FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Thursday, February 4, 2016

பிறவியிலேயே காது கேட்காத, வாய் பேச முடியாத சிறுமிக்கு ஆபரேசன் மூலம் காது கேட்கும் திறன்: டாக்டர்கள் சாதனை

 வேலூர், பிப்.4–
வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த விருதம்பட்டை சேர்ந்தவர் ஷபீர் (வயது 43) கூலி தொழிலாளி. இவருக்கு ஷாகிரா என்ற மனைவியும் 4 குழந்தைகளும் உள்ளனர். இதில் ஷபீரின் 4–வது மகள் யாஸ்மின் (4) பிறவியிலேயே காது கேட்காமலும், வாய் பேச முடியாத நிலையிலும் இருந்தாள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷபீர் தனது மகள் யாஸ்மினை வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்தார். அப்போது பரிசோதனை செய்த டாக்டர்கள், காதில் அதற்கான கருவியை (மெஷின்) பொருத்தி அதன் மூலம் கேட்கும் தன்மையை ஏற்படுத்தி யாஸ்மினை பேச வைக்க முடியும் என்பதை உறுதி செய்தனர்.

அதற்கான முயற்சியில் கல்லூரி முதல்வர் செல்வராஜன் தலைமையில், காது, மூக்கு, தொண்டை பிரிவு துறை தலைவர் மதனகோபால் மற்றும் டாக்டர்கள் ஈடுபட்டனர்.

சிறுமிக்கு உள் செவியில் உள்ள ‘காக்ளியா’ என்ற பகுதியில் சிறிது குறைபாடு இருந்ததால் செவித்திறனை ஆய்வு செய்து, காது கேட்கும் கருவியை பொருத்த டாக்டர்கள் முடிவு செய்தனர். இதனையடுத்து வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் செல்வராஜன், சென்னை காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் பாரதிமோகன், காது, மூக்கு, தொண்டை துறை தலைவர் மதனகோபால் மற்றும் பாரதிமோகன் ஆகியோர் சிறுமிக்கு ‘ஆப்ரேட்டிவ் மைக்ரோஸ்கோப்’ கருவி மூலம் அறுவை சிகிச்சை செய்தனர்.

அதன்பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் யாஸ்மினுக்கு காது கேட்கும் திறன் சரி செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு யாஸ்மின், பிறர் சொல்வதையும் கேட்பதையும் உணர முடிந்தது.

பிறவியிலேயே செவித்திறன் குறைபாட்டுடன் பிறந்த சிறுமிக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அந்த குறைபாட்டை சரி செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், ‘‘சொந்தத்தில் திருமணம் செய்துகொள்வதால், மரபு வழியாகவும், பேறுகாலத்தின்போது ஏற்படும் வைரஸ் தொற்று மற்றும் சில நிகழ்வுகளாலும் செவிப்பறையில் உள்ள காக்கிளியாவின் வளர்ச்சி முழுவதுமாக பாதிக்கப்படுகிறது. இந்த சிறுமிக்கும் இதுபோன்ற பாதிப்புதான் ஏற்பட்டுள்ளது.

இந்த தம்பதிக்கு பிறந்துள்ள முதல் மற்றும் 3-வது குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளன. ஆனால் 2–வது மற்றும் 4–வது குழந்தை யாஸ்மின் ஆகியோர் காது கேட்காமலும், பேச முடியாமலும் உள்ளனர். இந்த அறுவை சிகிச்சையை 1 முதல் 6 வயதிற்குள் தான் செய்யமுடியும். 6 வயதுக்கு மேல் ஆகிவிட்டால் சிகிச்சை செய்தாலும் பலனில்லை. 2–வது குழந்தைக்கு 6 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் அந்த குழந்தைக்கு சிகிச்சை செய்ய முடியவில்லை.

ஆனால் யாஸ்மினுக்கு 4 வயதே ஆவதால் முதல்–அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின்கீழ் ரூ.7 லட்சம் செலவில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இதுபோன்ற அறுவை சிகிச்சை நடப்பது இதுவே முதன்முறையாகும்.

இதுபோன்ற குறைபாடு உள்ளவர்களை நன்கு பரிசோதனை செய்து காது கேட்கும் கருவியை பொருத்தி பரிசோதனை செய்வோம். இதில் பயன் இல்லை என்றால் ‘காக்ளியார் இம்ப்ளான்ட்’ அறுவை சிகிச்சை செய்து காது கேட்க வைப்போம். அதன்படி இந்த குழந்தைக்கு ‘காக்ளியார் இம்ப்ளான்ட்’ அறுவை சிகிச்சை செய்த பின்னரே காதுகேட்கும் திறன் கிடைத்தது.

இந்த சிகிச்சையை தொடர்ந்து யாஸ்மினுக்கு ஒரு வருடம் வரை பேச்சு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சிக்கு பின் மெதுவாக பேச ஆரம்பித்து மற்ற குழந்தைகள் போல யாஸ்மினும் பள்ளிக்கு சென்று நன்றாக படிக்கவும் முடியும்’’ என்றனர்.

No comments:

Post a Comment