FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, February 19, 2016

பிப்ரவரி 21-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு சுயதொழில் பயிற்சி

கோவை, 19 February 2016
மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு நாள் சுயதொழில் பயிற்சி பிப்ரவரி 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

வேலைவாய்ப்பு, சுயதொழில்களில் மாற்றுத் திறனாளிகள் ஈடுபட கேலிபர் மாற்றுத் திறனாளிகள் அமைப்பு கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து வழிகாட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

அதன்படி, கோவை, தடாகம் சாலை, கே.என்.ஜி. பிரிவில் அமைந்துள்ள முத்து எம்பவர்மென்ட் அறக்கட்டளை மற்றும் கேலிபர் மாற்றுத் திறனாளிகள் அமைப்பு ஆகியன இணைந்து நடத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான சுயதொழில் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 21) நடைபெறவுள்ளது.

இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளும் மாற்றுத் திறனாளிகளுக்கு சுயதொழில் துவங்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் பயிற்சிகள், அரசின் நிதி உதவிகள், தனியார் நிறுவனங்கள் வழங்கும் வேலைவாய்ப்புகள் ஆகியவை எடுத்துரைக்கப்படும். பயிற்சியில் பங்கேற்க 9442556168, 9944556168 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் பிப்ரவரி 20-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பெயர்களைப் பதிவு செய்யவேண்டும்.

No comments:

Post a Comment