FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, February 15, 2016

“மாற்றுத்திறனாளி மாணவர்களை பொறுப்பாக கையாள வேண்டும்” ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை


15.02.2016
மாற்றுத்திறனாளி மாணவர்களை பொறுப்பாக கையாள வேண்டும் என ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி அறிவுறுத்தி உள்ளார்.

திறன் மேம்பாட்டு பயிற்சி

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஏராளமான மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். குறிப்பாக 9, 10-ம் வகுப்பில் மட்டும் 236 மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த நிலையில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தலைமை தாங்கி பேசினார். மாவட்ட கல்வி அலுவலர் மாலாமணிமேகலை, அனைவருக்கும் இடைநிலை கல்வி உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சேசுராஜா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினர்.

முன்னதாக அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கத்தின் திண்டுக்கல் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுரளிகிருஷ்ணன் வரவேற்றார். இதில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். அவர்கள் ஓவியம் வரைந்தும், நாடகம் நடித்தும் அசத்தினர். முடிவில் பழனி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா நன்றி கூறினார்.

பொறுப்பாக கையாள வேண்டும்

இந்த கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி பேசும்போது, ‘மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் படிப்பின் முக்கியத்துவத்தை ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும். அவர்கள் இடையில் கல்வியை நிறுத்தி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பள்ளி, கல்வித்துறை அவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம், வசதிகள், வாய்ப்புகளை கூற வேண்டும். அவர்களை பொறுமையாகவும், பொறுப்பாகவும் கையாள வேண்டும். அவர்களை கல்வியில் முன்னேற்றுவது ஆசிரியர்களின் கடமையாகும். அவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்’ என்றார்.

No comments:

Post a Comment