FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, February 15, 2016

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தருமபுரியில் இலவச மருத்துவ முகாம்

15.02.2016, தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவின் 68-ஆவது பிறந்த நாளையொட்டி, தருமபுரி குண்டல்பட்டியில் உள்ள வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியும், சென்னை ஈஎன்டி ஆராய்ச்சி மையமும் இணைந்து காது கேளாத, வாய் பேச முடியாதோருக்கான இலவச மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

மாநில உயர் கல்வித் துறை அமைச்சரும், அதிமுக தலைமை நிலையச் செயலருமான பி. பழனியப்பன் குத்துவிளக்கேற்றி முகாமைத் தொடங்கிவைத்தார். கல்லூரித் தலைவர் எம். வருவான் வடிவேலன் தலைமை வகித்தார்.

மாவட்டம் முழுவதும் சுமார் 700 பேர் முகாமில் பங்கேற்று பயனடைந்தனர். இவர்களில் 68 பேர் தேர்வு செய்யப்பட்டு, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டனர். 250 பேருக்கு காதொலிக் கருவிகள் வழங்கப்பட்டன.

முகாமில் அதிமுக மாவட்டச் செயலர் எம். முனுசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றச் செயலர் டி.கே. ராஜேந்திரன், மாவட்ட அவைத் தலைவர் தொ.மு. நாகராசன், வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியின் செயலர் மாதவன், துணைத் தலைவர் டாக்டர் வி. வினோத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment