FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, February 11, 2016

இரண்டே வார்த்தை நிறைய வெற்றி அவர்தான் DEAF தர்ஷினி




அது ஒரு பெண்களுக்கான கபடி விளையாட்டின் போட்டியில் இறுதிச்சுற்று

போட்டியின் ஆரம்பம் முதலே 'மதர்லேண்ட் கிளப்' அணியை தனது தோளில் சுமந்து, அணியை இறுதிவரை கொண்டு வந்த இளம் வீராங்கனை 'டயானா' என்ற தர்ஷினி மீதுதான் மொத்த பார்வையாளர்களின் எதிர்பார்ப்பும் குவிந்திருந்தது.

அணியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க வேண்டிய பரபரப்பான 'பைனல் ரைடு' , எதிரணி களத்தில் கபடி பாடிச்சென்ற தர்ஷினி ஒரு சிறுத்தை சீறுவது போல பாய்ந்து எதிரணி களத்தை கலக்கி எடுத்து, தன்னை பிடிக்கவந்த இருவரிடமும் பிடிபடாமல் துள்ளி குதித்து பாய்ந்து பறந்து வந்த எல்லைக்கோட்டை தொட்டு அணிக்கு வெற்றி தேடித்தந்த போது எழுந்த கையொலி அரங்கத்தையே அதிரச்செய்தது.

ஆனால் அரங்கத்தை அதிரச்செய்த அந்த கைதட்டல் ஒசையை வீராங்கனை தர்ஷினியால் மட்டும் கேட்கஇயலாது.

காரணம் பிறந்த போதிருந்தே காது கேட்காது பேச்சும் வராது.

தனது இந்த குறைகளை தாண்டி கபடி விளையாட்டில் மாநிலம் அறிந்த வீராங்கனையாக சாதித்துவரும் தர்ஷினி யார்?

கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான பாலகிருஷ்ணன்-ஜெயந்தி தம்பதியினரின் மகள்தான் தர்ஷினி

பெண் குழந்தை வேண்டும் என்று வேண்டி பெற்ற பெண் பேசும்,கேட்கும் திறனில்லாமல் போனது குறி்த்து மிகுந்த மனவேதனை அடைந்தாலும், அதை குழந்தையிடம் காட்டிக்கொள்ளாமல் தன்னம்பிக்கையுடன் வளர்த்தனர்.காது கேட்காத வாய் பேசாத சிறப்பு பள்ளியில் சேர்த்தால் கூட எங்கே வேதனைப்படுவாளோ? என நினைத்து அனைத்து பிள்ளைகளும் படிக்ககூடிய பள்ளியிலேயே படிக்கவைத்தனர்.

தர்ஷினிக்கு படிப்பைவிட விளையாட்டின் மீது அதீத ஈடுபாடு, அதிலும் கபடி விளையாட்டை பார்த்ததில் இருந்து அந்த விளையாட்டின் மீது பெருத்த ஆர்வம்.

பள்ளிகளுக்குள் நடைபெற்ற கபடி விளையாட்டில் தனி ஒருத்தியாய் தர்ஷினி காட்டிய பாய்ச்சலையும் வேகத்தையும் விவேகத்தையும் துறுதுறுப்பையும் பார்த்தவர்கள் கோவை மகேந்திரா கபடி கிளப் நிர்வாகியும் பயிற்சியாளருமான வி்ஸ்வநாதனிடம் கொண்டு போய் சேர்த்தனர்.அப்போது தர்ஷினி ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார் வயது பதினொன்றுதான்.

கபடி விளையாட்டிற்கு முக்கிய தேவையே 'கபடி கபடி' என மூச்சு விடாமல் பாடியபடி விளையாடவேண்டும்.வாய் பேசவராத தர்ஷினியால் எப்படி கபடி பாடமுடியும் என யோசித்த போது, இரண்டு மாதம் அவகாசம் கொடுங்கள் உங்களுக்கு மட்டுமல்ல களத்தில் இருக்கும் அனைவருக்கும் கேட்கும்படி உரக்கவே கபடி பாடி காட்டுகிறேன் என்று வேண்டுகோளாகக் கேட்டு கடுமையாக பயிற்சி எடுத்து கபடி கபடி என்ற வார்த்தையை உச்சரிக்க கற்றுக்கொண்டார்.

அதன் பிறகு பல்வேறு போட்டிகள் பரிசுகள் பாராட்டுக்கள் பதக்கங்கள் கோப்பைகள்

இப்போது பத்தாம் வகுப்பு படிக்கும் தர்ஷினிக்கு தெரியாத கபடி களமே கிடையாது,தர்ஷினியை தெரியாத கபடி களங்களும் கிடையாது.மாநிலத்தை தாண்டி மத்திய பிரதேசம் வரை போய் விளையாடிவிட்டு வந்துவிட்டார்.

பள்ளி மாணவி என்றாலும் கல்லுாரி மாணவியருக்கு சவால்விடும் வீராங்கனை இவர்.. கேட்சர்,ரைடர் என்று இவர் ஒரு ஆல்ரவுண்டர்.ஏழு பேர் கொண்ட அணியில் இவர் விழாத வரை அணியும் விழாது.ஆறு பேரை அவுட் செய்து தர்ஷினி மட்டுமே மிஞ்சியிருந்தால் கூட அவுட்டான ஆறு பேரையும் மீட்டு விடுவார் அணியையும் தோல்விபாதையில் இருந்து மீண்டுவரச்செய்துவிடுவார்.ஒரு வேளை அணி தவிர்க்கமுடியாமல் தோற்றாலும் கூட 'வுமன் ஆப் த சீரிஸ்','வுமன் ஆப் தி மேட்ச்' என்று ஏதாவது ஒரு கோப்பையை தட்டிவந்துவிடுவார்.

இப்படி கபடியை உயிராக நேசிக்கும் தர்ஷினியை உயிருக்கும் மேலாக நேசிக்கின்றனர் பெற்றோர்.தன் மகள் வீராங்கனையாக வளர்கிறார் என்பதை விட விளையாடிவிட்டு வரும்போது தங்கள் செல்ல பாப்பாவிற்கு அடிபடாமல் இருக்கவேண்டுமே என்பதுதான் பெரும் கவலையாக இருக்கும்.

தர்ஷினி விளையாடப்போகும் இடத்திற்கு எல்லாம் அவரது தாயார் ஜெயந்தியும் கூட சென்றால் அது தர்ஷினிக்கு யானை பலம் கொடுக்கும் ஆனால் வீட்டின் பொருளாதார சூழ்நிலை அம்மாவும் வேலைக்கு போயாகவேண்டும்,.காது கேட்கும் கருவி பொருத்தினால் காது கேட்கும் என்ற சூழ்நிலை ஆனால் பதினைந்தாயிரம் இருந்தால்தான் அந்த கருவி வாங்கமுடியும் என்பது யதார்த்தநிலை.

தர்ஷினியின் இந்த நிலையைப்பார்த்து இரக்கப்பட நுாறு பேர் இருந்தார்கள் ஆனால் பணம் கொடுத்து வாங்கித்தர ஈரநெஞ்சம் மகேந்திரன் ஒருவர் மட்டுமே இருந்தார்.காது கேட்கும் கருவி பொருத்தப்பட்ட நிலையில் தர்ஷினியின் நிலையில் கொஞ்சம் முன்னேற்றம்,கொஞ்சம் கொஞ்சமாய் வார்த்தைகள் வந்துவிழுகின்றன.

இதே போல இன்னோரு காதிலும் காது கேட்கும் கருவியை மாட்டிவிட்டால் இன்னும் முன்னேற்றம் உண்டு என்கிறது மருத்துவம் இன்னோரு மகேந்திரனாக இருக்க விரும்புகிறவர்கள் தர்ஷினியின் தந்தை பாலகிருஷ்ணனிடம் தொடர்பு கொள்ளலாம் எண்:9944993804.(அவர் வேலை பார்க்கும் இடத்தில் போன் பேசமுடியாது ஆகவே இரவு 8.30 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் பேசினால் நல்லது.)
.
நாளை நாட்டிற்கு பெருமை தேடித்தரப்பபோகும் தேசிய வீராங்கனையாக தர்ஷினி நிச்சயம் வருவார் அவருக்கும் இப்போதே வாழ்த்துக்களை பகிர்வோம்.

No comments:

Post a Comment