FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, February 15, 2016

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தருமபுரியில் இலவச மருத்துவ முகாம்

15.02.2016, தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவின் 68-ஆவது பிறந்த நாளையொட்டி, தருமபுரி குண்டல்பட்டியில் உள்ள வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியும், சென்னை ஈஎன்டி ஆராய்ச்சி மையமும் இணைந்து காது கேளாத, வாய் பேச முடியாதோருக்கான இலவச மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

மாநில உயர் கல்வித் துறை அமைச்சரும், அதிமுக தலைமை நிலையச் செயலருமான பி. பழனியப்பன் குத்துவிளக்கேற்றி முகாமைத் தொடங்கிவைத்தார். கல்லூரித் தலைவர் எம். வருவான் வடிவேலன் தலைமை வகித்தார்.

மாவட்டம் முழுவதும் சுமார் 700 பேர் முகாமில் பங்கேற்று பயனடைந்தனர். இவர்களில் 68 பேர் தேர்வு செய்யப்பட்டு, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டனர். 250 பேருக்கு காதொலிக் கருவிகள் வழங்கப்பட்டன.

முகாமில் அதிமுக மாவட்டச் செயலர் எம். முனுசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றச் செயலர் டி.கே. ராஜேந்திரன், மாவட்ட அவைத் தலைவர் தொ.மு. நாகராசன், வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியின் செயலர் மாதவன், துணைத் தலைவர் டாக்டர் வி. வினோத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment