FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Saturday, February 20, 2016

முதல்வர் சலுகைகள் அறிவிப்பு: மாற்றுத்திறனாளிகள் போராட்டம் வாபஸ்

 20.02.2016
தமிழக முதல்வர், மாற்றுத் திறனாளிகள் கோரிக்கையை ஏற்று சில முக்கிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் வெளியிட்டதால் கடந்த 4 நாட்களாக அவர்கள் நடத்தி வந்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

40 சதவீத உடல் உறுப்பு குறைபாடு இருந்தால் உதவித்தொகை வழங்க வேண்டும். அரசு வேலை வாய்ப்புகளில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆகியவை உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக மாற்றுத் திறனாளிகள் கூட்டியக்கம் சார்பில் போராட்டம் நடத்தி வந்தனர்.

இதில் முக்கியமான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாகவும், சில கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்ற கண்காணிப்புக் குழு மற்றும் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பதாகவும் தமிழக முதல்வர் சனிக்கிழமை சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.

இதையடுத்து கடந்த 4 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை மாற்றுத் திறனாளிகள் கூட்டியக்கத்தினர் வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். சென்னை எழும்பூரிலுள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் கடந்த 4 நாட்களாக கைது செய்து அடைத்து வைக்கப்பட்டிருந்த மாற்றுத் திறனாளிகள் சுமார் 400 பேர் வெற்றி முழக்கமிட்டு முதல்வரின் அறிவிப்பை வரவேற்றனர். மகிழ்ச்சியுடன் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டனர்.

'40 சதவீதம் ஊனம் உள்ளவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வரின் அறிவிப்பால் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான மாற்றுத் திறனாளிகளூக்கு உதவித் தொகை பெற்று பயனடைவர்' என டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் டி.எம்.என்.தீபக் தெரிவித்தார்.

மாற்றுத் திறனாளிகள் கோயம்பேடு வரை செல்வதற்கான வாகன வசதியை போலீஸார் செய்து கொடுத்தனர். ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மாற்றுத் திறனாளிகளுக்கு கடந்த 2 நாட்களாக நடிகர் விசால் உணவு ஏற்பாடு செய்துக் கொடுத்தார் என மாற்றுத் திறனாளிகள் நன்றியுடன் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment