FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, February 16, 2016

டாஸ்மாக் விபரீதம்: ‘தண்ணி’ அடிக்க பணம் தர மறுத்த வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளி தாயைக் கொன்ற மகன்

12.02.2016, தருமபுரி:
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் தண்ணி அடிப்பதற்கு பணம் கொடுக்க தாய் மறுத்ததால் அவரைக் கொன்று, காதில் இருந்த தோடை திருடிச் சென்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த சீகலஹள்ளியைச் சேர்ந்த வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளி சின்னம்மாள்(85). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது காது அறுக்கப்பட்டு, காதில் கிடந்த தோடு மர்ம நபர்களால் திருடப் பட்டிருந்தது.
இந்நிலையில், இது குறித்து விசாரித்து வந்த போலீஸாருக்கு, சின்னம்மாளின் மகன் ரங்கசாமி மீது சந்தேகம் ஏற்பட்டது. சந்தேகத்தின் பேரில், காரிமங்கலம் போலீசார் அவரைப் பிடித்து விசாரித்தனர். இதில், தனக்கு குடிக்க பணம் தர மறுத்ததால், தனது தாய் சின்னம்மாள் தூங்கிக் கொண்டிருந்த போது அவரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, அவரது காதை அறுத்து, அரை பவுன் தோடை திருடிச் சென்றதாகக் கூறியுள்ளார். இதை அடுத்து ரங்கசாமியை போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment