FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, November 5, 2015

அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள்

அரியலூர், 05 November 2015
அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் புதன்கிழமை நடைபெற்றன.

போட்டியை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ். குமார் தொடங்கிவைத்தார். போட்டிகள் 4 பிரிவுகளில் தனித்தனியாக நடத்தப்பட்டது.

கை, கால் ஊனமுற்றோருக்கு 100, 50 மீ. ஓட்டம், குண்டு எறிதல், சக்கர நாற்காலி, இறகு பந்து மற்றும் மேசை பந்து ஆகிய போட்டிகளும், பார்வையற்றோருக்கு 50, 100 மீ. ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல், கையுந்து பந்து போட்டிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50, 100 மீ. ஓட்டம், பந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் எறிபந்து போன்ற விளையாட்டும், காது கேளாதோருக்கு 100, 200, 400 மீ. ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், கபடி போட்டிகளும் நடைபெற்றன.

போட்டிகளில் அரியலூர், திருமானூர், தா.பழூர், ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய ஒன்றியங்களில் இருந்து 169 மாணவ, மாணவிகள் வயதுவரம்பின்றி பங்கேற்றனர். மாலையில் நடைபெற்ற விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கையுந்து பந்து பயிற்றுநர் ஆர். பொற்கொடி, பளுதூக்கும் பயிற்றுநர் ஆர். சதீஷ், கைப்பந்து பயிற்றுநர் எஸ். சிவரஞ்சன், அன்பகம் சிறப்பு பள்ளி ஆசிரியைகள் எம். ஜெரோம் எமிலியானா பவுலின், எஸ். ரஞ்சிதா, எம். எலிசபெத் ராணி, ஏ. ஆரோக்கியமேரி, திருசக்திவேலன், கபிலன் ஆகியோர் போட்டிகளுக்கான ஏற்பாடுளை செய்திருந்தனர்.

No comments:

Post a Comment