FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Monday, February 15, 2016

“மாற்றுத்திறனாளி மாணவர்களை பொறுப்பாக கையாள வேண்டும்” ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை


15.02.2016
மாற்றுத்திறனாளி மாணவர்களை பொறுப்பாக கையாள வேண்டும் என ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி அறிவுறுத்தி உள்ளார்.

திறன் மேம்பாட்டு பயிற்சி

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஏராளமான மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். குறிப்பாக 9, 10-ம் வகுப்பில் மட்டும் 236 மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த நிலையில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தலைமை தாங்கி பேசினார். மாவட்ட கல்வி அலுவலர் மாலாமணிமேகலை, அனைவருக்கும் இடைநிலை கல்வி உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சேசுராஜா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினர்.

முன்னதாக அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கத்தின் திண்டுக்கல் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுரளிகிருஷ்ணன் வரவேற்றார். இதில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். அவர்கள் ஓவியம் வரைந்தும், நாடகம் நடித்தும் அசத்தினர். முடிவில் பழனி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா நன்றி கூறினார்.

பொறுப்பாக கையாள வேண்டும்

இந்த கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி பேசும்போது, ‘மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் படிப்பின் முக்கியத்துவத்தை ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும். அவர்கள் இடையில் கல்வியை நிறுத்தி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பள்ளி, கல்வித்துறை அவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம், வசதிகள், வாய்ப்புகளை கூற வேண்டும். அவர்களை பொறுமையாகவும், பொறுப்பாகவும் கையாள வேண்டும். அவர்களை கல்வியில் முன்னேற்றுவது ஆசிரியர்களின் கடமையாகும். அவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்’ என்றார்.

No comments:

Post a Comment