு சலுகை விலையில் எடுக்க முன்பதிவு செய்ய முயற்சித்தேன், ஆனால் முடியவில்லை. இதையடுத்து, கவுன்ட்டரில் பயணச் சீட்டை முன்பதிவு செய்தேன்.
பல மாதங்களாக இந்த நிலை நீடிப்பது தொடர்பாக, ரயில்வே வணிகப் பிரிவில் முறையிட்டேன். அவர்கள் கூறியபடி, ஐஆர்சிடிசி அதிகாரிகளிடமும் முறையிட்டேன். பல யோசனைகள் சொன்னார்கள். அதனடிப்படையிலும் முன்பதிவு செய்ய முயற்சித்தேன், முடியவில்லை.
நேரில் தான் சென்று பயணச் சீட்டு பெற வேண்டுமென்றால் இந்த அடையாள அட்டை எதற்கு? இதற்கு தீர்வுதான் என்ன? என்றார் சதீஷ் குமார்.
இது குறித்து ரயில்வே வட்டாரத்தில் விசாரித்ததில், மாற்றுத் திறனாளிகளின் விவரங்கள் கணினியில் சேர்க்கப்பட்டுவிட்டன. எனினும், தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் இருந்தால், அவை உடனடியாக சரி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment