FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, February 20, 2016

முதல்வர் சலுகைகள் அறிவிப்பு: மாற்றுத்திறனாளிகள் போராட்டம் வாபஸ்

 20.02.2016
தமிழக முதல்வர், மாற்றுத் திறனாளிகள் கோரிக்கையை ஏற்று சில முக்கிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் வெளியிட்டதால் கடந்த 4 நாட்களாக அவர்கள் நடத்தி வந்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

40 சதவீத உடல் உறுப்பு குறைபாடு இருந்தால் உதவித்தொகை வழங்க வேண்டும். அரசு வேலை வாய்ப்புகளில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆகியவை உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக மாற்றுத் திறனாளிகள் கூட்டியக்கம் சார்பில் போராட்டம் நடத்தி வந்தனர்.

இதில் முக்கியமான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாகவும், சில கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்ற கண்காணிப்புக் குழு மற்றும் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பதாகவும் தமிழக முதல்வர் சனிக்கிழமை சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.

இதையடுத்து கடந்த 4 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை மாற்றுத் திறனாளிகள் கூட்டியக்கத்தினர் வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். சென்னை எழும்பூரிலுள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் கடந்த 4 நாட்களாக கைது செய்து அடைத்து வைக்கப்பட்டிருந்த மாற்றுத் திறனாளிகள் சுமார் 400 பேர் வெற்றி முழக்கமிட்டு முதல்வரின் அறிவிப்பை வரவேற்றனர். மகிழ்ச்சியுடன் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டனர்.

'40 சதவீதம் ஊனம் உள்ளவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வரின் அறிவிப்பால் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான மாற்றுத் திறனாளிகளூக்கு உதவித் தொகை பெற்று பயனடைவர்' என டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் டி.எம்.என்.தீபக் தெரிவித்தார்.

மாற்றுத் திறனாளிகள் கோயம்பேடு வரை செல்வதற்கான வாகன வசதியை போலீஸார் செய்து கொடுத்தனர். ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மாற்றுத் திறனாளிகளுக்கு கடந்த 2 நாட்களாக நடிகர் விசால் உணவு ஏற்பாடு செய்துக் கொடுத்தார் என மாற்றுத் திறனாளிகள் நன்றியுடன் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment