FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, February 15, 2016

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தருமபுரியில் இலவச மருத்துவ முகாம்

15.02.2016, தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவின் 68-ஆவது பிறந்த நாளையொட்டி, தருமபுரி குண்டல்பட்டியில் உள்ள வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியும், சென்னை ஈஎன்டி ஆராய்ச்சி மையமும் இணைந்து காது கேளாத, வாய் பேச முடியாதோருக்கான இலவச மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

மாநில உயர் கல்வித் துறை அமைச்சரும், அதிமுக தலைமை நிலையச் செயலருமான பி. பழனியப்பன் குத்துவிளக்கேற்றி முகாமைத் தொடங்கிவைத்தார். கல்லூரித் தலைவர் எம். வருவான் வடிவேலன் தலைமை வகித்தார்.

மாவட்டம் முழுவதும் சுமார் 700 பேர் முகாமில் பங்கேற்று பயனடைந்தனர். இவர்களில் 68 பேர் தேர்வு செய்யப்பட்டு, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டனர். 250 பேருக்கு காதொலிக் கருவிகள் வழங்கப்பட்டன.

முகாமில் அதிமுக மாவட்டச் செயலர் எம். முனுசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றச் செயலர் டி.கே. ராஜேந்திரன், மாவட்ட அவைத் தலைவர் தொ.மு. நாகராசன், வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியின் செயலர் மாதவன், துணைத் தலைவர் டாக்டர் வி. வினோத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment