FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, February 15, 2016

“மாற்றுத்திறனாளி மாணவர்களை பொறுப்பாக கையாள வேண்டும்” ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை


15.02.2016
மாற்றுத்திறனாளி மாணவர்களை பொறுப்பாக கையாள வேண்டும் என ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி அறிவுறுத்தி உள்ளார்.

திறன் மேம்பாட்டு பயிற்சி

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஏராளமான மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். குறிப்பாக 9, 10-ம் வகுப்பில் மட்டும் 236 மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த நிலையில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தலைமை தாங்கி பேசினார். மாவட்ட கல்வி அலுவலர் மாலாமணிமேகலை, அனைவருக்கும் இடைநிலை கல்வி உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சேசுராஜா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினர்.

முன்னதாக அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கத்தின் திண்டுக்கல் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுரளிகிருஷ்ணன் வரவேற்றார். இதில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். அவர்கள் ஓவியம் வரைந்தும், நாடகம் நடித்தும் அசத்தினர். முடிவில் பழனி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா நன்றி கூறினார்.

பொறுப்பாக கையாள வேண்டும்

இந்த கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி பேசும்போது, ‘மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் படிப்பின் முக்கியத்துவத்தை ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும். அவர்கள் இடையில் கல்வியை நிறுத்தி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பள்ளி, கல்வித்துறை அவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம், வசதிகள், வாய்ப்புகளை கூற வேண்டும். அவர்களை பொறுமையாகவும், பொறுப்பாகவும் கையாள வேண்டும். அவர்களை கல்வியில் முன்னேற்றுவது ஆசிரியர்களின் கடமையாகும். அவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்’ என்றார்.

No comments:

Post a Comment