FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, February 10, 2016

மாற்றுத்திறனாளிகள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்


தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு காலகெடு விதித்து, மாற்றுத்திறனாளிகள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.

அரசு பணிகளில் 3 சதவீத இட ஒதுக்கீடு, உதவித்தொகையை ரூ.1000-இருந்து ரூ 5000 ஆக உயர்த்த வேண்டும் உட்பட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

சென்னை காமராஜர் சாலையில் மறியல் செய்ய முயன்ற மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டு, நேற்று மாலை வேப்பேரியில் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால், அங்கு குடிநீர், கழிப்பறை, உணவு ஆகிய அடிப்படை வசதிகள் எதுவும் அவர்களுக்கு செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று விடுவிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், வேப்பேரி ஈ.வி.கே.எஸ்.சம்பத் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக வேன்களில் ஏற்றியதால், மாற்றுத் திறனாளிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இந்நிலையில், கோரிக்கைகள் தொடர்பாக தலைமை செயலாளர் ஞானதேசிகன் மாற்றுத் திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாற்று திறனாளிகள், அரசு நடத்திய பேச்சுவார்த்தை ஒரு ஏமாற்று வேலை என தெரிவித்தனர்.

இதனிடையே, வரும் 16ந்தேதிக்குள் தங்கள் கோரிக்கை குறித்து அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாற்றுத்திறனாளிகள் தெரிவித்துள்ளனர். அதுவரை தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment