FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, February 9, 2016

மாற்றுத்திறனாளிகள் திறமைக்கு ஊக்கம் தர வேலை வாய்ப்பு! ரவுண்ட் முறுக்கு தயாரிப்பாளர்கள் திட்டம்

09.02.2016, பொள்ளாச்சி: ரவுண்ட் முறுக்கு தயாரிப்பில் சீரான முன்னேற்றம் கண்டுவரும் கிணத்துக்கடவில், அடுத்து வரும் நாட்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு, வேலை வாய்ப்பு வழங்க தயாராகியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில், கை முறுக்கு தயாரிப்பில் தலைமுறைகளாக புகழ்பெற்று வருவது செட்டிபுதுார் (எ) கோப்பனுார்புதுார் கிராமம். நெகமம் அருகே உள்ள இக்கிராமத்தில், ஒவ்வொரு குடும்பமும் இத்தொழிலில் ஈடுபட்டிருந்தது ஒரு காலம். இன்று, புதிய தலைமுறையினர் இத்தொழிலை விடுத்து, படித்து வெவ்வேறு வேலைக்கு செல்ல துவங்கி விட்டனர்.

ஆனாலும், மண் மனம் மாறாத கிராமத்தினர், இன்னமும் முறுக்கு, எள் உருண்டை, தட்டவடை மற்றும் ரவுண்ட் முறுக்கு தயாரித்து வருகின்றனர். பொள்ளாச்சி, கோவை, திருப்பூர் பகுதிகளுக்கு வேன், கார்களில் கொண்டு சென்று, கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர். இச்சூழலில், கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன் கிணத்துக்கடவில், ஒரு சிலர் துவக்கிய 'ரவுண்ட் முறுக்கு' தயாரிப்பு, கிராமங்களில் உள்ள பெட்டிகடைகளுக்கு சைக்கிள், மொபட்களில் சென்று கொடுத்து வந்தனர். இதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தையும், குழந்தைகளின் கல்விக்கும் செலவழித்து வந்தனர்.

விருப்பப்பட்ட, கஷ்டப்பட்ட உழைப்பு இத்தொழில் மெல்ல மெல்ல வளர்ந்தது, இன்று, கிணத்துக்கடவில் எட்டு இடங்களில் முறுக்கு தயாரிப்பு கம்பெனிகள் செயல்படுகின்றன. இவற்றில் ஒவ்வொன்றிலும் அதிகபட்சமாக, 40 பெண்கள் வரை பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காலை, 9.00 மணி முதல் மாலை, 5.30 மணிக்குள், 250 - 350 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். பெரும்பாலும், இத் தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனர்.

இன்று, நாளொன்றுக்கு இரண்டு லட்சம் ரூபாய் விலையிலான முறுக்குகள் வெளியூர் செல்கின்றன. குறிப்பாக கேரளாவுக்கு, அங்குள்ள மொத்த வியாபாரிகளுக்கு விற்கப்படுகிறது. அடுத்ததாக, கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு செல்கிறது. இந்த தயாரிப்பை விரும்பி வாங்குவதற்கு சுவையும், தரமும் முக்கிய காரணமாகும்.

No comments:

Post a Comment