FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, February 9, 2016

மாற்றுத்திறனாளிகள் திறமைக்கு ஊக்கம் தர வேலை வாய்ப்பு! ரவுண்ட் முறுக்கு தயாரிப்பாளர்கள் திட்டம்

09.02.2016, பொள்ளாச்சி: ரவுண்ட் முறுக்கு தயாரிப்பில் சீரான முன்னேற்றம் கண்டுவரும் கிணத்துக்கடவில், அடுத்து வரும் நாட்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு, வேலை வாய்ப்பு வழங்க தயாராகியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில், கை முறுக்கு தயாரிப்பில் தலைமுறைகளாக புகழ்பெற்று வருவது செட்டிபுதுார் (எ) கோப்பனுார்புதுார் கிராமம். நெகமம் அருகே உள்ள இக்கிராமத்தில், ஒவ்வொரு குடும்பமும் இத்தொழிலில் ஈடுபட்டிருந்தது ஒரு காலம். இன்று, புதிய தலைமுறையினர் இத்தொழிலை விடுத்து, படித்து வெவ்வேறு வேலைக்கு செல்ல துவங்கி விட்டனர்.

ஆனாலும், மண் மனம் மாறாத கிராமத்தினர், இன்னமும் முறுக்கு, எள் உருண்டை, தட்டவடை மற்றும் ரவுண்ட் முறுக்கு தயாரித்து வருகின்றனர். பொள்ளாச்சி, கோவை, திருப்பூர் பகுதிகளுக்கு வேன், கார்களில் கொண்டு சென்று, கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர். இச்சூழலில், கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன் கிணத்துக்கடவில், ஒரு சிலர் துவக்கிய 'ரவுண்ட் முறுக்கு' தயாரிப்பு, கிராமங்களில் உள்ள பெட்டிகடைகளுக்கு சைக்கிள், மொபட்களில் சென்று கொடுத்து வந்தனர். இதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தையும், குழந்தைகளின் கல்விக்கும் செலவழித்து வந்தனர்.

விருப்பப்பட்ட, கஷ்டப்பட்ட உழைப்பு இத்தொழில் மெல்ல மெல்ல வளர்ந்தது, இன்று, கிணத்துக்கடவில் எட்டு இடங்களில் முறுக்கு தயாரிப்பு கம்பெனிகள் செயல்படுகின்றன. இவற்றில் ஒவ்வொன்றிலும் அதிகபட்சமாக, 40 பெண்கள் வரை பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காலை, 9.00 மணி முதல் மாலை, 5.30 மணிக்குள், 250 - 350 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். பெரும்பாலும், இத் தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனர்.

இன்று, நாளொன்றுக்கு இரண்டு லட்சம் ரூபாய் விலையிலான முறுக்குகள் வெளியூர் செல்கின்றன. குறிப்பாக கேரளாவுக்கு, அங்குள்ள மொத்த வியாபாரிகளுக்கு விற்கப்படுகிறது. அடுத்ததாக, கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு செல்கிறது. இந்த தயாரிப்பை விரும்பி வாங்குவதற்கு சுவையும், தரமும் முக்கிய காரணமாகும்.

No comments:

Post a Comment