FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, November 27, 2015

இணையதளத்தில் முன்பதிவு: ரயில் பயணச் சீட்டு பெற முடியாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளிகள்

சென்னை, 27 November 2015

முன் பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட பிரத்யேக அடையாள அட்டையைப் பயன்படுத்தி, ரயில் நிலைய கவுன்ட்டர்களில் மட்டுமே பயணச் சீட்டை பெற முடிகிறது, இணையதளத்தில் முன்பதிவு செய்ய முடியவில்லை என்று மாற்றுத் திறனாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
மாற்றுத் திறனாளிகளால் ரயில் நிலையங்களுக்குச் சென்று பயணச் சீட்டு பெறுவது சிரமம் என்பதற்காகவே இணையத்தில் சலுகை விலையில் பயணச் சீட்டு பெறும் முறையை ரயில்வே துறை கொண்டுவந்தது. அதற்காக, பிரத்யேகமான அடையாள அட்டையை ஏப்ரலில் வழங்கியது. பல மாதங்கள் ஆகியும், இந்தத் திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரமால் உள்ளது.
எப்படி, யாரிடம் பெறுவது?
இதன்படி, மாற்றுத் திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய புகைப்படத்துடன் கூடிய தனி அடையாள அட்டை வழங்கப்படும். இதற்கு மருத்துவச் சான்றிதழ், புகைப்படத்துடன் கூடிய ஏதேனும் அடையாள அட்டை, வயது வரம்பு சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், 2 புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் அந்தந்த ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வணிகப் பிரிவை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டது.
இல்லையெனில், அலுவலக முகவரிக்கு சான்றிதழ்களின் நகல்களை தபாலில் அனுப்பலாம் எனவும் கூறப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்பு, விண்ணப்பித்தோருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதை வேறொரு பயணிக்காகப் பயன்படுத்தக்கூடாது. ஒவ்வொரு ரயில் பயணத்தின் போதும் அசல் அடையாள அட்டையையே பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
அட்டை இருந்தும் பயனில்லை?
இருப்பினும், அடையாள அட்டை இருந்தும் பயனின்றி இல்லாமல் இருக்கிறது என்கின்றனர் மாற்றுத்திறனாளிகள்.
இதுகுறித்து மாற்றுத்திறனாளி சதீஷ் குமார் கூறியது:
ரயிலில் பயணம் செய்வதற்காக ஐஆர்சிடிசி இணையதளத்துக்கு சென்று பயணச் சீட்டு சலுகை விலையில் எடுக்க முன்பதிவு செய்ய முயற்சித்தேன், ஆனால் முடியவில்லை. இதையடுத்து, கவுன்ட்டரில் பயணச் சீட்டை முன்பதிவு செய்தேன்.
பல மாதங்களாக இந்த நிலை நீடிப்பது தொடர்பாக, ரயில்வே வணிகப் பிரிவில் முறையிட்டேன். அவர்கள் கூறியபடி, ஐஆர்சிடிசி அதிகாரிகளிடமும் முறையிட்டேன். பல யோசனைகள் சொன்னார்கள். அதனடிப்படையிலும் முன்பதிவு செய்ய முயற்சித்தேன், முடியவில்லை.
நேரில் தான் சென்று பயணச் சீட்டு பெற வேண்டுமென்றால் இந்த அடையாள அட்டை எதற்கு? இதற்கு தீர்வுதான் என்ன? என்றார் சதீஷ் குமார்.
இது குறித்து ரயில்வே வட்டாரத்தில் விசாரித்ததில், மாற்றுத் திறனாளிகளின் விவரங்கள் கணினியில் சேர்க்கப்பட்டுவிட்டன. எனினும், தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் இருந்தால், அவை உடனடியாக சரி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment