FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Saturday, February 6, 2016

'1 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ இலக்கு'

04.02.2016, பெங்களூரு,: ''கடந்த, 2011 முதல், 52 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்துள்ளது. 2020க்குள், ஒரு லட்சம் பேருக்கு உதவி செய்வதை இலக்காக நிர்ணயித்துள்ளோம்,'' என, சி.பி.ஆர்.எப்., செயல் இயக்குனர் நிக்கோலஸ் ரெபல்லா தெரிவித்தார்.
சமூகம் சார்ந்த மறுவாழ்வு மன்றம் - சி.பி.ஆர்.எப்., அமைப்பு, 'சாமர்த்தியா 2016' எனும் மாற்றுத்திறனாளிகள் நிகழ்ச்சியை, பெங்களூரு ரிச்மெண்ட் சதுக்கத்தில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லுாரியில் நடத்தியது. செயின்ட் ஜோசப் கல்லுாரியின் துணை முதல்வர் லாரன்ஸ் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
பள்ளி மாணவியர், பலுான்களை பறக்கவிட்டனர். பின், மாற்றுத்திறனாளிகள் தயாரித்த பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டிருந்த ஸ்டால்களை பலரும் பார்த்து பாராட்டினர்.
தமிழகம், கேரளா, மிசோரம், மஹாராஷ்டிரா, அசாம், உத்தரபிரதேசம், ஆந்திரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் மற்றும் கர்நாடகாவின் குல்பர்கா, தொட்டபல்லாபூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பங்கு பெற்றனர்.
சி.பி.ஆர்.எப்., செயல் இயக்குனர் நிக்கோலஸ் ரெபல்லா பேசியதாவது:
மாற்றுத்திறனாளிகளால் எதையும் செய்ய முடியும் என்பதை உலகிற்கு காட்டுவதே எங்களின் நோக்கம். இதுவரை, 52 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்து, அவர்களின் வாழ்க்கையை மேம்பட செய்துள்ளோம். 2020க்குள், ஒரு லட்சம் பேருக்கு உதவி செய்வதே குறிக்கோள்.
அவர்களின் திறமைகளை வெளியே கொண்டு வந்து, அவர்களுக்கு ஏற்ற வேலைகளை ஏற்பாடு செய்து, வாழ்க்கையில் முன்னேற பண உதவி அளிப்பதோடு, கல்வி தரத்தை உயர்த்தும் வகையில், கல்விக்கான கட்டணத்தையும் ஏற்றுக் கொள்வோம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தேவைப்பட்டால், எங்களை, volunteer.cbrf@gmail.com என்ற இ - மெயிலும், 94817 82628 என்ற மொபைலிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.சி.பி.ஆர்.எப்.,பின் துணைத் தலைவர் பவன், ஒருங்கிணைப்பாளர் சீனிவாஸ், செயின்ட் ஜோசப் கல்லுாரி சமூக சேவை துறை கிரண் ஜீவன், அஜிம் பிரேம்ஜி பவுண்டேசன் தலைமை நிர்வாக இயக்குனர் திலீப் ரஞ்சேகர், பயிற்சியாளரான, பார்வையற்ற மாற்றுத்திறனாளி சுதீந்திர குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

சாதனையாளர்கள் 'எக்கச்சக்கம்'
'சாமர்த்தியா 2016' என்ற மாற்றுத்திறனாளிகள் நிகழ்ச்சியில், தங்களாலும் சாதிக்க முடியும் என, ஏராளமானோர் சாதனையாளர்களாக மகுடம் சூடினர்.
l கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், பெய்ங்கொட்டூரைவை சேர்ந்த ஸ்வப்னா அகஸ்டின், 13 ஆண்டுகளாக, 'மவுத் அண்ட் புட் பெயின்டிங் ஆர்ட்ஸ் அசோசியேஷனில்' சேர்ந்து, ஓவியங்களை வரைந்து வருகிறார். இவரது ஓவியங்கள், சுவிட்சர்லாந்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மாற்றுத்திறனாளியான இவர், தன் கால்களால், ஓவியங்கள் வரைந்து, மாதம், 30 ஆயிரம் முதல், 75 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்கள் வரைந்துள்ளார்
l மிசோரம் மாநிலத்தை சேர்ந்த சாமுவேல், 23, இரு கால்களும் இல்லாமல் பிறந்தார். ஏழு ஆண்டுகளாக கம்ப்யூட்டர் கிராப்க்ஸ் படங்களை வரைந்து வருகிறார். இதுவரை, 200க்கும் மேற்பட்ட படங்களை வரைந்துள்ளார். இவர், மாதந்தோறும் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக சம்பாதிக்கிறார். இவர் கூறுகையில், 'என் பெற்றோர் தான், எனக்கு உறுதுணையாக இருந்து, என்னை ஊக்குவிக்கின்றனர்' என்றார்
l பெங்களூருவை சேர்ந்த, 13 வயது மாற்றுத்திறனாளியான யுவங்கா மரியா கியா ரெபல்லோ சிறுமி, 'ரிவாண்டாவில் சந்திக்கும்போது' என்ற சாதனை புத்தகத்தை எழுதியுள்ளார். 150 ரூபாயுள்ள இந்த புத்தகத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தை, தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க முன்வந்துள்ளார்.

No comments:

Post a Comment