FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, November 21, 2015

சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் வைப்பு தொகை: ரூ.3,000 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயம்

20.11.2015, சேலம்: 
''சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வைப்புத்தொகையை, 3,000 கோடி ரூபாயாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என, தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கிகளின் தலைவர் இளங்கோவன் தெரிவித்தார்.

அவர், நிருபர்களிடம் கூறியதாவது: சேலம், நேரு கலையரங்கில், 62வது அனைத்திந்திய மாநில அளவிலான கூட்டுறவு வார விழா நாளை(இன்று) நடக்கிறது. மாநில அளவிலான விழா, முதன்முறையாக சேலத்தில் நடப்பது குறிப்பிடத்தக்கது. விழாவில், மாற்றுத்திறனாளிகள் கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், சிறு வணிக கடன், பால்பண்ணை கடன், ஆடு, கோழி பண்ணை, பட்டுப்பூச்சி வளர்ப்பு கடன், விவசாய கருவிகள் கடன் என, 1,419 பயனாளிகளுக்கு, 5.6 கோடி ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். சேலம், நாமக்கல் மாவட்டத்தில், மத்திய கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாட்டில், 60 கிளைகள் செயல்படுகின்றன. தற்போதைய நிலையில், மத்திய கூட்டுறவு வங்கியின் வைப்புத்தொகை, 2,956 கோடி ரூபாய். கடந்த ஆண்டை காட்டிலும், 120 கோடி ரூபாய் வைப்புத்தொகை அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில், 3,000 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம். அதை எட்டிப் பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு, 150 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கியதற்காக, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு, தமிழக அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment