FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, February 6, 2016

'1 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ இலக்கு'

04.02.2016, பெங்களூரு,: ''கடந்த, 2011 முதல், 52 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்துள்ளது. 2020க்குள், ஒரு லட்சம் பேருக்கு உதவி செய்வதை இலக்காக நிர்ணயித்துள்ளோம்,'' என, சி.பி.ஆர்.எப்., செயல் இயக்குனர் நிக்கோலஸ் ரெபல்லா தெரிவித்தார்.
சமூகம் சார்ந்த மறுவாழ்வு மன்றம் - சி.பி.ஆர்.எப்., அமைப்பு, 'சாமர்த்தியா 2016' எனும் மாற்றுத்திறனாளிகள் நிகழ்ச்சியை, பெங்களூரு ரிச்மெண்ட் சதுக்கத்தில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லுாரியில் நடத்தியது. செயின்ட் ஜோசப் கல்லுாரியின் துணை முதல்வர் லாரன்ஸ் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
பள்ளி மாணவியர், பலுான்களை பறக்கவிட்டனர். பின், மாற்றுத்திறனாளிகள் தயாரித்த பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டிருந்த ஸ்டால்களை பலரும் பார்த்து பாராட்டினர்.
தமிழகம், கேரளா, மிசோரம், மஹாராஷ்டிரா, அசாம், உத்தரபிரதேசம், ஆந்திரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் மற்றும் கர்நாடகாவின் குல்பர்கா, தொட்டபல்லாபூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பங்கு பெற்றனர்.
சி.பி.ஆர்.எப்., செயல் இயக்குனர் நிக்கோலஸ் ரெபல்லா பேசியதாவது:
மாற்றுத்திறனாளிகளால் எதையும் செய்ய முடியும் என்பதை உலகிற்கு காட்டுவதே எங்களின் நோக்கம். இதுவரை, 52 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்து, அவர்களின் வாழ்க்கையை மேம்பட செய்துள்ளோம். 2020க்குள், ஒரு லட்சம் பேருக்கு உதவி செய்வதே குறிக்கோள்.
அவர்களின் திறமைகளை வெளியே கொண்டு வந்து, அவர்களுக்கு ஏற்ற வேலைகளை ஏற்பாடு செய்து, வாழ்க்கையில் முன்னேற பண உதவி அளிப்பதோடு, கல்வி தரத்தை உயர்த்தும் வகையில், கல்விக்கான கட்டணத்தையும் ஏற்றுக் கொள்வோம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தேவைப்பட்டால், எங்களை, volunteer.cbrf@gmail.com என்ற இ - மெயிலும், 94817 82628 என்ற மொபைலிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.சி.பி.ஆர்.எப்.,பின் துணைத் தலைவர் பவன், ஒருங்கிணைப்பாளர் சீனிவாஸ், செயின்ட் ஜோசப் கல்லுாரி சமூக சேவை துறை கிரண் ஜீவன், அஜிம் பிரேம்ஜி பவுண்டேசன் தலைமை நிர்வாக இயக்குனர் திலீப் ரஞ்சேகர், பயிற்சியாளரான, பார்வையற்ற மாற்றுத்திறனாளி சுதீந்திர குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

சாதனையாளர்கள் 'எக்கச்சக்கம்'
'சாமர்த்தியா 2016' என்ற மாற்றுத்திறனாளிகள் நிகழ்ச்சியில், தங்களாலும் சாதிக்க முடியும் என, ஏராளமானோர் சாதனையாளர்களாக மகுடம் சூடினர்.
l கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், பெய்ங்கொட்டூரைவை சேர்ந்த ஸ்வப்னா அகஸ்டின், 13 ஆண்டுகளாக, 'மவுத் அண்ட் புட் பெயின்டிங் ஆர்ட்ஸ் அசோசியேஷனில்' சேர்ந்து, ஓவியங்களை வரைந்து வருகிறார். இவரது ஓவியங்கள், சுவிட்சர்லாந்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மாற்றுத்திறனாளியான இவர், தன் கால்களால், ஓவியங்கள் வரைந்து, மாதம், 30 ஆயிரம் முதல், 75 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்கள் வரைந்துள்ளார்
l மிசோரம் மாநிலத்தை சேர்ந்த சாமுவேல், 23, இரு கால்களும் இல்லாமல் பிறந்தார். ஏழு ஆண்டுகளாக கம்ப்யூட்டர் கிராப்க்ஸ் படங்களை வரைந்து வருகிறார். இதுவரை, 200க்கும் மேற்பட்ட படங்களை வரைந்துள்ளார். இவர், மாதந்தோறும் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக சம்பாதிக்கிறார். இவர் கூறுகையில், 'என் பெற்றோர் தான், எனக்கு உறுதுணையாக இருந்து, என்னை ஊக்குவிக்கின்றனர்' என்றார்
l பெங்களூருவை சேர்ந்த, 13 வயது மாற்றுத்திறனாளியான யுவங்கா மரியா கியா ரெபல்லோ சிறுமி, 'ரிவாண்டாவில் சந்திக்கும்போது' என்ற சாதனை புத்தகத்தை எழுதியுள்ளார். 150 ரூபாயுள்ள இந்த புத்தகத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தை, தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க முன்வந்துள்ளார்.

No comments:

Post a Comment