FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Tuesday, February 23, 2016

'சலாம்.. எனது வியத்தகு ரசிகர்'- விக்ரமின் நெகிழ்ச்சி அனுபவம்

23.02.2016
மலையாள தனியார் தொலைக்காட்சி சேனல் விருது வழங்கும் விழாவில், நடிகர் விக்ரமின் அணுகுமுறையால் அவரை நெருங்கிய ரசிகர் மட்டுமின்றி பார்வையாளர்களும் வெகுவாக நெகிழ்ந்தனர்.

கேரளாவில் நடைபெற்ற ஏசியாநெட் தொலைக்காட்சி சேனல் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் நடிகர் விக்ரம். 'ஐ' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் விருது அவருக்கு அளிக்கப்பட்டது.

அந்த விருது வழங்கும் விழாவில் தன்னைக் காண வந்த ரசிகர் ஒருவரை அங்கிருந்த பாதுகாவலர்கள் அப்புறப்படுத்தினர். அப்போது பாதுகாவலர்களிடம் இருந்து அந்த ரசிகரை விடுவித்து, அவருடன் செல்ஃபி எடுத்து அனுப்பி வைத்த வீடியோ தொகுப்பு இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

அங்கிருந்த பார்வையாளர்கள் மட்டுமின்றி, ரசிகர்களும் நடிகர் விக்ரமின் இந்த செயலைப் பாராட்டி தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.

உண்மையில், அந்நிகழ்ச்சியில் நடந்தது என்ன என்பது குறித்து விக்ரம் தரப்பில் விசாரித்த போது, "பாலக்காட்டில் இருக்கும் அந்த ரசிகர் பெயர் சலாம். அவர் விக்ரமின் தீவிரமான ரசிகர். அவர் ஒரு மாற்றுத்திறனாளி. விருது வழங்கும் விழாவில் விக்ரமுக்கு தீவிர பாதுகாப்பு அளிக்கப்பட்டு, முன்வரிசையில் அமர்ந்திருந்தார். அந்த ரசிகர் எப்படி பின்னால் இருந்து அனைவரையும் கடந்து வந்தார் என்பது தெரியவில்லை.

விக்ரமை நெருங்கி கட்டிப் பிடித்துக் கொண்டார். இதனை சற்றும் எதிர்பாராத பாதுகாவலர்கள் சலாமை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்தார்கள். இதனை சற்றும் எதிர்பாராத விக்ரம், பாதுகாவலர்களிடம் பேசி அவரை விடுவித்தார்.

அதனைத் தொடர்ந்து சலாமுடன் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார். செல்ஃபி எடுத்து முடித்தவுடன், விக்ரமை சலாம் கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார். விக்ரமின் இந்தச் செயலுக்கு அவருடன் அமர்ந்திருந்த முன்னணி நடிகர்கள் பலரும் பாராட்டினார்கள்.

இணையத்தில் அந்த வீடியோ வைரலாகி, விக்ரமை 'வியத்தகு நடிகர்' என வெகுவாகக் கொண்டாடி வருவதை அவரிடம் அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு "உண்மையில், எனக்குக் கிடைத்த வியத்தகு ரசிகர் சலாம்தான். வேறு மாநிலத்தில் என் மீது அப்படி அன்பைப் பகிர்ந்த நிகழ்வு எனக்கு புதிது மட்டுமின்றி இதுவரை அனுபவிக்காத ஓர் அற்புதத் தருணம்" என்று சொல்லி, அந்த செல்ஃபீயை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாராம் விக்ரம்.

No comments:

Post a Comment