FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, November 21, 2015

சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் வைப்பு தொகை: ரூ.3,000 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயம்

20.11.2015, சேலம்: 
''சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வைப்புத்தொகையை, 3,000 கோடி ரூபாயாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என, தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கிகளின் தலைவர் இளங்கோவன் தெரிவித்தார்.

அவர், நிருபர்களிடம் கூறியதாவது: சேலம், நேரு கலையரங்கில், 62வது அனைத்திந்திய மாநில அளவிலான கூட்டுறவு வார விழா நாளை(இன்று) நடக்கிறது. மாநில அளவிலான விழா, முதன்முறையாக சேலத்தில் நடப்பது குறிப்பிடத்தக்கது. விழாவில், மாற்றுத்திறனாளிகள் கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், சிறு வணிக கடன், பால்பண்ணை கடன், ஆடு, கோழி பண்ணை, பட்டுப்பூச்சி வளர்ப்பு கடன், விவசாய கருவிகள் கடன் என, 1,419 பயனாளிகளுக்கு, 5.6 கோடி ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். சேலம், நாமக்கல் மாவட்டத்தில், மத்திய கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாட்டில், 60 கிளைகள் செயல்படுகின்றன. தற்போதைய நிலையில், மத்திய கூட்டுறவு வங்கியின் வைப்புத்தொகை, 2,956 கோடி ரூபாய். கடந்த ஆண்டை காட்டிலும், 120 கோடி ரூபாய் வைப்புத்தொகை அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில், 3,000 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம். அதை எட்டிப் பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு, 150 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கியதற்காக, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு, தமிழக அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment