FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Monday, February 15, 2016

“மாற்றுத்திறனாளி மாணவர்களை பொறுப்பாக கையாள வேண்டும்” ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை


15.02.2016
மாற்றுத்திறனாளி மாணவர்களை பொறுப்பாக கையாள வேண்டும் என ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி அறிவுறுத்தி உள்ளார்.

திறன் மேம்பாட்டு பயிற்சி

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஏராளமான மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். குறிப்பாக 9, 10-ம் வகுப்பில் மட்டும் 236 மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த நிலையில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தலைமை தாங்கி பேசினார். மாவட்ட கல்வி அலுவலர் மாலாமணிமேகலை, அனைவருக்கும் இடைநிலை கல்வி உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சேசுராஜா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினர்.

முன்னதாக அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கத்தின் திண்டுக்கல் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுரளிகிருஷ்ணன் வரவேற்றார். இதில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். அவர்கள் ஓவியம் வரைந்தும், நாடகம் நடித்தும் அசத்தினர். முடிவில் பழனி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா நன்றி கூறினார்.

பொறுப்பாக கையாள வேண்டும்

இந்த கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி பேசும்போது, ‘மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் படிப்பின் முக்கியத்துவத்தை ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும். அவர்கள் இடையில் கல்வியை நிறுத்தி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பள்ளி, கல்வித்துறை அவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம், வசதிகள், வாய்ப்புகளை கூற வேண்டும். அவர்களை பொறுமையாகவும், பொறுப்பாகவும் கையாள வேண்டும். அவர்களை கல்வியில் முன்னேற்றுவது ஆசிரியர்களின் கடமையாகும். அவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்’ என்றார்.

No comments:

Post a Comment