FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, February 9, 2016

மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுக: தமிழக அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்

09.02.2016, மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை இதுவரை அதிமுக அரசு கவனிக்காமல் இருந்தாலும், அவசர முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சினையை இப்போதாவது கவனித்து ஆவன செய்திட முன் வர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அதிமுக ஆட்சிக்கு எதிர்க் கட்சிகளின் மீது எந்த அளவுக்கு கோபமும், வெறுப்பும் இருக்கிறதோ, அதை விட அதிகமாக அவர்கள் ஆட்சிக்கு வந்தது முதல் விவசாயிகள் ஆனாலும், நெசவாளர்கள் ஆனாலும், மீனவர்கள் ஆனாலும்; மக்கள் நலப் பணியாளர்கள் ஆனாலும், சாலைப் பணியாளர்கள் ஆனாலும், சத்துணவுப் பணியாளர்கள் ஆனாலும், அரசு அலுவலர்கள் ஆனாலும், ஆசிரியர்கள் ஆனாலும், மாற்றுத் திறனாளிகள் ஆனாலும், தொழிலாளர்கள் ஆனாலும் அவர்களிடம் எல்லாம் ஒரு அலர்ஜி.

அந்த வரிசையில் மாற்றுத் திறனாளிகளையும் வைத்து, இந்த ஆட்சியினர் தொடக்கம் முதல் படாதபாடு படுத்தி வருகிறார்கள். நேற்று மாலை ஐம்பது மாற்றுத் திறனாளிகள் என்னைச் சந்தித்து, கோரிக்கை தந்து தங்கள் துயரங்களை யெல்லாம் வெளிப்படுத்தினார்கள்.

திமுக ஆட்சியில் சென்னை பொது மருத்துவ மனையில் மாற்றுத் திறனாளிகள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்று காலையில் ஏடுகளில் படித்ததும், காலை உணவைக் கூட அருந்த மறுத்து, நேராக அவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் இடத்திற்கே சென்று, உண்ணாவிரதத்தைத் திரும்பப் பெறக் கேட்டுக் கொண்டவன் நான். அதையெல்லாம் நேற்றையதினம் மாற்றுத் திறனாளிகள் நினைவூட்டி, தற்போது நான்கு நாட்களாகப் போராட்டம் நடத்தி வந்த போதிலும், தங்களை யாரும் வந்து பார்க்கக் கூட இல்லை என்றும், மாறாகக் காவல் துறையினர் வந்து கடுமையாகத் தாக்கியதாகவும் தெரிவித்தார்கள்.

தற்போது என்னை வந்து சந்தித்தவர்கள், பூவிருந்தவல்லியில் பார்வையற்றோருக்கான அரசு மேல் நிலைப் பள்ளியில் அமைந்துள்ள சிறப்பு இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்கள். அவ்வாறு பயிற்சி பெற்ற 75 மாற்றுத் திறனாளிகள் இன்னமும் பணி அமர்த்தப்படாத நிலையில் உள்ளார்களாம்.

தற்போது இந்தப் பயிற்சி மையம் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாம். அவர்களின் கோரிக்கைகளை அதிமுக அரசிடம் பல முறை எடுத்து வைத்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். அவர்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்து தங்கள் கோரிக்கையை 12 வாரங்களில் பரிசீலனை செய்யும்படி உத்தரவு வழங்கப் பட்ட போதிலும் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

மாற்றுத் திறனாளிகளின் இந்தக் கோரிக்கைகளை இதுவரை அதிமுக அரசு கவனிக்காமல் இருந்தாலும், அவசர முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சினையை இப்போதாவது கவனித்து ஆவன செய்திட முன் வர வேண்டும்'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment