FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, February 15, 2016

“மாற்றுத்திறனாளி மாணவர்களை பொறுப்பாக கையாள வேண்டும்” ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை


15.02.2016
மாற்றுத்திறனாளி மாணவர்களை பொறுப்பாக கையாள வேண்டும் என ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி அறிவுறுத்தி உள்ளார்.

திறன் மேம்பாட்டு பயிற்சி

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஏராளமான மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். குறிப்பாக 9, 10-ம் வகுப்பில் மட்டும் 236 மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த நிலையில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தலைமை தாங்கி பேசினார். மாவட்ட கல்வி அலுவலர் மாலாமணிமேகலை, அனைவருக்கும் இடைநிலை கல்வி உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சேசுராஜா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினர்.

முன்னதாக அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கத்தின் திண்டுக்கல் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுரளிகிருஷ்ணன் வரவேற்றார். இதில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். அவர்கள் ஓவியம் வரைந்தும், நாடகம் நடித்தும் அசத்தினர். முடிவில் பழனி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா நன்றி கூறினார்.

பொறுப்பாக கையாள வேண்டும்

இந்த கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி பேசும்போது, ‘மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் படிப்பின் முக்கியத்துவத்தை ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும். அவர்கள் இடையில் கல்வியை நிறுத்தி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பள்ளி, கல்வித்துறை அவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம், வசதிகள், வாய்ப்புகளை கூற வேண்டும். அவர்களை பொறுமையாகவும், பொறுப்பாகவும் கையாள வேண்டும். அவர்களை கல்வியில் முன்னேற்றுவது ஆசிரியர்களின் கடமையாகும். அவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்’ என்றார்.

No comments:

Post a Comment