FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Saturday, February 20, 2016

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருளில் தவித்த மாற்றுத்திறனாளிகள் : சித்ரவதை செய்வதாக குற்றச்சாட்டு

20.02.2016, சென்னை : தமிழக அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், டிசம்பர் 3 இயக்கம், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு, தேசிய பார்வையற்றோர் இணையம் உட்பட 4 அமைப்புகளை சேர்ந்தவர்கள் கடந்த 8ம் தேதி முதல் சேப்பாக்கம், போலீஸ் கமிஷனர் அலுவலகம் ஆகிய இடங்களில் தொடர் போராட்டம் நடத்தினர். தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் பட்ஜெட்டில் தங்கள் கோரிக்கை தொடர்பாக எந்த அறிவிப்பும் வராததால் மாற்று திறனாளிகள் நேற்று முன்தினம் சென்னை எழிலகத்தில் மீண்டும் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்து எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் தங்கவைத்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் குடிநீர், கழிவறை, உணவு உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டனர். இதனிடையே உடல்நலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குப்புசாமி என்பவர் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சென்று மாற்றுத்திறனாளி குப்புசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் இன்று 3வது நாளாக மாற்றுத்திறனாளிகள் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டத்தை ஒடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக நேற்றிரவு ஸ்டேடியத்தில் மின்வெட்டை ஏற்படுத்தினர். இதனால் வெளிச்சம் இல்லாமல் மாற்றுத்திறனாளிகள் சிரமப்பட்டனர். ஸ்டேடியத்துக்குள் கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. மூட துணியில்லாமல் கொசுக்கடியாலும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குளிர் தாங்க முடியாமல் தவிக்கின்றனர். கடந்த 3 நாட்களாக தங்களை அடைத்துவைத்து சித்ரவதை செய்வதாக போலீசார் மீது மாற்றுத் திறனாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர். போலீசாரின் இந்த அடக்குமுறையால் மேலும் பல மாற்றுத்திறனாளிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். ‘‘தங்களது கோரிக்கைகளை உடனே நிறைவேற்றவேண்டும்’ என்று மாற்றுத் திறனாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment