FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, February 19, 2016

எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் மாற்று திறனாளிகள் 3–வது நாளாக போராட்டம்

சென்னை, பிப். 19–
மாற்று திறனாளிகள் 3–வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாற்று திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். 40 சதவீதம் ஊனம் இருந்தால் பென்சன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் கடந்த 17–ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை சங்கம், தேசிய பார்வையற்றோர் இணையம், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு ஆகியவை இந்த போரட்டத்தை நடத்தி வருகின்றன.

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்று திறனாளி குப்புசாமி உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். மாற்று திறனாளிகள் ஒரே இடத்தில் இருந்து தங்கள் போராட்டத்தை தொடர ஏற்பாடு செய்யப்பட்டதையடுத்து எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இன்று 3–வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது. இவர்களது போராட்டத்திற்கு மாற்றுத் திறனாளிகள் பார்வையற்றோர் பட்டதாரிகள் சங்கம் ஆதரவு அளித்துள்ளது. சுமார் 400 பேர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment