FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, February 25, 2016

வீடற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு கட்டி வரும் குடியிருப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி

25.02.2016
வீடற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு கட்டி வரும் குடியிருப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார்.

கடனுதவி

புதுச்சேரி மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கழகம், மாற்றுத்திறனாளிகளுக்கு பலவிதமான கடனுதவிகளை அளித்து அவர்களுடைய சமூக பொருளாதார அந்தஸ்தை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்த கடனுதவி தேசிய ஊனமுற்றோர் நிதி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் இருந்து பெற்று வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கு மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் புதுச்சேரி பகுதியை சேர்ந்த 266 பேருக்கு மளிகை கடை, துணி வியாபாரம், பெட்டி கடை, கணினி மையம், பொது வியாபாரம் மற்றும் பலதரப்பட்ட தொழில்கள் செய்வதற்காக ரூ.2 கோடியே 41 லட்சம் கடனுதவியாக வழங்கப்பட்டது.

இந்த கடனுதவி வழங்கும் விழா முருங்கப்பாக்கம் மல்லிகா திருமண நிலையத்தில் நடைபெற்றது. விழாவிற்கு அமைச்சர் ராஜவேலு தலைமை தாங்கினார். மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக் கழக தலைவர் பாண்டியன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

இடஒதுக்கீடு வழங்கப்படும்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் திட்டங்களை இந்த கழகத்தின் மூலம் மேற்கொண்டு வருகின்றோம். மாற்றுத்திறனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை குறித்த நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு வேலை வாய்ப்பு பெரிய குறையாக உள்ளது. இதை தீர்க்க வேண்டும் என்பது அரசின் எண்ணம். இட ஒதுக்கீட்டை அந்த அளவுக்கு வழங்க முடியுமோ அதை வழங்குமாறு தலைமை செயலருக்கு கூறியுள்ளோம். அவரும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

அரசுப்பணி மட்டுமின்றி சிறிய தொழில் செய்யவும் கடனுதவி அளித்து ஊக்குவித்து வருகின்றோம். 50 சதவீதத்திற்குள் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க முடியும். அவர்கள் கடனுதவி பெற்று தொழில் தொடங்கி வளர்ச்சி பெற வேண்டும். இந்த அரசு திட்டங்களை செம்மையாக செயல்படுத்தி வருகின்றது. மாற்றுத்திறனாளிகள் அரசால் கட்டப்பட்டுவரும் குடியிருப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அரசு கட்டிவரும் குடியிருப்புகளில் வீடற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

விழாவில் சபாநாயகர் சபாபதி, அமைச்சர்கள் பன்னீர்செல்வம், தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment