FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, February 9, 2016

கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகளின்றி தவித்த அவல நிலை


09.02.2016,  சென்னையில் கைது செய்யப்பட்டு வேப்பேரியில் தங்க வைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி இரவு முழுவதும் தவிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், உதவித்தொகையை குறைந்தபட்சம் ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுததி சாலைமறியலில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும், வேப்பேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். எனினும் இன்றும் தங்களது போராட்டத்தை மாற்றுத்திறனாளிகள் தொடர்கின்றனர். கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி இரவு முழுவதும் இன்னலுக்கு ஆளானதாக மாற்றுத்திறனாளிகள் வேதனை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment