FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Friday, November 27, 2015

இணையதளத்தில் முன்பதிவு: ரயில் பயணச் சீட்டு பெற முடியாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளிகள்

சென்னை, 27 November 2015

முன் பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட பிரத்யேக அடையாள அட்டையைப் பயன்படுத்தி, ரயில் நிலைய கவுன்ட்டர்களில் மட்டுமே பயணச் சீட்டை பெற முடிகிறது, இணையதளத்தில் முன்பதிவு செய்ய முடியவில்லை என்று மாற்றுத் திறனாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
மாற்றுத் திறனாளிகளால் ரயில் நிலையங்களுக்குச் சென்று பயணச் சீட்டு பெறுவது சிரமம் என்பதற்காகவே இணையத்தில் சலுகை விலையில் பயணச் சீட்டு பெறும் முறையை ரயில்வே துறை கொண்டுவந்தது. அதற்காக, பிரத்யேகமான அடையாள அட்டையை ஏப்ரலில் வழங்கியது. பல மாதங்கள் ஆகியும், இந்தத் திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரமால் உள்ளது.
எப்படி, யாரிடம் பெறுவது?
இதன்படி, மாற்றுத் திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய புகைப்படத்துடன் கூடிய தனி அடையாள அட்டை வழங்கப்படும். இதற்கு மருத்துவச் சான்றிதழ், புகைப்படத்துடன் கூடிய ஏதேனும் அடையாள அட்டை, வயது வரம்பு சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், 2 புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் அந்தந்த ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வணிகப் பிரிவை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டது.
இல்லையெனில், அலுவலக முகவரிக்கு சான்றிதழ்களின் நகல்களை தபாலில் அனுப்பலாம் எனவும் கூறப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்பு, விண்ணப்பித்தோருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதை வேறொரு பயணிக்காகப் பயன்படுத்தக்கூடாது. ஒவ்வொரு ரயில் பயணத்தின் போதும் அசல் அடையாள அட்டையையே பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
அட்டை இருந்தும் பயனில்லை?
இருப்பினும், அடையாள அட்டை இருந்தும் பயனின்றி இல்லாமல் இருக்கிறது என்கின்றனர் மாற்றுத்திறனாளிகள்.
இதுகுறித்து மாற்றுத்திறனாளி சதீஷ் குமார் கூறியது:
ரயிலில் பயணம் செய்வதற்காக ஐஆர்சிடிசி இணையதளத்துக்கு சென்று பயணச் சீட்டு சலுகை விலையில் எடுக்க முன்பதிவு செய்ய முயற்சித்தேன், ஆனால் முடியவில்லை. இதையடுத்து, கவுன்ட்டரில் பயணச் சீட்டை முன்பதிவு செய்தேன்.
பல மாதங்களாக இந்த நிலை நீடிப்பது தொடர்பாக, ரயில்வே வணிகப் பிரிவில் முறையிட்டேன். அவர்கள் கூறியபடி, ஐஆர்சிடிசி அதிகாரிகளிடமும் முறையிட்டேன். பல யோசனைகள் சொன்னார்கள். அதனடிப்படையிலும் முன்பதிவு செய்ய முயற்சித்தேன், முடியவில்லை.
நேரில் தான் சென்று பயணச் சீட்டு பெற வேண்டுமென்றால் இந்த அடையாள அட்டை எதற்கு? இதற்கு தீர்வுதான் என்ன? என்றார் சதீஷ் குமார்.
இது குறித்து ரயில்வே வட்டாரத்தில் விசாரித்ததில், மாற்றுத் திறனாளிகளின் விவரங்கள் கணினியில் சேர்க்கப்பட்டுவிட்டன. எனினும், தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் இருந்தால், அவை உடனடியாக சரி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment