FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, November 21, 2015

சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் வைப்பு தொகை: ரூ.3,000 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயம்

20.11.2015, சேலம்: 
''சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வைப்புத்தொகையை, 3,000 கோடி ரூபாயாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என, தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கிகளின் தலைவர் இளங்கோவன் தெரிவித்தார்.

அவர், நிருபர்களிடம் கூறியதாவது: சேலம், நேரு கலையரங்கில், 62வது அனைத்திந்திய மாநில அளவிலான கூட்டுறவு வார விழா நாளை(இன்று) நடக்கிறது. மாநில அளவிலான விழா, முதன்முறையாக சேலத்தில் நடப்பது குறிப்பிடத்தக்கது. விழாவில், மாற்றுத்திறனாளிகள் கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், சிறு வணிக கடன், பால்பண்ணை கடன், ஆடு, கோழி பண்ணை, பட்டுப்பூச்சி வளர்ப்பு கடன், விவசாய கருவிகள் கடன் என, 1,419 பயனாளிகளுக்கு, 5.6 கோடி ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். சேலம், நாமக்கல் மாவட்டத்தில், மத்திய கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாட்டில், 60 கிளைகள் செயல்படுகின்றன. தற்போதைய நிலையில், மத்திய கூட்டுறவு வங்கியின் வைப்புத்தொகை, 2,956 கோடி ரூபாய். கடந்த ஆண்டை காட்டிலும், 120 கோடி ரூபாய் வைப்புத்தொகை அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில், 3,000 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம். அதை எட்டிப் பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு, 150 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கியதற்காக, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு, தமிழக அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment