FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Tuesday, February 9, 2016

மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுக: தமிழக அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்

09.02.2016, மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை இதுவரை அதிமுக அரசு கவனிக்காமல் இருந்தாலும், அவசர முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சினையை இப்போதாவது கவனித்து ஆவன செய்திட முன் வர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அதிமுக ஆட்சிக்கு எதிர்க் கட்சிகளின் மீது எந்த அளவுக்கு கோபமும், வெறுப்பும் இருக்கிறதோ, அதை விட அதிகமாக அவர்கள் ஆட்சிக்கு வந்தது முதல் விவசாயிகள் ஆனாலும், நெசவாளர்கள் ஆனாலும், மீனவர்கள் ஆனாலும்; மக்கள் நலப் பணியாளர்கள் ஆனாலும், சாலைப் பணியாளர்கள் ஆனாலும், சத்துணவுப் பணியாளர்கள் ஆனாலும், அரசு அலுவலர்கள் ஆனாலும், ஆசிரியர்கள் ஆனாலும், மாற்றுத் திறனாளிகள் ஆனாலும், தொழிலாளர்கள் ஆனாலும் அவர்களிடம் எல்லாம் ஒரு அலர்ஜி.

அந்த வரிசையில் மாற்றுத் திறனாளிகளையும் வைத்து, இந்த ஆட்சியினர் தொடக்கம் முதல் படாதபாடு படுத்தி வருகிறார்கள். நேற்று மாலை ஐம்பது மாற்றுத் திறனாளிகள் என்னைச் சந்தித்து, கோரிக்கை தந்து தங்கள் துயரங்களை யெல்லாம் வெளிப்படுத்தினார்கள்.

திமுக ஆட்சியில் சென்னை பொது மருத்துவ மனையில் மாற்றுத் திறனாளிகள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்று காலையில் ஏடுகளில் படித்ததும், காலை உணவைக் கூட அருந்த மறுத்து, நேராக அவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் இடத்திற்கே சென்று, உண்ணாவிரதத்தைத் திரும்பப் பெறக் கேட்டுக் கொண்டவன் நான். அதையெல்லாம் நேற்றையதினம் மாற்றுத் திறனாளிகள் நினைவூட்டி, தற்போது நான்கு நாட்களாகப் போராட்டம் நடத்தி வந்த போதிலும், தங்களை யாரும் வந்து பார்க்கக் கூட இல்லை என்றும், மாறாகக் காவல் துறையினர் வந்து கடுமையாகத் தாக்கியதாகவும் தெரிவித்தார்கள்.

தற்போது என்னை வந்து சந்தித்தவர்கள், பூவிருந்தவல்லியில் பார்வையற்றோருக்கான அரசு மேல் நிலைப் பள்ளியில் அமைந்துள்ள சிறப்பு இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்கள். அவ்வாறு பயிற்சி பெற்ற 75 மாற்றுத் திறனாளிகள் இன்னமும் பணி அமர்த்தப்படாத நிலையில் உள்ளார்களாம்.

தற்போது இந்தப் பயிற்சி மையம் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாம். அவர்களின் கோரிக்கைகளை அதிமுக அரசிடம் பல முறை எடுத்து வைத்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். அவர்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்து தங்கள் கோரிக்கையை 12 வாரங்களில் பரிசீலனை செய்யும்படி உத்தரவு வழங்கப் பட்ட போதிலும் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

மாற்றுத் திறனாளிகளின் இந்தக் கோரிக்கைகளை இதுவரை அதிமுக அரசு கவனிக்காமல் இருந்தாலும், அவசர முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சினையை இப்போதாவது கவனித்து ஆவன செய்திட முன் வர வேண்டும்'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment