FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, February 23, 2016

'அரசு தேர்வுகளை கடினமாக யாரும் கருத வேண்டாம்'

23.02.2016,
ஈக்காட்டுத்தாங்கல் : ''அரசு தேர்வுகளை கடினமாக யாரும் கருத வேண்டாம்; கடின உழைப்பு இருந்தால் யாராலும் வெற்றி பெற முடியும்,'' என, தமிழ்நாடு மாநில அரசு மாற்றுத்திறனாளிகள் ஆணையர் டாக்டர் மணிவாசன் பேசினார்.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகன் கூட்டமைப்பு அறக்கட்டளை சார்பில், இலவச அரசு தேர்வு பயிற்சி மையம் திறப்பு விழா நேற்று ஈக்காட்டுத்தாங்களில் நடைபெற்றது. பயிற்சி மையத்தை ரோட்டரி சங்க மாவட்ட கவர்னர் சி.ஆர்.ராஜு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில அரசு மாற்றுத்திறனாளிகள் ஆணையர் டாக்டர் மணிவாசன் பேசுகையில், ''அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகள் ஆண்டுதோறும் அதிகளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். அரசுத்தேர்வுகளை கடினமாக கருத வேண்டாம். கடின உழைப்பு இருந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்,'' என்றார்.

இலவச பயிற்சி மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வார இறுதி நாட்களில் டி.என்.பி.எஸ்சி., - ஆர்.ஆர்.பி., வங்கித் தேர்வுக்களுக்கான பயிற்சி வகுப்புகளும் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு பயிற்சிகளும் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment