FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, February 23, 2016

'சலாம்.. எனது வியத்தகு ரசிகர்'- விக்ரமின் நெகிழ்ச்சி அனுபவம்

23.02.2016
மலையாள தனியார் தொலைக்காட்சி சேனல் விருது வழங்கும் விழாவில், நடிகர் விக்ரமின் அணுகுமுறையால் அவரை நெருங்கிய ரசிகர் மட்டுமின்றி பார்வையாளர்களும் வெகுவாக நெகிழ்ந்தனர்.

கேரளாவில் நடைபெற்ற ஏசியாநெட் தொலைக்காட்சி சேனல் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் நடிகர் விக்ரம். 'ஐ' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் விருது அவருக்கு அளிக்கப்பட்டது.

அந்த விருது வழங்கும் விழாவில் தன்னைக் காண வந்த ரசிகர் ஒருவரை அங்கிருந்த பாதுகாவலர்கள் அப்புறப்படுத்தினர். அப்போது பாதுகாவலர்களிடம் இருந்து அந்த ரசிகரை விடுவித்து, அவருடன் செல்ஃபி எடுத்து அனுப்பி வைத்த வீடியோ தொகுப்பு இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

அங்கிருந்த பார்வையாளர்கள் மட்டுமின்றி, ரசிகர்களும் நடிகர் விக்ரமின் இந்த செயலைப் பாராட்டி தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.

உண்மையில், அந்நிகழ்ச்சியில் நடந்தது என்ன என்பது குறித்து விக்ரம் தரப்பில் விசாரித்த போது, "பாலக்காட்டில் இருக்கும் அந்த ரசிகர் பெயர் சலாம். அவர் விக்ரமின் தீவிரமான ரசிகர். அவர் ஒரு மாற்றுத்திறனாளி. விருது வழங்கும் விழாவில் விக்ரமுக்கு தீவிர பாதுகாப்பு அளிக்கப்பட்டு, முன்வரிசையில் அமர்ந்திருந்தார். அந்த ரசிகர் எப்படி பின்னால் இருந்து அனைவரையும் கடந்து வந்தார் என்பது தெரியவில்லை.

விக்ரமை நெருங்கி கட்டிப் பிடித்துக் கொண்டார். இதனை சற்றும் எதிர்பாராத பாதுகாவலர்கள் சலாமை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்தார்கள். இதனை சற்றும் எதிர்பாராத விக்ரம், பாதுகாவலர்களிடம் பேசி அவரை விடுவித்தார்.

அதனைத் தொடர்ந்து சலாமுடன் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார். செல்ஃபி எடுத்து முடித்தவுடன், விக்ரமை சலாம் கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார். விக்ரமின் இந்தச் செயலுக்கு அவருடன் அமர்ந்திருந்த முன்னணி நடிகர்கள் பலரும் பாராட்டினார்கள்.

இணையத்தில் அந்த வீடியோ வைரலாகி, விக்ரமை 'வியத்தகு நடிகர்' என வெகுவாகக் கொண்டாடி வருவதை அவரிடம் அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு "உண்மையில், எனக்குக் கிடைத்த வியத்தகு ரசிகர் சலாம்தான். வேறு மாநிலத்தில் என் மீது அப்படி அன்பைப் பகிர்ந்த நிகழ்வு எனக்கு புதிது மட்டுமின்றி இதுவரை அனுபவிக்காத ஓர் அற்புதத் தருணம்" என்று சொல்லி, அந்த செல்ஃபீயை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாராம் விக்ரம்.

No comments:

Post a Comment