FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, February 19, 2016

பிப்ரவரி 21-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு சுயதொழில் பயிற்சி

கோவை, 19 February 2016
மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு நாள் சுயதொழில் பயிற்சி பிப்ரவரி 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

வேலைவாய்ப்பு, சுயதொழில்களில் மாற்றுத் திறனாளிகள் ஈடுபட கேலிபர் மாற்றுத் திறனாளிகள் அமைப்பு கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து வழிகாட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

அதன்படி, கோவை, தடாகம் சாலை, கே.என்.ஜி. பிரிவில் அமைந்துள்ள முத்து எம்பவர்மென்ட் அறக்கட்டளை மற்றும் கேலிபர் மாற்றுத் திறனாளிகள் அமைப்பு ஆகியன இணைந்து நடத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான சுயதொழில் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 21) நடைபெறவுள்ளது.

இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளும் மாற்றுத் திறனாளிகளுக்கு சுயதொழில் துவங்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் பயிற்சிகள், அரசின் நிதி உதவிகள், தனியார் நிறுவனங்கள் வழங்கும் வேலைவாய்ப்புகள் ஆகியவை எடுத்துரைக்கப்படும். பயிற்சியில் பங்கேற்க 9442556168, 9944556168 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் பிப்ரவரி 20-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பெயர்களைப் பதிவு செய்யவேண்டும்.

No comments:

Post a Comment