FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Thursday, February 25, 2016

வீடற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு கட்டி வரும் குடியிருப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி

25.02.2016
வீடற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு கட்டி வரும் குடியிருப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார்.

கடனுதவி

புதுச்சேரி மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கழகம், மாற்றுத்திறனாளிகளுக்கு பலவிதமான கடனுதவிகளை அளித்து அவர்களுடைய சமூக பொருளாதார அந்தஸ்தை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்த கடனுதவி தேசிய ஊனமுற்றோர் நிதி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் இருந்து பெற்று வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கு மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் புதுச்சேரி பகுதியை சேர்ந்த 266 பேருக்கு மளிகை கடை, துணி வியாபாரம், பெட்டி கடை, கணினி மையம், பொது வியாபாரம் மற்றும் பலதரப்பட்ட தொழில்கள் செய்வதற்காக ரூ.2 கோடியே 41 லட்சம் கடனுதவியாக வழங்கப்பட்டது.

இந்த கடனுதவி வழங்கும் விழா முருங்கப்பாக்கம் மல்லிகா திருமண நிலையத்தில் நடைபெற்றது. விழாவிற்கு அமைச்சர் ராஜவேலு தலைமை தாங்கினார். மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக் கழக தலைவர் பாண்டியன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

இடஒதுக்கீடு வழங்கப்படும்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் திட்டங்களை இந்த கழகத்தின் மூலம் மேற்கொண்டு வருகின்றோம். மாற்றுத்திறனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை குறித்த நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு வேலை வாய்ப்பு பெரிய குறையாக உள்ளது. இதை தீர்க்க வேண்டும் என்பது அரசின் எண்ணம். இட ஒதுக்கீட்டை அந்த அளவுக்கு வழங்க முடியுமோ அதை வழங்குமாறு தலைமை செயலருக்கு கூறியுள்ளோம். அவரும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

அரசுப்பணி மட்டுமின்றி சிறிய தொழில் செய்யவும் கடனுதவி அளித்து ஊக்குவித்து வருகின்றோம். 50 சதவீதத்திற்குள் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க முடியும். அவர்கள் கடனுதவி பெற்று தொழில் தொடங்கி வளர்ச்சி பெற வேண்டும். இந்த அரசு திட்டங்களை செம்மையாக செயல்படுத்தி வருகின்றது. மாற்றுத்திறனாளிகள் அரசால் கட்டப்பட்டுவரும் குடியிருப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அரசு கட்டிவரும் குடியிருப்புகளில் வீடற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

விழாவில் சபாநாயகர் சபாபதி, அமைச்சர்கள் பன்னீர்செல்வம், தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment