FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, February 10, 2016

மாற்றுத்திறனாளிகள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்


தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு காலகெடு விதித்து, மாற்றுத்திறனாளிகள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.

அரசு பணிகளில் 3 சதவீத இட ஒதுக்கீடு, உதவித்தொகையை ரூ.1000-இருந்து ரூ 5000 ஆக உயர்த்த வேண்டும் உட்பட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

சென்னை காமராஜர் சாலையில் மறியல் செய்ய முயன்ற மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டு, நேற்று மாலை வேப்பேரியில் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால், அங்கு குடிநீர், கழிப்பறை, உணவு ஆகிய அடிப்படை வசதிகள் எதுவும் அவர்களுக்கு செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று விடுவிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், வேப்பேரி ஈ.வி.கே.எஸ்.சம்பத் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக வேன்களில் ஏற்றியதால், மாற்றுத் திறனாளிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இந்நிலையில், கோரிக்கைகள் தொடர்பாக தலைமை செயலாளர் ஞானதேசிகன் மாற்றுத் திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாற்று திறனாளிகள், அரசு நடத்திய பேச்சுவார்த்தை ஒரு ஏமாற்று வேலை என தெரிவித்தனர்.

இதனிடையே, வரும் 16ந்தேதிக்குள் தங்கள் கோரிக்கை குறித்து அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாற்றுத்திறனாளிகள் தெரிவித்துள்ளனர். அதுவரை தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment