FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, February 17, 2016

போராட்டத்தில் ஈடுபடவிருந்த மாற்றுத்திறனாளிகளை முன்கூட்டியே கைது செய்த காவல்துறை




17.02.2016
அரசு பணிகளில் 3% இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவிருந்த மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் முன்கூட்டியே கைது செய்தனர்.

உடலில் 40 சதவிகிதம் பாதிக்கப்பட்டிருந்தாலே உதவித்தொகை வழங்க வேண்டும், உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து எழிலகத்திலிருந்து தலைமைச் செயலகம் வரை சென்று மறியலில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். ஆனால் போராட்டம் நடைபெறுவதற்கு முன்னதாகவே மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment