FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, February 9, 2016

மாற்றுத்திறனாளிகள் திறமைக்கு ஊக்கம் தர வேலை வாய்ப்பு! ரவுண்ட் முறுக்கு தயாரிப்பாளர்கள் திட்டம்

09.02.2016, பொள்ளாச்சி: ரவுண்ட் முறுக்கு தயாரிப்பில் சீரான முன்னேற்றம் கண்டுவரும் கிணத்துக்கடவில், அடுத்து வரும் நாட்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு, வேலை வாய்ப்பு வழங்க தயாராகியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில், கை முறுக்கு தயாரிப்பில் தலைமுறைகளாக புகழ்பெற்று வருவது செட்டிபுதுார் (எ) கோப்பனுார்புதுார் கிராமம். நெகமம் அருகே உள்ள இக்கிராமத்தில், ஒவ்வொரு குடும்பமும் இத்தொழிலில் ஈடுபட்டிருந்தது ஒரு காலம். இன்று, புதிய தலைமுறையினர் இத்தொழிலை விடுத்து, படித்து வெவ்வேறு வேலைக்கு செல்ல துவங்கி விட்டனர்.

ஆனாலும், மண் மனம் மாறாத கிராமத்தினர், இன்னமும் முறுக்கு, எள் உருண்டை, தட்டவடை மற்றும் ரவுண்ட் முறுக்கு தயாரித்து வருகின்றனர். பொள்ளாச்சி, கோவை, திருப்பூர் பகுதிகளுக்கு வேன், கார்களில் கொண்டு சென்று, கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர். இச்சூழலில், கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன் கிணத்துக்கடவில், ஒரு சிலர் துவக்கிய 'ரவுண்ட் முறுக்கு' தயாரிப்பு, கிராமங்களில் உள்ள பெட்டிகடைகளுக்கு சைக்கிள், மொபட்களில் சென்று கொடுத்து வந்தனர். இதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தையும், குழந்தைகளின் கல்விக்கும் செலவழித்து வந்தனர்.

விருப்பப்பட்ட, கஷ்டப்பட்ட உழைப்பு இத்தொழில் மெல்ல மெல்ல வளர்ந்தது, இன்று, கிணத்துக்கடவில் எட்டு இடங்களில் முறுக்கு தயாரிப்பு கம்பெனிகள் செயல்படுகின்றன. இவற்றில் ஒவ்வொன்றிலும் அதிகபட்சமாக, 40 பெண்கள் வரை பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காலை, 9.00 மணி முதல் மாலை, 5.30 மணிக்குள், 250 - 350 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். பெரும்பாலும், இத் தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனர்.

இன்று, நாளொன்றுக்கு இரண்டு லட்சம் ரூபாய் விலையிலான முறுக்குகள் வெளியூர் செல்கின்றன. குறிப்பாக கேரளாவுக்கு, அங்குள்ள மொத்த வியாபாரிகளுக்கு விற்கப்படுகிறது. அடுத்ததாக, கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு செல்கிறது. இந்த தயாரிப்பை விரும்பி வாங்குவதற்கு சுவையும், தரமும் முக்கிய காரணமாகும்.

No comments:

Post a Comment