FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, February 2, 2016

மாற்றுத்திறனாளிகள் பயிற்சி மையத்தில் இயங்கும் அங்கன்வாடி மையம்

02.02.2016, திருப்பாச்சூர்;சேதமடைந்த அங்கன்வாடி மையத்தில், பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால், மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி மையத்தில், அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. திருவள்ளூர் அடுத்துள்ளது, திருப்பாச்சூர் ஊராட்சிக்குட்பட்ட தாட்கோ நகர். இப்பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன், அங்கன்வாடி மைய கட்டடம் கட்டப்பட்டது.இதில், 20 குழந்தைகள் உள்ளனர். இந்த கட்டடம் பராமரிப்பில்லாததால், மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால், குழந்தைகள் அரு கில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி மையத்தில், தங்க வைக்கப்பட்டு

உள்ளனர்.இதனால், மாற்றுத்திறனாளிகள் இந்த கட்டடத்தை பயன்படுத்த முடிவதில்லை.எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகத்தினர், பழுதடைந்த அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் அல்லது புதிய அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும் என, பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment