FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, February 19, 2016

எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் மாற்று திறனாளிகள் 3–வது நாளாக போராட்டம்

சென்னை, பிப். 19–
மாற்று திறனாளிகள் 3–வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாற்று திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். 40 சதவீதம் ஊனம் இருந்தால் பென்சன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் கடந்த 17–ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை சங்கம், தேசிய பார்வையற்றோர் இணையம், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு ஆகியவை இந்த போரட்டத்தை நடத்தி வருகின்றன.

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்று திறனாளி குப்புசாமி உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். மாற்று திறனாளிகள் ஒரே இடத்தில் இருந்து தங்கள் போராட்டத்தை தொடர ஏற்பாடு செய்யப்பட்டதையடுத்து எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இன்று 3–வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது. இவர்களது போராட்டத்திற்கு மாற்றுத் திறனாளிகள் பார்வையற்றோர் பட்டதாரிகள் சங்கம் ஆதரவு அளித்துள்ளது. சுமார் 400 பேர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment