FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, November 5, 2015

அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள்

அரியலூர், 05 November 2015
அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் புதன்கிழமை நடைபெற்றன.

போட்டியை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ். குமார் தொடங்கிவைத்தார். போட்டிகள் 4 பிரிவுகளில் தனித்தனியாக நடத்தப்பட்டது.

கை, கால் ஊனமுற்றோருக்கு 100, 50 மீ. ஓட்டம், குண்டு எறிதல், சக்கர நாற்காலி, இறகு பந்து மற்றும் மேசை பந்து ஆகிய போட்டிகளும், பார்வையற்றோருக்கு 50, 100 மீ. ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல், கையுந்து பந்து போட்டிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50, 100 மீ. ஓட்டம், பந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் எறிபந்து போன்ற விளையாட்டும், காது கேளாதோருக்கு 100, 200, 400 மீ. ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், கபடி போட்டிகளும் நடைபெற்றன.

போட்டிகளில் அரியலூர், திருமானூர், தா.பழூர், ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய ஒன்றியங்களில் இருந்து 169 மாணவ, மாணவிகள் வயதுவரம்பின்றி பங்கேற்றனர். மாலையில் நடைபெற்ற விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கையுந்து பந்து பயிற்றுநர் ஆர். பொற்கொடி, பளுதூக்கும் பயிற்றுநர் ஆர். சதீஷ், கைப்பந்து பயிற்றுநர் எஸ். சிவரஞ்சன், அன்பகம் சிறப்பு பள்ளி ஆசிரியைகள் எம். ஜெரோம் எமிலியானா பவுலின், எஸ். ரஞ்சிதா, எம். எலிசபெத் ராணி, ஏ. ஆரோக்கியமேரி, திருசக்திவேலன், கபிலன் ஆகியோர் போட்டிகளுக்கான ஏற்பாடுளை செய்திருந்தனர்.

No comments:

Post a Comment