FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, February 20, 2016

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருளில் தவித்த மாற்றுத்திறனாளிகள் : சித்ரவதை செய்வதாக குற்றச்சாட்டு

20.02.2016, சென்னை : தமிழக அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், டிசம்பர் 3 இயக்கம், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு, தேசிய பார்வையற்றோர் இணையம் உட்பட 4 அமைப்புகளை சேர்ந்தவர்கள் கடந்த 8ம் தேதி முதல் சேப்பாக்கம், போலீஸ் கமிஷனர் அலுவலகம் ஆகிய இடங்களில் தொடர் போராட்டம் நடத்தினர். தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் பட்ஜெட்டில் தங்கள் கோரிக்கை தொடர்பாக எந்த அறிவிப்பும் வராததால் மாற்று திறனாளிகள் நேற்று முன்தினம் சென்னை எழிலகத்தில் மீண்டும் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்து எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் தங்கவைத்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் குடிநீர், கழிவறை, உணவு உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டனர். இதனிடையே உடல்நலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குப்புசாமி என்பவர் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சென்று மாற்றுத்திறனாளி குப்புசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் இன்று 3வது நாளாக மாற்றுத்திறனாளிகள் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டத்தை ஒடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக நேற்றிரவு ஸ்டேடியத்தில் மின்வெட்டை ஏற்படுத்தினர். இதனால் வெளிச்சம் இல்லாமல் மாற்றுத்திறனாளிகள் சிரமப்பட்டனர். ஸ்டேடியத்துக்குள் கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. மூட துணியில்லாமல் கொசுக்கடியாலும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குளிர் தாங்க முடியாமல் தவிக்கின்றனர். கடந்த 3 நாட்களாக தங்களை அடைத்துவைத்து சித்ரவதை செய்வதாக போலீசார் மீது மாற்றுத் திறனாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர். போலீசாரின் இந்த அடக்குமுறையால் மேலும் பல மாற்றுத்திறனாளிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். ‘‘தங்களது கோரிக்கைகளை உடனே நிறைவேற்றவேண்டும்’ என்று மாற்றுத் திறனாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment