FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, February 20, 2016

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருளில் தவித்த மாற்றுத்திறனாளிகள் : சித்ரவதை செய்வதாக குற்றச்சாட்டு

20.02.2016, சென்னை : தமிழக அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், டிசம்பர் 3 இயக்கம், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு, தேசிய பார்வையற்றோர் இணையம் உட்பட 4 அமைப்புகளை சேர்ந்தவர்கள் கடந்த 8ம் தேதி முதல் சேப்பாக்கம், போலீஸ் கமிஷனர் அலுவலகம் ஆகிய இடங்களில் தொடர் போராட்டம் நடத்தினர். தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் பட்ஜெட்டில் தங்கள் கோரிக்கை தொடர்பாக எந்த அறிவிப்பும் வராததால் மாற்று திறனாளிகள் நேற்று முன்தினம் சென்னை எழிலகத்தில் மீண்டும் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்து எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் தங்கவைத்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் குடிநீர், கழிவறை, உணவு உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டனர். இதனிடையே உடல்நலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குப்புசாமி என்பவர் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சென்று மாற்றுத்திறனாளி குப்புசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் இன்று 3வது நாளாக மாற்றுத்திறனாளிகள் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டத்தை ஒடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக நேற்றிரவு ஸ்டேடியத்தில் மின்வெட்டை ஏற்படுத்தினர். இதனால் வெளிச்சம் இல்லாமல் மாற்றுத்திறனாளிகள் சிரமப்பட்டனர். ஸ்டேடியத்துக்குள் கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. மூட துணியில்லாமல் கொசுக்கடியாலும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குளிர் தாங்க முடியாமல் தவிக்கின்றனர். கடந்த 3 நாட்களாக தங்களை அடைத்துவைத்து சித்ரவதை செய்வதாக போலீசார் மீது மாற்றுத் திறனாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர். போலீசாரின் இந்த அடக்குமுறையால் மேலும் பல மாற்றுத்திறனாளிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். ‘‘தங்களது கோரிக்கைகளை உடனே நிறைவேற்றவேண்டும்’ என்று மாற்றுத் திறனாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment