FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, February 23, 2016

'அரசு தேர்வுகளை கடினமாக யாரும் கருத வேண்டாம்'

23.02.2016,
ஈக்காட்டுத்தாங்கல் : ''அரசு தேர்வுகளை கடினமாக யாரும் கருத வேண்டாம்; கடின உழைப்பு இருந்தால் யாராலும் வெற்றி பெற முடியும்,'' என, தமிழ்நாடு மாநில அரசு மாற்றுத்திறனாளிகள் ஆணையர் டாக்டர் மணிவாசன் பேசினார்.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகன் கூட்டமைப்பு அறக்கட்டளை சார்பில், இலவச அரசு தேர்வு பயிற்சி மையம் திறப்பு விழா நேற்று ஈக்காட்டுத்தாங்களில் நடைபெற்றது. பயிற்சி மையத்தை ரோட்டரி சங்க மாவட்ட கவர்னர் சி.ஆர்.ராஜு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில அரசு மாற்றுத்திறனாளிகள் ஆணையர் டாக்டர் மணிவாசன் பேசுகையில், ''அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகள் ஆண்டுதோறும் அதிகளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். அரசுத்தேர்வுகளை கடினமாக கருத வேண்டாம். கடின உழைப்பு இருந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்,'' என்றார்.

இலவச பயிற்சி மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வார இறுதி நாட்களில் டி.என்.பி.எஸ்சி., - ஆர்.ஆர்.பி., வங்கித் தேர்வுக்களுக்கான பயிற்சி வகுப்புகளும் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு பயிற்சிகளும் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment