FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Tuesday, February 2, 2016

மாற்றுத்திறனாளிகள் பயிற்சி மையத்தில் இயங்கும் அங்கன்வாடி மையம்

02.02.2016, திருப்பாச்சூர்;சேதமடைந்த அங்கன்வாடி மையத்தில், பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால், மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி மையத்தில், அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. திருவள்ளூர் அடுத்துள்ளது, திருப்பாச்சூர் ஊராட்சிக்குட்பட்ட தாட்கோ நகர். இப்பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன், அங்கன்வாடி மைய கட்டடம் கட்டப்பட்டது.இதில், 20 குழந்தைகள் உள்ளனர். இந்த கட்டடம் பராமரிப்பில்லாததால், மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால், குழந்தைகள் அரு கில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி மையத்தில், தங்க வைக்கப்பட்டு

உள்ளனர்.இதனால், மாற்றுத்திறனாளிகள் இந்த கட்டடத்தை பயன்படுத்த முடிவதில்லை.எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகத்தினர், பழுதடைந்த அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் அல்லது புதிய அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும் என, பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment