FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, February 25, 2016

வீடற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு கட்டி வரும் குடியிருப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி

25.02.2016
வீடற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு கட்டி வரும் குடியிருப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார்.

கடனுதவி

புதுச்சேரி மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கழகம், மாற்றுத்திறனாளிகளுக்கு பலவிதமான கடனுதவிகளை அளித்து அவர்களுடைய சமூக பொருளாதார அந்தஸ்தை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்த கடனுதவி தேசிய ஊனமுற்றோர் நிதி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் இருந்து பெற்று வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கு மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் புதுச்சேரி பகுதியை சேர்ந்த 266 பேருக்கு மளிகை கடை, துணி வியாபாரம், பெட்டி கடை, கணினி மையம், பொது வியாபாரம் மற்றும் பலதரப்பட்ட தொழில்கள் செய்வதற்காக ரூ.2 கோடியே 41 லட்சம் கடனுதவியாக வழங்கப்பட்டது.

இந்த கடனுதவி வழங்கும் விழா முருங்கப்பாக்கம் மல்லிகா திருமண நிலையத்தில் நடைபெற்றது. விழாவிற்கு அமைச்சர் ராஜவேலு தலைமை தாங்கினார். மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக் கழக தலைவர் பாண்டியன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

இடஒதுக்கீடு வழங்கப்படும்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் திட்டங்களை இந்த கழகத்தின் மூலம் மேற்கொண்டு வருகின்றோம். மாற்றுத்திறனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை குறித்த நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு வேலை வாய்ப்பு பெரிய குறையாக உள்ளது. இதை தீர்க்க வேண்டும் என்பது அரசின் எண்ணம். இட ஒதுக்கீட்டை அந்த அளவுக்கு வழங்க முடியுமோ அதை வழங்குமாறு தலைமை செயலருக்கு கூறியுள்ளோம். அவரும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

அரசுப்பணி மட்டுமின்றி சிறிய தொழில் செய்யவும் கடனுதவி அளித்து ஊக்குவித்து வருகின்றோம். 50 சதவீதத்திற்குள் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க முடியும். அவர்கள் கடனுதவி பெற்று தொழில் தொடங்கி வளர்ச்சி பெற வேண்டும். இந்த அரசு திட்டங்களை செம்மையாக செயல்படுத்தி வருகின்றது. மாற்றுத்திறனாளிகள் அரசால் கட்டப்பட்டுவரும் குடியிருப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அரசு கட்டிவரும் குடியிருப்புகளில் வீடற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

விழாவில் சபாநாயகர் சபாபதி, அமைச்சர்கள் பன்னீர்செல்வம், தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment