FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, February 10, 2016

மாற்றுத்திறனாளிகள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்


தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு காலகெடு விதித்து, மாற்றுத்திறனாளிகள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.

அரசு பணிகளில் 3 சதவீத இட ஒதுக்கீடு, உதவித்தொகையை ரூ.1000-இருந்து ரூ 5000 ஆக உயர்த்த வேண்டும் உட்பட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

சென்னை காமராஜர் சாலையில் மறியல் செய்ய முயன்ற மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டு, நேற்று மாலை வேப்பேரியில் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால், அங்கு குடிநீர், கழிப்பறை, உணவு ஆகிய அடிப்படை வசதிகள் எதுவும் அவர்களுக்கு செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று விடுவிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், வேப்பேரி ஈ.வி.கே.எஸ்.சம்பத் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக வேன்களில் ஏற்றியதால், மாற்றுத் திறனாளிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இந்நிலையில், கோரிக்கைகள் தொடர்பாக தலைமை செயலாளர் ஞானதேசிகன் மாற்றுத் திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாற்று திறனாளிகள், அரசு நடத்திய பேச்சுவார்த்தை ஒரு ஏமாற்று வேலை என தெரிவித்தனர்.

இதனிடையே, வரும் 16ந்தேதிக்குள் தங்கள் கோரிக்கை குறித்து அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாற்றுத்திறனாளிகள் தெரிவித்துள்ளனர். அதுவரை தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment