FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, November 5, 2015

அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள்

அரியலூர், 05 November 2015
அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் புதன்கிழமை நடைபெற்றன.

போட்டியை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ். குமார் தொடங்கிவைத்தார். போட்டிகள் 4 பிரிவுகளில் தனித்தனியாக நடத்தப்பட்டது.

கை, கால் ஊனமுற்றோருக்கு 100, 50 மீ. ஓட்டம், குண்டு எறிதல், சக்கர நாற்காலி, இறகு பந்து மற்றும் மேசை பந்து ஆகிய போட்டிகளும், பார்வையற்றோருக்கு 50, 100 மீ. ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல், கையுந்து பந்து போட்டிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50, 100 மீ. ஓட்டம், பந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் எறிபந்து போன்ற விளையாட்டும், காது கேளாதோருக்கு 100, 200, 400 மீ. ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், கபடி போட்டிகளும் நடைபெற்றன.

போட்டிகளில் அரியலூர், திருமானூர், தா.பழூர், ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய ஒன்றியங்களில் இருந்து 169 மாணவ, மாணவிகள் வயதுவரம்பின்றி பங்கேற்றனர். மாலையில் நடைபெற்ற விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கையுந்து பந்து பயிற்றுநர் ஆர். பொற்கொடி, பளுதூக்கும் பயிற்றுநர் ஆர். சதீஷ், கைப்பந்து பயிற்றுநர் எஸ். சிவரஞ்சன், அன்பகம் சிறப்பு பள்ளி ஆசிரியைகள் எம். ஜெரோம் எமிலியானா பவுலின், எஸ். ரஞ்சிதா, எம். எலிசபெத் ராணி, ஏ. ஆரோக்கியமேரி, திருசக்திவேலன், கபிலன் ஆகியோர் போட்டிகளுக்கான ஏற்பாடுளை செய்திருந்தனர்.

No comments:

Post a Comment