FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Tuesday, February 9, 2016

மாற்றுத்திறனாளிகள் திறமைக்கு ஊக்கம் தர வேலை வாய்ப்பு! ரவுண்ட் முறுக்கு தயாரிப்பாளர்கள் திட்டம்

09.02.2016, பொள்ளாச்சி: ரவுண்ட் முறுக்கு தயாரிப்பில் சீரான முன்னேற்றம் கண்டுவரும் கிணத்துக்கடவில், அடுத்து வரும் நாட்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு, வேலை வாய்ப்பு வழங்க தயாராகியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில், கை முறுக்கு தயாரிப்பில் தலைமுறைகளாக புகழ்பெற்று வருவது செட்டிபுதுார் (எ) கோப்பனுார்புதுார் கிராமம். நெகமம் அருகே உள்ள இக்கிராமத்தில், ஒவ்வொரு குடும்பமும் இத்தொழிலில் ஈடுபட்டிருந்தது ஒரு காலம். இன்று, புதிய தலைமுறையினர் இத்தொழிலை விடுத்து, படித்து வெவ்வேறு வேலைக்கு செல்ல துவங்கி விட்டனர்.

ஆனாலும், மண் மனம் மாறாத கிராமத்தினர், இன்னமும் முறுக்கு, எள் உருண்டை, தட்டவடை மற்றும் ரவுண்ட் முறுக்கு தயாரித்து வருகின்றனர். பொள்ளாச்சி, கோவை, திருப்பூர் பகுதிகளுக்கு வேன், கார்களில் கொண்டு சென்று, கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர். இச்சூழலில், கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன் கிணத்துக்கடவில், ஒரு சிலர் துவக்கிய 'ரவுண்ட் முறுக்கு' தயாரிப்பு, கிராமங்களில் உள்ள பெட்டிகடைகளுக்கு சைக்கிள், மொபட்களில் சென்று கொடுத்து வந்தனர். இதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தையும், குழந்தைகளின் கல்விக்கும் செலவழித்து வந்தனர்.

விருப்பப்பட்ட, கஷ்டப்பட்ட உழைப்பு இத்தொழில் மெல்ல மெல்ல வளர்ந்தது, இன்று, கிணத்துக்கடவில் எட்டு இடங்களில் முறுக்கு தயாரிப்பு கம்பெனிகள் செயல்படுகின்றன. இவற்றில் ஒவ்வொன்றிலும் அதிகபட்சமாக, 40 பெண்கள் வரை பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காலை, 9.00 மணி முதல் மாலை, 5.30 மணிக்குள், 250 - 350 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். பெரும்பாலும், இத் தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனர்.

இன்று, நாளொன்றுக்கு இரண்டு லட்சம் ரூபாய் விலையிலான முறுக்குகள் வெளியூர் செல்கின்றன. குறிப்பாக கேரளாவுக்கு, அங்குள்ள மொத்த வியாபாரிகளுக்கு விற்கப்படுகிறது. அடுத்ததாக, கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு செல்கிறது. இந்த தயாரிப்பை விரும்பி வாங்குவதற்கு சுவையும், தரமும் முக்கிய காரணமாகும்.

No comments:

Post a Comment