FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, February 4, 2016

பிறவியிலேயே காது கேட்காத, வாய் பேச முடியாத சிறுமிக்கு ஆபரேசன் மூலம் காது கேட்கும் திறன்: டாக்டர்கள் சாதனை

 வேலூர், பிப்.4–
வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த விருதம்பட்டை சேர்ந்தவர் ஷபீர் (வயது 43) கூலி தொழிலாளி. இவருக்கு ஷாகிரா என்ற மனைவியும் 4 குழந்தைகளும் உள்ளனர். இதில் ஷபீரின் 4–வது மகள் யாஸ்மின் (4) பிறவியிலேயே காது கேட்காமலும், வாய் பேச முடியாத நிலையிலும் இருந்தாள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷபீர் தனது மகள் யாஸ்மினை வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்தார். அப்போது பரிசோதனை செய்த டாக்டர்கள், காதில் அதற்கான கருவியை (மெஷின்) பொருத்தி அதன் மூலம் கேட்கும் தன்மையை ஏற்படுத்தி யாஸ்மினை பேச வைக்க முடியும் என்பதை உறுதி செய்தனர்.

அதற்கான முயற்சியில் கல்லூரி முதல்வர் செல்வராஜன் தலைமையில், காது, மூக்கு, தொண்டை பிரிவு துறை தலைவர் மதனகோபால் மற்றும் டாக்டர்கள் ஈடுபட்டனர்.

சிறுமிக்கு உள் செவியில் உள்ள ‘காக்ளியா’ என்ற பகுதியில் சிறிது குறைபாடு இருந்ததால் செவித்திறனை ஆய்வு செய்து, காது கேட்கும் கருவியை பொருத்த டாக்டர்கள் முடிவு செய்தனர். இதனையடுத்து வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் செல்வராஜன், சென்னை காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் பாரதிமோகன், காது, மூக்கு, தொண்டை துறை தலைவர் மதனகோபால் மற்றும் பாரதிமோகன் ஆகியோர் சிறுமிக்கு ‘ஆப்ரேட்டிவ் மைக்ரோஸ்கோப்’ கருவி மூலம் அறுவை சிகிச்சை செய்தனர்.

அதன்பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் யாஸ்மினுக்கு காது கேட்கும் திறன் சரி செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு யாஸ்மின், பிறர் சொல்வதையும் கேட்பதையும் உணர முடிந்தது.

பிறவியிலேயே செவித்திறன் குறைபாட்டுடன் பிறந்த சிறுமிக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அந்த குறைபாட்டை சரி செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், ‘‘சொந்தத்தில் திருமணம் செய்துகொள்வதால், மரபு வழியாகவும், பேறுகாலத்தின்போது ஏற்படும் வைரஸ் தொற்று மற்றும் சில நிகழ்வுகளாலும் செவிப்பறையில் உள்ள காக்கிளியாவின் வளர்ச்சி முழுவதுமாக பாதிக்கப்படுகிறது. இந்த சிறுமிக்கும் இதுபோன்ற பாதிப்புதான் ஏற்பட்டுள்ளது.

இந்த தம்பதிக்கு பிறந்துள்ள முதல் மற்றும் 3-வது குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளன. ஆனால் 2–வது மற்றும் 4–வது குழந்தை யாஸ்மின் ஆகியோர் காது கேட்காமலும், பேச முடியாமலும் உள்ளனர். இந்த அறுவை சிகிச்சையை 1 முதல் 6 வயதிற்குள் தான் செய்யமுடியும். 6 வயதுக்கு மேல் ஆகிவிட்டால் சிகிச்சை செய்தாலும் பலனில்லை. 2–வது குழந்தைக்கு 6 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் அந்த குழந்தைக்கு சிகிச்சை செய்ய முடியவில்லை.

ஆனால் யாஸ்மினுக்கு 4 வயதே ஆவதால் முதல்–அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின்கீழ் ரூ.7 லட்சம் செலவில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இதுபோன்ற அறுவை சிகிச்சை நடப்பது இதுவே முதன்முறையாகும்.

இதுபோன்ற குறைபாடு உள்ளவர்களை நன்கு பரிசோதனை செய்து காது கேட்கும் கருவியை பொருத்தி பரிசோதனை செய்வோம். இதில் பயன் இல்லை என்றால் ‘காக்ளியார் இம்ப்ளான்ட்’ அறுவை சிகிச்சை செய்து காது கேட்க வைப்போம். அதன்படி இந்த குழந்தைக்கு ‘காக்ளியார் இம்ப்ளான்ட்’ அறுவை சிகிச்சை செய்த பின்னரே காதுகேட்கும் திறன் கிடைத்தது.

இந்த சிகிச்சையை தொடர்ந்து யாஸ்மினுக்கு ஒரு வருடம் வரை பேச்சு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சிக்கு பின் மெதுவாக பேச ஆரம்பித்து மற்ற குழந்தைகள் போல யாஸ்மினும் பள்ளிக்கு சென்று நன்றாக படிக்கவும் முடியும்’’ என்றனர்.

No comments:

Post a Comment