FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, February 9, 2016

மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுக: தமிழக அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்

09.02.2016, மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை இதுவரை அதிமுக அரசு கவனிக்காமல் இருந்தாலும், அவசர முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சினையை இப்போதாவது கவனித்து ஆவன செய்திட முன் வர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அதிமுக ஆட்சிக்கு எதிர்க் கட்சிகளின் மீது எந்த அளவுக்கு கோபமும், வெறுப்பும் இருக்கிறதோ, அதை விட அதிகமாக அவர்கள் ஆட்சிக்கு வந்தது முதல் விவசாயிகள் ஆனாலும், நெசவாளர்கள் ஆனாலும், மீனவர்கள் ஆனாலும்; மக்கள் நலப் பணியாளர்கள் ஆனாலும், சாலைப் பணியாளர்கள் ஆனாலும், சத்துணவுப் பணியாளர்கள் ஆனாலும், அரசு அலுவலர்கள் ஆனாலும், ஆசிரியர்கள் ஆனாலும், மாற்றுத் திறனாளிகள் ஆனாலும், தொழிலாளர்கள் ஆனாலும் அவர்களிடம் எல்லாம் ஒரு அலர்ஜி.

அந்த வரிசையில் மாற்றுத் திறனாளிகளையும் வைத்து, இந்த ஆட்சியினர் தொடக்கம் முதல் படாதபாடு படுத்தி வருகிறார்கள். நேற்று மாலை ஐம்பது மாற்றுத் திறனாளிகள் என்னைச் சந்தித்து, கோரிக்கை தந்து தங்கள் துயரங்களை யெல்லாம் வெளிப்படுத்தினார்கள்.

திமுக ஆட்சியில் சென்னை பொது மருத்துவ மனையில் மாற்றுத் திறனாளிகள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்று காலையில் ஏடுகளில் படித்ததும், காலை உணவைக் கூட அருந்த மறுத்து, நேராக அவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் இடத்திற்கே சென்று, உண்ணாவிரதத்தைத் திரும்பப் பெறக் கேட்டுக் கொண்டவன் நான். அதையெல்லாம் நேற்றையதினம் மாற்றுத் திறனாளிகள் நினைவூட்டி, தற்போது நான்கு நாட்களாகப் போராட்டம் நடத்தி வந்த போதிலும், தங்களை யாரும் வந்து பார்க்கக் கூட இல்லை என்றும், மாறாகக் காவல் துறையினர் வந்து கடுமையாகத் தாக்கியதாகவும் தெரிவித்தார்கள்.

தற்போது என்னை வந்து சந்தித்தவர்கள், பூவிருந்தவல்லியில் பார்வையற்றோருக்கான அரசு மேல் நிலைப் பள்ளியில் அமைந்துள்ள சிறப்பு இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்கள். அவ்வாறு பயிற்சி பெற்ற 75 மாற்றுத் திறனாளிகள் இன்னமும் பணி அமர்த்தப்படாத நிலையில் உள்ளார்களாம்.

தற்போது இந்தப் பயிற்சி மையம் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாம். அவர்களின் கோரிக்கைகளை அதிமுக அரசிடம் பல முறை எடுத்து வைத்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். அவர்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்து தங்கள் கோரிக்கையை 12 வாரங்களில் பரிசீலனை செய்யும்படி உத்தரவு வழங்கப் பட்ட போதிலும் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

மாற்றுத் திறனாளிகளின் இந்தக் கோரிக்கைகளை இதுவரை அதிமுக அரசு கவனிக்காமல் இருந்தாலும், அவசர முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சினையை இப்போதாவது கவனித்து ஆவன செய்திட முன் வர வேண்டும்'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment