FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Tuesday, February 23, 2016

'அரசு தேர்வுகளை கடினமாக யாரும் கருத வேண்டாம்'

23.02.2016,
ஈக்காட்டுத்தாங்கல் : ''அரசு தேர்வுகளை கடினமாக யாரும் கருத வேண்டாம்; கடின உழைப்பு இருந்தால் யாராலும் வெற்றி பெற முடியும்,'' என, தமிழ்நாடு மாநில அரசு மாற்றுத்திறனாளிகள் ஆணையர் டாக்டர் மணிவாசன் பேசினார்.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகன் கூட்டமைப்பு அறக்கட்டளை சார்பில், இலவச அரசு தேர்வு பயிற்சி மையம் திறப்பு விழா நேற்று ஈக்காட்டுத்தாங்களில் நடைபெற்றது. பயிற்சி மையத்தை ரோட்டரி சங்க மாவட்ட கவர்னர் சி.ஆர்.ராஜு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில அரசு மாற்றுத்திறனாளிகள் ஆணையர் டாக்டர் மணிவாசன் பேசுகையில், ''அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகள் ஆண்டுதோறும் அதிகளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். அரசுத்தேர்வுகளை கடினமாக கருத வேண்டாம். கடின உழைப்பு இருந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்,'' என்றார்.

இலவச பயிற்சி மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வார இறுதி நாட்களில் டி.என்.பி.எஸ்சி., - ஆர்.ஆர்.பி., வங்கித் தேர்வுக்களுக்கான பயிற்சி வகுப்புகளும் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு பயிற்சிகளும் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment